Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி

Featured Replies

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஈழத்தமிழர்களை காக்கக்கோரி வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை மனிதசங்கிலி நடத்துவது.

2. மதுரையில் 24ஆம் தேதியும், கோவை, திருச்சி, பாண்டி, சேலம், தூத்துக்குடியில் 19ஆம் தேதி மக்கள் திரள் பேரணி நடத்துவது.

3. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மனு கொடுப்பது.

4. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இமெயில் அனுப்புவது.

5. ஈழத்தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் மரண சாசனத்தை பல லட்சம் பிரதிகள் எடுத்தும், சி.டி.யில் பதிவு செய்தும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு விநியோகம் செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் பேசிய இயக்கத் தலைவர்கள், தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...2&Itemid=68

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தீர்மானங்கள் எந்தத்தடங்கல்களுமின்றி நிறைவேற்றப்படட்டும்.

  • தொடங்கியவர்

ஈழத்தமிழருக்காக கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரிமுனைவரை மனித சங்கிலி: திருமா

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் எதிர்வரும் 17 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியலிருந்து குமரிமுனை வரையிலான மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதில் அனைவரும் தவறாது பங்கேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்தே தீருவோம் எனும் வெறித்தனத்தோடு சிங்கள இன வெறியர்கள் நடத்தும் போரில், வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத கொடூரமான மனித அவலங்களை சிங்கள இனவெறி அரசு அரங்கேற்றி வருகிறது. 24 மணி நேரமும் இடைவிடாமல் பல்வேறு முனைகளிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி அப்பாவித்தமிழ் மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

சர்வதேச மரபுகளையோ மனித நேய அணுகுமுறைகளையோ துளியும் மதிக்காமல் அனைத்து வகை அத்து மீறல்களையும் சிங்களப்படையினர் செய்து வருகின்றனர்.

தமிழ் மக்களையே புலிகள் கொன்றார்கள் என்று அவதூறு பரப்பி மனித உரிமை ஆர்வலர் களுக்கிடையில் புலிகள் மீது வெறுப்பை விதைக்க வேண்டும் என்பதுதான் சிங்கள அரசின் நோக்கமாகும். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகள் வெளிப்படையாக இனவெறியாட்டத்தை விமர்சித்தும் கண்டித்தும் குரல் கொடுத்துள்ள வேளையில் ஐ.நா. பேரவையும் இந்த மனித அவலங்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.

சிங்கள அரசைப் பணிய வைக்கும் பொறுப்பும் கடமையும் அதற்குரிய வலிமையும் இந்திய அரசுக்கே உண்டு என உலகத் தமிழினம் இன்னும் நம்புகிறது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி அண்மையில் கூறியிருப்பதைப் போல தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு எனும் அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தை முன் வைத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்களை ஒன்றி ணைந்த தமிழர் பகுதி என்று அறிவிப்பதற்கும் போரை நிறுத்துவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் உரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்ய முன்வர வேண்டும்.

சிங்கள அரசைப் பணிய வைத்து தமிழீழத்தில் ஓர் அமைதிச் சூழலையும் அரசியல் தீர்வையும் கொண்டு வர இந்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து சிங்கள இனவெறிப் போரை நிறுத்த இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் எதிர்வரும் 17 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியலிருந்து குமரிமுனை வரையிலான மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதில் அனைவரும் தவறாது பங்கேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Edited by தேசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.