Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நிலைமை குறித்து நோர்டிக் நாடுகள் கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிலைமை குறித்து நோர்டிக் நாடுகள் கவலை

வீரகேசரி இணையம் 2ஃ10ஃ2009 2:37:39 Pஆ - இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இலங்கையின் மனிதாபிமான நிலை குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

நோர்டிக் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றதன் பின்னர் ஐந்து நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களும் இணைந்து இலங்கையின் இன்றைய நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலைமை குறித்து இணைத் தலைமை நாடுகள் கடந்த பெப்ரவரி 3ஆம்திகதி வெளியிட்டுள்ள அறிக்கையை இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். மனித இழப்புஇ ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்திருப்பதும்இ இரண்டரை லட்சம் வரையிலான மக்கள் போர் பகுதிக்குள் அகப்பட்டுள்ளதுமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து தாம் ஆழ்ந்த கவலையை வெளியிடுவதாக மேற்படி அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று தாம் மீள வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களையும் நோயுற்றவர்களையும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றவும்இ அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவும்இ அவர்களை போர் நடைபெறும் இடங்களிலிருந்து வெளியேற்றவும் தற்காலிகமான போர் நிறுத்தக் காலம் ஒன்று அவசியம் எனவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

போர் நடைபெறும் பகுதிகளிலிருந்து படுகாயமடைந்தவர்களையும் நோயுற்றவர்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கும்இ போர் நடைபெறும் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதற்கும் தற்காலிக போர் நிறுத்தக் காலப்பகுதி அவசியமானது. மக்கள் போர்ப் பிராந்தியத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்பதோடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அத்தோடுஇ சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் ஐக்கியநாடுகள் என்பவற்றில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட ஏனையோரின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

அயர்லாந்து கோரிக்கை

இலங்கை அரசாங்கப் படையினருக்கும்இ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்கல் காரணமாக சுமார் 250இ000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மைக்கல் மார்டீன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் சிவிலியன்களது சுதந்திர இடம்பெயர்வுக்குத் தடையேற்படுத்தி உள்ளதாகவும்இ சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்டு வரும் சகல தரப்பினரும் தமிழ்ச் சிவிலியன்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிவிலியன்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ச்சியாக கிடைக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நு-அயடை வழ ய கசநைனெ

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=11073

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.