Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ மேலாதிக்கப் போக்குக்கு கிடைத்ததே இத்தேர்தல் வெற்றி

Featured Replies

எதிர்பார்க்கப்பட்டபடி மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றியீட்டியிருக்கின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் மற்றும் ஜே.வி.பியும் கூட எதிர்பார்க்கப்பட்டபடியே மண் கவ்வியுள்ளன.

வடக்கு யுத்த வெற்றியின் தொடர்ச்சியாகத் தேர்தல் வெற்றியும் அரசுக்குக் கிட்டியிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

தென்னிலங்கைத் தரப்பின் வசனங்களில் கூறுவதா யின்,"புலிகளின் பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு ராஜபக்ஷ அரசு எடுத்திருக்கும் கடும் போக்குக்கு இலங்கை மக்கள் வழங்கிய ஏகோபித்த அங்கீகாரம் இது" என்று குறிப்பிடலாம்.

ஆனால், ஈழத் தமிழரின் இனத்துவ ஆன்மாவில் ஆழ ஊறிக் கிடக்கும் தேசம், தேசியம், சுயநிர்ணயம், இனத் துவ உரிமைகள் போன்ற சிந்தனைக் கிடக்கைகளை இரா ணுவ வல்லாதிக்கப் பலம் மூலம் சிதைத்து, துடைத்து, அடியோடு இல்லாது அழித்தொழிக்கும் தென்னிலங்கை பௌத்த, சிங்கள ஆதிக்கத் திமிருக்கு தெற்கு மக்களின் ஒருசாரார் கொடுத்த அங்கீகாரம்தான் இது என்பது வெள்ளிடைமலை.

ஈழத் தமிழர்களின் ஆயுத பலத்துக்கு எதிரான தெற் கின் யுத்த வெற்றிகளைத் தனது அரசியல் ஆதாயமாக மாற்றும் மஹிந்த அரசின் தந்திரோபாயத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று கூறுவதும் முற்றிலும் சரியானதே.

வடக்கு, கிழக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவ நட வடிக்கைகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டு அதில் வெற்றிகளை அறிவித்துக்கொண்டே

கிழக்கு மாகாணசபை மற்றும் சப்பிரகமுவ மாகாண சபை, வடமத்திய மாகாணசபை , வடமேல் மாகாண சபை, மத்திய மாகாணசபை என ஐந்து மாகாண சபை களையும் சோடி சோடியாகக் கலைத்து, தேர்தல்களை நடத்தி வெற்றிக்கொடியை நாட்டிவிட்டு அந்தக் களிப் பில் எக்காளமிடுகிறது அரசு.

இந்த வரிசையில் மேல்மாகாணசபையும், ஊவா மாகா ணசபையும் கலைக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் அரசின் "தேர்தல் வெற்றி நடை" தொடரும் என்பதில் சந்தேக மில்லை. எல்லாம் இராணுவ வெற்றி என்ற அத்திபாரத் தில் கட்டப்படும் பம்மாத்துகள்தாம்.

அவற்றைத் தொடர்ந்து,எஞ்சியுள்ள வடக்கு மாகாண சபைக்கும், தெற்கு மாகாணசபைக்கும் கூடத் தேர்தல் களை நடத்த அரசுத் தலைமை முற்படலாம்.

அது மட்டுமல்ல, மாகாணசபைத் தேர்தல்களைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலையும் அதன்பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற் போதைய பதவிக்காலத்தில் முதல் நான்கு ஆண்டுகள் இந்த நவம்பர் 17 ஆம் திகதி முடிவடைந்த கையோடு அடுத்த பதவிக்காலத்துக்கான (2011 நவம்பர் முதல் 2017 நவம்பர் வரையான காலத்துக்குரிய) ஜனாதிபதித் தேர் தலையும் கூட முற்கூட்டியே

இந்த வரிசைத் தொடரில் அரசுத் தலைமை அடுத் தடுத்து நடத்த முற்படக்கூடும்.

இராணுவ வெற்றிகளினால் தென்னிலங்கையில் கிளர்ந்துள்ள ஆதரவு எழுச்சியை அரசியல் லாபமாக்கும் அரசுத் தலைமையின் உத்தியில் இத்தகைய திட்டம் ஒன்றே ஆழப் புதைந்து கிடப்பதாக விடயமறிந்த வட் டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் இத்தகைய தேர்தல்களும், முடிவுகளும் ஜன நாயகம் இந்தத் தேசத்தில் எழுச்சி பெற்று, மலர்ச்சியுற்று, பிரவகிக்கின்றது என்பதற்கான அடையாளங்கள் அல்ல என்பதே உண்மையாகும்.

தென்னாசியாவின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஜனநாயகம் பற்றிக் குறிப்பிட்ட வரைவிலக்கணம் இங்கு ஈண்டு நோக்கற்பாலது.

"ஜனநாயகம் என்பது வெறுமனே வாக்களிப்பு மூல மான தேர்தல்களை நடத்தி முடிப்பது மட்டுமல்ல. "ஜனநாயகம்" என்ற கருத்து அல்லது சொற்பதம் அடக்கும் விடயம் இதற்கும் அப்பால் மிக விசாலமானது. அது, தனிப்பட்டவர்களின் நியாயமான உரிமைகள், மக்களின் அதிகாரங்கள், சட்டத்தின் ஆட்சி, அடிப்படை சிவில் மற் றும் மனித உரிமைகளை மதித்தல், அடக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றோடு நல்லாட்சியுடனும் (ஜனநாயகம்) நேரடியாகத் தொடர்பு பட்டது." என்பதை வெளிப்படையாக அந்தப் பத்திரிகை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கூறுவது போல வெறுமனே வாக்களிப்பும், வன்செயல்கள் குறைந்த தேர்தலும் சேர்ந்து "ஜனநாயகம்" என்றாகி விட்டது.

அப்படியாகுமெனில், இப்போது இலங்கையிலும் இடம்பெற்றுள்ள தேர்தல்களும் முடி வுகளும் இத்தேசத்தில் ஜனநாயகத்தின் மாண்புகள் பெரும் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன என்றே கொள்ளத்தக் கதாகிவிடும்.

ஆனால், யதார்த்தத்தில் அத்தகைய நிலைமை இங்கு இல்லை என்பதுதான் வருத்தமளிக்கும் உண்மையாகும். சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்கும் ஆட்சிப் பீடத்தின் பேரினவாதச் சிந்தனைக்கு, அத்தகைய பேரி னவாத மேலாதிக்க எண்ணத்தில் ஊறிக்கிடக்கும் பெரும் பான்மையினர் ஒன்று சேர்ந்து மீண்டும் அங்கீகாரமளிப் பதை ஜனநாயகத்தில் மாண்பாக பெருமையாக கருதி மதிக்கவே முடியாது. அப்படி மதிப்பதில் அர்த்தமில்லை.

அந்த வகையில் இங்கு இந்த "ஜனநாயக வெற்றி" என்பது இராணுவவாதலாதிக்கத்துக்குக் கிடைத்த வெற்றியன்றி வேறில்லை.

உதயன் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.