Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் நாட்டில் இன்று - செய்தி தொகுப்புகள்

Featured Replies

டெல்லியில் வைகோ உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்வானி வாழ்த்திப் பேச்சு:

vaiko_20090213005.jpg

உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.

பின்னர் வைகோ பேசுகையில்,

பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.

1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.

வைகோ - ராஜ்நாத் சிங் சந்திப்பு

முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

குடியரசுத் தலைவர் உரை: பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் நேற்று நடந்த பாராளுமன்ற இறுதி கூட்டத்தொடரில் ‘மத்திய அரசு இலங்கைவாழ் அப்பாவித் தமிழர்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வருகிறது என்ற விபரங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ‘இலங்கைப் பிரச்னையில், அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை மத்திய அரசு வழிமொழிந்து இருக்கிறது’ என்று குற்றம்சாட்டி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் போர் நிறுத்தம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு முழுமையானதாக இல்லை.

ஏற்கெனவே, இலங்கை அதிபர் ராஜபக்சே எடுத்துள்ள நிலைப்பாட்டினையே இந்திய குடியரசுத் தலைவரும் வழி மொழிந்து இருக்கிறார். ஈழத் தமிழர்களின் பாதுகாவலர்களாக விடுதலைப்புலிகள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களும் ஆயுதங்களை கீழே வைத்து விட்டால் அந்த மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுவிடும்.

தமிழினப் படுகொலையை நடத்த இலங்கை ராணுவத்துக்கு வசதியாகி விடும். இலங்கை ராணுவத்தால் மருத்துவமனைகள் தாக்கப்பட்டு, மருத்துவர்களும், நர்சுகளும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

எனவே, உடனடியாக மருத்துவர்கள் குழு ஒன்றை அனுப்பி உதவ வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் வேண்டும்: மாநிலங்களவையில் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் இன்று அனைத்து கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கேள்வி நேரத்துக்குப் பிறகு குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கை அரசு மீது சரமாரியாகக் குற்றம்சாட்டியதோடு, இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு அளித்துவரும் உதவிகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வி.மைத்ரேயன் (அதிமுக)

இலங்கையில் போர் நிறுத்தற்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)

இலங்கையில் நடப்பது படுகொலை. அது அங்கு தினமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.இனிமேலாவது இலங்கை மீதான கொள்கையை இந்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இது இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு பிரச்னை என்று கருதிவிட முடியாது.

திருநாவுக்கரசர் (பாஜக)

இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுகிறது. அதற்கு இந்திய அரசு துணைபோகிறது. இலங்கையில் அனைத்து விதங்களிலும் மனித உரிமை மீறல் நடைபெற்று வருகிறது.

இது மிகவும் கவலையளிக்கிறது. இந்திய அரசு அளித்துவரும் ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.

அங்குள்ள தமிழ் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறிவிட்டது. இனியும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...9&Itemid=68

Edited by தேசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.