Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை GTN ற்காக – சுனந்த தேசப்பிரிய:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை GTN ற்காக – சுனந்த தேசப்பிரிய:

ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை விளங்குகிறது. கடந்த மூன்று வருடத்துள் இலங்கையில் ஊடகம் எதிர்பார்த்திருக்காத நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் பலாத்காரமாக மூடவைக்கப்பட்டுள்ளன. தீ வைக்கப்பட்டுள்ளன. தேசத்திறிகு எதிரானவை என அடையாளமிடப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டிலிருந்து 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மிக அண்மைய சம்பவமாக 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பட்டப்பகலில் துரோகத்ததனமாகப் படுகொலை செய்யபப்பட்ட சம்பவம் அமைகிறது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஊடகங்களுக்கெதிரான அழுத்தம் கடந்த மாதத்தில் அதிகரித்து வந்திருக்கிறது. ஜனவரி 6ஆம் திகதி எம்.ரி.வி, எம்.பி.சி எனப்படும் பிரபல்யமான தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டிருந்தது. அதற்கு இரு நாட்களின் பின்னர் ஒரு கோஷ்டியினர் அந்தத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையத்தினுள் உட்புகுந்து கட்டுப்பாட்டு அறையை துவம்சம் செய்து விட்டு அதற்கு நெருப்பு வைத்து விட்டிருந்தனர். அதற்கு இரு நாட்களின் பின்னர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.

ஒரு வாரத்திற்குள்ளாகவே அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய ஹெகலிய ரம்புக்வெல சண்டே லீடர் மற்றும் எம்.ரி.வி, எம்.பி.சி நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான விடயங்களை வெளியிடுவதில் அரசாங்கம் வழங்கிய ஆலோசனைகளைக் கேட்பதில் அக்கறையற்றிருந்தன எனக் குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்த பிரபல்யமான ஊடகச் செயற்பாட்டாளர்கள் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இனந்தெரியாத கோஷ்டியினர் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

இரண்டு வாரங்களின் பின்னர் றிவிர என்ற சிங்கள வார இதழின் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி அவர் மீது விழுந்து அவரைக் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்தார்.

ஜனவரி 10ஆம் திகதி சிங்கள மற்றும் ஆங்கில இணையத்தளமான லங்கா டிசென்ட் டொட் கொம் தானாகவே தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அது தனது இறுதி ஆசிரியர் தலையங்கத்தில் 'கருணையுள்ள இந்தச் சிங்கள பௌத்த நிலம் வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ளவில்லை. அவர்கள் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள விரும்பவில்லை. மரணத்திலிருந்தே கற்க விரும்புகிறார்கள். இரக்கமும் கருணையும் கொண்ட இத்தேசத்தில்; மாறுபட்ட கருத்துக்கள் ஜனநாயக உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனுபவிக்கப்படும் ஒரு நாளில் நாங்கள் மீளவும் வருவோம். அது வரை சென்று வருகிறோம்.' எனக் குறிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதல்களின் எழுச்சி காரணமாக 11 சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். 7 பேர் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். 2006 இன் முற்பகுதியிலிருந்து இதுவரை 30 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவான மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்காற்றிய தனது முதலாவது பேச்சில் ஊடகங்கள் போருக்கு எதிராக புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால் அரசாங்கம் அதற்கான இடத்தை ஒரு போதும் வழங்காது. இந்தச் செய்தி தரும் செய்தி தெளிவானது. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ஒரேயொரு உண்மை மட்டும் தான் உண்டு. அது என்னவென்றால் தேசியபாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அல்லது அது போன்ற இடங்களிலிருந்து வரும் செய்தி மட்டும் தான் உண்மையானது என்பது.

2006 இல் அரசாங்கம் பல தடவைகள் தணிக்கையைக் கொண்டு வர முயற்சி செய்தது. பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களுக்கு எழுதிய கடிதமொன்றில் 'உங்களுடைய நிறுவனத்தாலோ அல்லது உங்களுடைய தகவல் மூலங்களிலிருந்தோ பெறப்படும் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் குறித்த எந்தச் செய்தியாயினும் அவை பிரசுரிக்கப்படவோ அல்லது ஒலி ஒளி பரப்பப்படவோ முன்னர் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும்.'

இறுதியாக 2007 இல் நாட்டின் இராணுவ நடவடிக்கைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதைத் தடுப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டது. அதன்படி அவை தொடர்பான செய்திகளை வெளியிடுவது சட்டரீதியற்றதாகும். திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகள் குறித்தோ இராணுவ நடவடிக்கைகள் குறித்தோ பொலிஸாருக்கோ அல்லது படையினருக்கோ தேவையானவை எனக்கருதி வாங்கத் திட்டமிடப்பட்டிருக்கும் இராணுவ தளபாடங்கள் குறித்தோ செய்திகளையும் தகவல்களையும் வெளியிடுவது சட்டபூர்வமற்றதொன்றாகும்.' இந்தச் சட்ட விதிகளின் கீழ் இத்தணிக்கை விதியை மீறும் பத்திரிகை ஆசிரியர்கள் ஐந்து வருடங்கள் வரை சிறை வைக்கப்பட முடியும். அனால் இதற்கு எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக இதனை திரும்பப் பெற அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.

திட்டமிட்டு மௌனமாக்கப்பட்ட தமிழ் ஊடகத்துறையானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லைகள் படிப்படியாகச் சுருங்கி வந்ததற்கான ஒரு மிக முக்கியமான குறிகாட்டியாக இருக்கிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் ஊடகவியலாளர்கள் நாளாந்தம் பாதுகாப்புப் படையினராலும் ஆயுதக்குழுக்களாலும் அச்சுறுத்தலுக்குள்ளாவதும் மிரட்டப்படுவதும் தொடர்ந்து வருகிறது. சில பத்திரிகைகள் குறிப்பாக கிழக்கில் விற்க அனுமதிக்கப்பட்டாமல் தடுக்கப்பட்டு பறித்து எறியப்பட்டிருக்கிறது. செய்திப் பத்திரிகை நிறுவனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குண்டு வீசப்பட்டுள்ளன.

2006இலிருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மீதான இம்சைகள் அதிகரிக்கவாரம்பித்தன. படுகொலைகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தணிக்கை என்பன அமுலாக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு உலகில் அபாயம் நிறைந்த பிரதேசங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் ஆனது. ஆகக் குறைந்தது 3 ஊடகவியலாளர்கள், உட்பட 11 ஊடகப் பணியாளர்கள் 2006 இன் மே மாதத்திலிருந்து இதுவரை அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு ஊடகவியலாளர் உட்பட 3 ஊடகப்பணியாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

அண்மைய பத்திரிகை நேர்காணல் ஒன்றில் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் சொல்லியிருக்கிறார். 'நான் ஏழு பேரை இழந்திருக்கிறேன். அதில் ஏழு பேர் இறந்து போயிருக்கிறார்கள். இருவர் காணாமல் போயுள்ளார்கள். ஆனால் நாங்கள் இன்னமும் ஊடக சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். யாழ்ப்பாணத் தினசரியான உதயன் பத்திரிகையின் ஆசிரியரும் செய்தியாசிரியரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களது பாதுகாப்புக் கருதி உதயன் அலுவலகத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த மூன்று வருடங்களில் பல தடவைகள் இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்;பாணை விடுத்து சில விடயங்கள் தொடர்பாக தணிக்கை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர். உதாரணமாக வே.பிரபாகரனின் பேச்சு, மாணவர்களின் ஆர்ப்பாட்டம், கடத்தல்கள், மற்றும் ஊடகவியலாளர் வெளிப்படுத்தக் கூடாது எனப் படையினர் கருதும் விடயங்கள் என்பவற்றை வெளியிட வேண்டாம் எனப் பணிக்கப்பட்டனர். இது தமிழ் ஊடகத்துறையை செயற்பட முடியாத ஒரு சூழலுக்குள் தள்ளியுள்ளது. ஏனெனில் விடுதலைப்புலிகள் அவ்வாறான விடயங்களை வெளியிடுமாறு வற்புறுத்துகின்றனர். (விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மிக நுட்பமான முறையில் இதனைச் செய்கின்றனர். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் சுதந்திரமான எந்த ஊடகத்தையும் அவர்கள் ஒரு போதும் அனுமதித்ததில்லை. அத்தோடு மாறுபட்ட குரல்களையும் கொடூரமாக ஒடுக்கி வருகின்றனர்.)

கடந்த மூன்று வருடத்துள் சிறிலங்கா முழுவதும் 20 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அவசரகாலச்சட்டத்தின் கீழ் 4 பெண் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் தற்கொலைக் கொலையாளிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டனர். மிகப் பிரபல்யமான தமிழ் ஊடகவியலாளரான ஜே.எஸ்.திசநாயகம், பயிற்சிப் பத்திரிகையாளரான வளர்மதி, மற்றும் அவருடைய துணைவரும் அச்சக உரிமையாளருமான வே.ஜசிகரன் அகியோர் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

2008 இல் ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஆவணப்படுத்தியவை இவை.

• ஊடகவியலாளர்கள் படுகொலை இரண்டு.

• ஊடகவியலாளர் மீதான மரண அச்சுறுத்தல் அல்லது பயங்கரமான தாக்குதல் சம்பவங்கள் 50.

• இனந்தெரியாத நபர்களால் ஊடகவியலாளர்; கடத்தப்பட்டு மிக மோசமான உளவியல் மற்றும் உடலியல் மீதான சித்திரவதைச் சம்பவம் ஒன்று.

• ஊடகத்துறைப் பணி சம்பந்தமாக இனந்தெரியாத நபர்களால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 16.

• ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் 12.

• ஊடக அலுவலகங்கள் அல்லது ஊடகத்துடன் தொடர்புடைய விநியோக வாகனங்கள் தாக்கப்பட்டது அல்லது சூறையாடப்பட்டது. (கொழும்பிலிருந்து வெளியான செய்திப்பத்திரிகையின் அலுவலகம் முற்றாக அழிக்கப்பட்டது உட்பட) 3 சம்பவங்கள்.

• பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சில ஊடகவியலாளர்களின் பெயர் குறிப்பிட்டுத் தாக்கியது உட்பட ஊடகவியலாளர்கள் வாய்மூலமாக எச்சரிக்கப்பட்ட சம்பவங்கள் டசின் கணக்கானவை.

• நேரடி உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரிய சம்பவங்கள் நாட்டினுள்ளேயே இடம் பெயர்ந்த சம்பவங்கள் என எல்லாமாக 18

அதிகாரத்திலுள்ளவர்கள் எல்லா மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் தமது கையில் எடுத்துக் கொண்டு ஊடகத்துறைக்கு எதிரான போரைப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். இது ஊடகத்துறையை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்காது.

இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்ளுடைய அமைப்புக்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

உடனடியாகவே ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல், தொந்தரவு செய்தல், கடத்துதல், தாக்குதல் என்பவற்றை நிறுத்துதல் வேண்டும்.

கொல்லப்பட்ட ஊடகத்துறைப் பணியாளர்களது கொலை, அச்சுறுத்தப்பட்ட ஊடகப்பணியாளர்களது அச்சுறுத்தல் என்பவை தொடர்பிலும் அவர்களது குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பிலும் வெளிப்படையான ஒரு விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

பொதுப்படையாக அவதூறு செய்யும் பயங்கரமான பொறுப்பற்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஏற்கெனவே ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தும் எல்லாவகையான சட்ட வடிவங்களையும் உடனடியாக திரும்பப் பெறல் வேண்டும்.

இன்று இலங்கை ஒரு குறுக்குத் தெருவில் நிற்கிறது. மரபுரீதியான இராணுவமாக விடுதலைப்புலிகளின் இருப்பு விரைவில் இல்லாது போகப் போகிறது. இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கு எங்கணும் தனது மேலாண்மையை நிறுவப் போகிறது. இலங்கையின் தலையெழுத்தை இப்போதே எதிர்வு கூறுவது சாத்தியமில்லைத்தான். அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. மாறுபட்ட கருத்தாடல்களும் சுதந்திரமான உரையாடல்களும் இந்தப் புள்ளியில் அரசியல் இராணுவ வழிமுறையின் பாற்பட்ட நிகழ்ச்சி நிரல்களில்ல. நாங்கள் அதற்காகப் பொறுத்திருக்க வேண்டும். கேள்வி என்னவென்றால் எவ்வளவு காலத்திற்கு?

மொழியாக்கம் சங்கரன் கௌதமன் GTNற்க்காக:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.