Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் அப்படித்தான் பேசுவேன்…! - சீமான்

Featured Replies

நான் உண்மைகளைப் பேசுகிறேன். அதனால் எரிச்சலடைந்த பலர் என்னை எப்படியாவது உள்ளே போட்டுவிடத் துடிக்கிறார்கள். என் இனத்துக்காக நான் குரல் கொத்துக் கொண்டே இருப்பேன், சிறை எனக்குப் புதிதல்ல என்கிறார் இயக்குநர் சீமான்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் எந்த நேரத்திலும் தன்னை கைது செய்ய வருவார்கள் என்ற நிலையிலும், சென்னையில் நடந்த முத்துக்குமார் அஞ்சலி நிகழ்ச்சியில் ஆவேச உரை நிகழ்த்தினார்.

கைதுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டேன், என் இன விடுதலைக்காக என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என அவர் முழங்கினார்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறீர்கள். இன்று 3வது முறையாக கைது செய்யப்படவுள்ள நிலையில் உங்கள் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்…

ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற எழுச்சி தமிழகத்தில் பரவலாக எழுந்துள்ளது. இது அடங்காது. நான் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் அந்த எழுச்சி மேலும் பெருகத்தான் செய்யும், குறையாது.

எதற்காக சீமான் கைது செய்யப்பட்டான்? ஏன் சிறையில் அடைக்கப்பட்டான் என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் மீ்ண்டும் மீண்டும் எழும். அதற்கு விடை தேடுவார்கள். அதுவே எழுச்சியாகும். அது வளர்ந்து கொண்டேயிருக்கும். எனவே என்னை உள்ளே வைப்பதால் எதுவும் நின்றுவிடாது.

ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதலில் தமிழர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றம் இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளதே?

அதைத்தானே பேசுகிறேன். ஒவ்வொரு கூட்டத்திலும் அதைத்தானே பேசுகிறேன். நான் மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடியவன். துக்கம் தாங்க முடியவில்லை என்றால் கதறி அழுது விடுவேன். அப்படிபட்ட நிலைதான் நீடிக்கிறது. அதனால்தான் என் இனத்தைக் காப்பாற்றக் குரல் கொடுக்கிறேன். ஆனால் நான் பேசுவது சிலருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இவன் பேசினால்தானே எழுச்சி ஏற்படுகிறது என்று எனது குரலை ஒடுக்க நினைக்கிறார்கள். அதனால் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறார்கள்.

நான் பேசினால் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று இளைஞர்களும், மக்களும் கூடுகின்றனர். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. என்னை சிறைப்படுத்துகின்றனர். ஆனாலும் அது அடங்காது. ஈழத் தமிழனத்தைக் காப்பாற்ற தமிழகத்தில் உருவாகியுள்ள எழுச்சி அடங்காது. அது இன்று ஒரு பெரிய இயக்கமாகவே வளர்ந்து வருகிறது. மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை அரசியல் ரீதியாக கொண்டு செல்லலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறதா?

ஆம். தமிழறிஞர்கள் பலரும் அவ்வாறு கூறுகின்றனர். என்னோடு இருக்கும் தோழர்கள் கூறுகின்றனர். மாணவர்கள், வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இப்போது கூட அது அரசியல் ரீதியாக - ஆனால் எந்தக் கட்சியையும் சாராத - ஒரு இயக்கமாகத்தானே நடந்துகொண்டிருக்கிறது. முத்துக்குமாரின் இறுதி நிகழ்ச்சியில், ஊர்வலத்தில் திரண்ட மாணவர்களும், இளைஞர்களும், ஏராளமான தமிழர்களும் எந்த அரசியல் அடையாளமும் கூடாது என்று கூறியது மட்டுமின்றி, அது ஈழத் தமிழரின் அடையாளத்தோடுதானே நடைபெற்றது. இது எதைக் காட்டுகிறது? தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி இயக்கம் ஒரு புதிய அரசியல் போக்காகவே உள்ளது என்பதைத்தானே?

ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவான அந்த எழுச்சி சரியான அரசியல் வடிவம் பெற வேண்டுமென்றும் ஒரு கருத்து நிலவுகிறதே?

தேர்தல் அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது, அது சில இடங்களுக்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேசுவது என்றெல்லாம் இருக்கும். அது சரிப்படாது. இந்த எழுச்சி ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டது. அது தமிழீழத்தின் விடுதலை. அந்த இலக்கை எட்டிவிட்டால் எதற்கு அரசியல் எல்லாம்?

ஒரு இய‌க்கமாக உருவா‌கியு‌ள்ள இ‌ந்த எழு‌ச்‌சி எ‌ப்படி‌ப்ப‌ட்ட வடிவ‌த்தை‌ப் பெறு‌ம் எ‌ன்பதனை ம‌க்க‌ள்தா‌ன் முடிவு செ‌ய்வா‌ர்க‌ள். நா‌ம் எதையு‌ம் சொ‌ல்ல முடியாது. ஆனா‌ல், ஒ‌ன்று ‌நி‌ச்சய‌ம், இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சிதான் தேர்தல் களத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஈழத் தமிழினத்திற்கு ஆதரவான கட்சிகளே வெற்றி பெறும். பொறுத்திருந்து பாருங்கள்.

இந்த மக்கள் எழுச்சி தொடரும். மேலும் வலுப்பெறும். நான் உள்ளேயிருந்தாலும், வெளியே இருந்தாலும் அதில் மாற்றம் ஏதுமில்லை. எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. தமிழீழ விடுதலை கிட்டும் வரை நான் பேசுவேன், பேசிக்கொண்டேதான் இருப்பேன், என்றார் சீமான்

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...4&Itemid=68

மெய்யான உணர்வுக்கும் மேலான எழுச்சிக்கும் எஜமான் சீமான்..சீமான் பணி மேன்மை காண்க

காங்கரஸ் காறரின் தீவிர விசுவாசியான ஒரு இந்திய தமிழர் ஒருவர் சீமான் மீது மிக கடுப்பில் இருப்பார். நேற்று காணும் போது சொல்கிறார் தமிழக அரசு வேண்டும் எண்றே சீமானை சிறையில் போட்டு பேரிய ஆள் ஆக்கி போட்டுது. முன்னர் அவர் யார் எண்டே தெரியாதவர்கள் எல்லாம் இப்ப அவரின் பேச்சை உற்று கேட்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

கெட்டதிலையும் நன்மை என்பது இதுதானே.?

புறப்படு தமிழா...

தமிழரென்ன தெரு வாழிகளா?!

புறப்படு தமிழா...

நம் இனமென்ன வெறும் புழுதியா?!

புறப்படு தமிழா...

தமிழினத்தோனே.. சீமானே.. தோழனே

விறைத்திரு தமிழா!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சீமான்தான்!

சீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.

நண்பர்களே தமிழனுக்கு ஒரு விடிவு தர ஒரு தலைவன் வரமாட்டானா என தேடி, தேடி அலுத்து விட்டோம். இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து தலைவர்களும் பணம், பொருள், பதவி ஆசையில் ஏதாவது ஒன்றில் சிக்கி தமிழின அழிவிற்கு உதவியாக உள்ளனரே தவிர தமிழனை காப்பாற்ற சில தலைவர்கள் நினைத்தாலும் அவர்களால் அது முடியவில்லை.

நாம் ஏன் சீமானை நமது தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது. உண்மை தமிழன் இதைவிட வேறு என்ன வேண்டும், தைரியம், பயமின்மை, பக்குவம், அனுபவம் என அனைத்தும் உள்ளது.

சீமான் அண்ணா உங்களின் அன்பு தம்பியின் அன்பு கட்டளை தமிழர்களை நீங்கள்தான் வழி நடத்தி செல்ல வேண்டும். என்ன பண்ணூவிர்களோ எப்படியாவது எங்களை வழி நடத்தி இந்த தமிழின அடிமைதனத்திலிருந்து விடிவு கிடைக்க வழி செய்யுங்கள்.

எவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம்..

http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_17.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுள்ள தமிழன் உண்மையுள்ள தமிழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.