Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ்-அதிமுக கூட்டணி? - குமுதம் முச்சந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ்-அதிமுக கூட்டணி?

இதனால் சகலமானவர்களுக்கும் என்று செய்தி அனுப்பியிருந்தார் சித்தன். பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த, கோட்டையினுள் இருந்த சர்ச் வளாகத்தில் கூடியது அலப்பறை டீம். சுவருமுட்டி சுந்தரத்திடம் மட்டும் கவலை தெரிந்தது. "என்னாச்சு?" என்று வாயைக் கிளறினார் கோட்டை கோபாலு.

"என்னத்த சொல்றது. தேர்தல் வரப்போகுதுன்னு சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஏகப்பட்ட சலுகையை அறிவிச்சிருக்கு. விவசாயத்துக்கு கூடுதல் கவனம் காட்டியிருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாடு பட்ஜெட்லேயும் நம்ப பேராசிரியர் அன்பழகன் நிறைய திட்டங்களை அறிவிச்சிருக்கார். இப்படி அறிவிச்சிருக்கிற திட்டத்தை எல்லாம் மனசுல நினைச்சுப் பார்த்தா சொர்க்கலோகமே தமிழ்நாட்டுல இறங்கி வந்த மாதிரி தெரியுது..." - சுவருமுட்டி.

"நடக்குதோ இல்லையோ. ஆனா திட்டம்னு அறிவிச்சிருக்காங்க இல்ல. அதுக்கு ஏன்யா கவலைப்பட்ட மாதிரி கலங்கி நிக்குறே..?"- அன்வர்.

"என் கவலை எனக்கு. எதெதுக்கோ மானியம் அறிவிச்சிருக்காங்க. என்னைய மாதிரி குடிமகனுக்கு சரக்கு வாங்கவும் மானியம் ஒதுக்கினா எம்புட்டு நல்லாயிருக்கும். நாட்டுல பெரும்பான்மையா இருக்கிற குடிமகன்களோட ஓட்டையெல்லாம் கூட்டி வாரிடலாமே. இதுகூட இந்த கவர்மென்ட்டுக்கு தெரியல. ஒவ்வொரு நாளும் சரக்கு வாங்க எம்புட்டு கஷ்டப்படுறோம். வீட்டுக்கார அம்மாகிட்ட எவ்வளவு மொத்து வாங்குறோம்னு என்னய மாதிரி கொள்கைப் பிடிப்புள்ள குடிமகனுக்குத்தான் தெரியும். என்ன பண்றது..?" என்று புலம்பினார் சுவருமுட்டி சுந்தரம்.

"அவனவன் கவலை அவனுக்கு. சரி. காங்கிரஸ் கட்சி என்ன நினைப்புல இருக்காம்..?"- சித்தன்.

"என்ன நினைப்புல இருக்கு? நாடே இலங்கைத் தமிழ் ஆதரவுல கொதிச்சுக் கிடக்கு. ஆனா காங்கிரஸ் கட்சிக்கு மட்டும், அப்படி ஏதுமில்ல. கிராமப்புற மக்களுக்கு ஈழப் பிரச்னைன்னா என்னதுன்னே தெரியல. அவிங்களுக்கு அதுபற்றி எல்லாம் அக்கறை இல்ல. தெரியல. அவங்களுக்கு தேவையான அரிசி பருப்பு, விலைவாசி உயர்வில்லாம காய்கறி, கரண்ட் எல்லாம் கிடைக்குதான்னுதான் பார்க்குறாங்களாம். சென்ட்ரல் கவர்மென்ட் அதுக்கானது எல்லாத்தையும் செய்யுதாம். அதனால கவலையில்ல. கிராமத்து ஓட்டையெல்லாம் சட்டியில கூட்டி வாரிடலாம்னு சோனியாகிட்ட ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க தமிழ்நாடு காங்கிரஸ் ஆளுங்க..." - கோபாலு.

"எப்படியோ. இந்தத் தேர்தலோட தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சிக்கு சங்கு ஊதாம இருந்தா சரிதான்..." என்று சிரித்த சித்தன், கூட்டணி நிலவரம் ஏதாவது தெரியுதாப்பா..?" என்றார்.

"ஓ...ரொம்ப நல்லாவே தெரியுது. ஈழப் பிரச்னையில காங்கிரசுக்கும் அக்கறை இருக்கு. இந்த கட்சிதான் அந்த மக்களுக்கு நிறைய நல்லதை செய்தது. அதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லாம விட்டுட்டோம். அதனால கொள்கை விளக்க கூட்டம்னு நாடுமுழுக்க நடத்துவாங்களாம். முதல்கட்டமா சென்னை மயிலையில நடத்துனாங்க. ப.சிதம்பரம்தான் சீஃப் கெஸ்ட். இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் நல்லதை செய்யுமாம். அதனால புலிகள் ஆயுதத்தை தூக்கி கடல்ல போட்டுட்டு வந்தா மத்தியஸ்தம் பண்ணலாம்னு பஞ்சாயத்து சொல்றாரு. அங்க சண்டை பிடிக்கிறதே ராஜபக்சேதான். அவருக்கு ஆயுதம் தர்றது இந்தியாதான். முதல்ல இவிங்க ரெண்டு பேரும் நிறுத்தட்டும்னு கூட்டத்துல வந்த கதர்சட்டையே புலம்புது..."- கோபாலு.

"அடடே. உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதானா. நிறைய பாலிடிக்ஸ் இருக்கு. அந்தக் கூட்டத்துக்கு வாசனோ, அவரோட ஆதரவாளர்களோ யாரும் வரலை. சிதம்பரம்- தங்கபாலு தரப்புதான் கலந்துக்கிட்டது. என்னா சேதின்னு விசாரிச்சா டெல்லிபவர் இப்போ ப.சி பக்கம்தான் இருக்காம். இந்த நிலை நீடிக்குறது வாசனுக்கு ஆகலை. அதுமட்டுமல்ல காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி என்றால்தான் கலைஞர் மூலமா தனது ஆட்களுக்கு சீட் வாங்க டெல்லிய வற்புறுத்த முடியும். அ.தி.மு.க ஜெ.விடம் காங்கிரஸ் உறவு வந்துவிட்டால் போயஸ்கார்டனில் போய் அப்படி அழுத்தம் கொடுக்க முடியாதுன்னு நினைக்கிறாராம்..."- சுவருமுட்டி சுந்தரம்.

"ஏம்ப்பா நீ சொல்றத பார்த்தா, காங்கிரஸ் கட்சி ஏதோ அ.தி.மு.க கூட்டணிக்கு போற மாதிரி இல்ல சொல்ற..?"- சித்தன்.

"மாதிரின்னு சொல்லலை. அப்படித்தான் திட்டம் இருக்கு. தமிழ்நாட்டுல இருக்குற வாசன் கோஷ்டி தவிர மத்தது எல்லாம் அ.தி.மு.க.தான் சரின்னு சோனியாகிட்ட லெட்டர் கொடுத்திருக்காங்க. மயிலை மாங்கொல்லை கூட்டத்துல பேசுன ப.சிதம்பரம் கூட காங்கிரசின் மைய இறையாண்மைக் கொள்கைக்கு அ.தி.மு.க உறுதுணையா இருக்கு. தீவிரவாதத்துக்கு எதிரா காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு ஜெ. ஆதரவா இருக்காங்க. அது இலங்கைப் பிரச்னையிலும் சரி அப்படீன்னு பேசிட்டு கூடவே, முதல்வர் கலைஞர் இப்போதான் உணர்ந்து நம்பக்கம் வந்திருக்கிறார் என்றும் பஞ்ச் வைத்து பேசியிருக்கிறார். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு ஜெ.வின் போயஸ் தோட்ட கதவு திறந்திருக்குங்கிறத கலைஞருக்கு சுட்டிக் காட்டுற மாதிரி பேசியிருக்காரு. அதனால தேர்தல் நெருங்க முடிவு எப்படியும் மாறலாம்..."- சுவருமுட்டி.

"அந்தமாதிரி ஆச்சுன்னா தி.மு.க என்ன நிலையில இருக்கும். காங்கிரஸ் கட்சியோட முடிவு என்னாகும்?"- கோபால்.

"ஒண்ணும் ஆகாது. நாம ஏற்கனவே பேசிக்கிட்டோம். 1996ல் நடந்த மாதிரிதான். வாசன் கோஷ்டி பழையபடி தனியா பிரிஞ்சு தி.மு.க. கூட இருக்கும். 96ல் ஜெ. கூட கூட்டணி வச்ச காங்கிரஸ் ஒண்ணுமில்லாம போச்சு. அந்த மாதிரிதான் இப்போதும் நிலைமை. வாசனும் ஒரு திட்டத்தோடதான் இருக்கார்..."- சுவருமுட்டி.

"சுவருமுட்டி ரொம்பவும் ஊர் சுத்தியிருக்காரு போல. நிறைய சேதி சொல்றாரு. நானும் என் பங்குக்கு ஒரு தகவல் சொல்றேன்" என்ற சித்தன்,

"தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களில் ஒருவரான தமிழருவி மணியன், கலைஞருக்கு ஒரு திறந்த மடல் அப்படீன்னு கடிதம் அனுப்பியிருக்காராம். ஏற்கனவே ஈழ ஆதரவு விஷயத்தில் கலைஞரோட முடிவு சரியில்லைன்னுதான் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் பதவியில இருந்து விலகிட்டாரு. ஆனாலும் அவருக்கு கலைஞரின் தமிழ்ப்பற்று மீது ஆறாத காதல். அதனால, காங்கிரஸ் கட்சிக்காரரான நானே சொல்றேன். அந்தக் கட்சியோட சேர்ந்து தேர்தலை சந்திக்காதீங்க. ஈழ மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தால தமிழ்நாடே கொந்தளிச்சிருக்கு. அந்த கட்சி கூட சேர்ந்து நீங்களும் கரைஞ்சு காணாம போயிடாதீங்க.. அப்படீன்னு எழுதியிருக்காராம்." என்றார்.

"ரொம்ப சுத்தமான காங்கிரஸ்காரர் போல இருக்கு. அதான் காந்திய வழியில உண்மையைச் சொல்றாரு. கலைஞரும் அவரோட கட்சியும் உருப்படுதா, இல்லையான்னு பொறுத்திருந்து பார்ப்போம்"- சுவருமுட்டி.

"அப்படியே இன்னொரு சேதி. தென்மாவட்ட வழக்கறிஞர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா மதுரையில பெரிய ஆர்ப்பாட்டம் ஊர்வலம்னு நடத்தியிருக்காங்க. மதுரையில இதுவரைக்கும் எந்த ஊர்வலமும் அப்படி நடந்ததில்லையாம். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் மக்களும் திரண்டு வந்திருக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு விஷயம் எந்தளவுக்கு பற்றி எரியுது பாரு. ஆனா இந்த காங்கிரஸ்காரங்கதான் ஒண்ணுமே தெரியலைங்கிறாங்க..." என்றார் கோட்டை கோபாலு.

செல்போனில் பேசிக்கொண்டிருந்த சுவருமுட்டி என்னப்பா உண்மையாவா..? என ஆச்சரியப்பட்டவர்,

"சேதி தெரியுமாப்பா. ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியசுவாமி இருக்காரே. இன்னிக்கு ஐகோர்ட்டுக்கு போயிருக்காரு. சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்குல தன்னையும் ஒரு பார்ட்டியா சேர்க்கணும்னு மனு கொடுக்கப் போனாரு. அப்போ அவருகூட பாதுகாப்புக்குப் போன சி.ஆர்.பி.எப் போலீசை உள்ளே நுழையக் கூடாதுன்னு வழக்கறிஞர்கள் தகராறு பண்ணி தடுத்திருக்காங்க. சரி எதுக்குப் பிரச்னைன்னு சுவாமியும் சி.ஆர்.பி.எப் போலீசை வெளியே இருங்கன்னு சொல்லிட்டு உள்ளே போனாரு. எதிர்பார்த்திருந்த வழக்கறிஞர் டீம் ஒன்று பட்டென்று கதவையெல்லாம் சாத்திக்கிட்டு சுவாமி மேல சரமாரியா முட்டைவீச்சு நடத்திருக்கு. ஈழ ஆதரவுக்கு எதிராக இனத்துரோகியாக இருக்கும் சுப்பிரமணியசுவாமி ஒழிக. காங்கிரஸ் ஒழிக ன்னு பெரிசா கோஷம் போட்டாங்க. தகவலறிந்து வெளியே இருந்த சி.ஆர்.பி.எப் போலீஸ் கதவை உடைச்சிக்கிட்டுப் போய் சுவாமியை மீட்டிருக்கு. சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர் ஒருத்தரும் உள்ளே ஓடி மீட்பு நடவடிக்கையில் இறங்க வழக்கறிஞர் டீம் அவரையும் தாக்கியதாம். இவ்வளவும் நீதிபதி முன்பாகவே நடந்திருக்கு. தகராறு செய்த அத்தனை பேரையும் கைது செய்ய சொல்லியிருக்காரு நீதிபதி" என்றார்.

"அப்படிப் போடு. ஏற்கனவே இந்த தி.மு.க கவர்ன்மென்ட்டுல சட்டம்-ஒழுங்கு சரியில்ல. ஆட்சிய டிஸ்மிஸ் செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. இதுல இந்த சிக்கல் வேறயா. இனிமே டிஸ்மிஸ், டிஸ்மிஸ்னு ஓயாம சொல்லிக்கிட்டு இருப்பாரே சுவாமி... நம்ம காது ஜவ்வுதான் பஞ்சராகப் போகுது.." -சித்தன் கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்..

- குமுதம் முச்சந்தி

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அரசியல் சாணக்கியத்துடன் காங்கிரசுடன் ஒட்டி இருப்பதாக நினைக்கிறார். இந்தத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பாடுமானால் தேர்தலைத் தொடர்ந்து திமுக அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும். இவர்கள் பேசியது போல வாசன் கோஷ்டி பிரிந்தாலும் பிரியவிட்டாலும் மாநிலத்தில் பாமகவின் துணை கலைஞருக்கு தேவைப்படும். அப்போது போய் கெஞ்சுவதை விட்டுவிட்டு இப்போதே பேரைக் காப்பாற்றிக் கொண்டு கலைஞர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி விடலாம். ஏற்கனவே மருத்துவர் இராமதாஸ் தங்கள் கட்சி கலைஞரை ஆதரிக்கும் என்று சொல்லிவிட்டாரே..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடந்தாலும் மத்தியில் கங்கிரசோடும் மாநிலத்தில் தி.மு.கவோடும் (ஆனால் ஆ.தி.மு.கவும் வரக்கூடாது அப்ப வேற யார் வாறது என்று கேட்கிறதும் விளங்குது சீமானை வைத்து கட்சி ஓன்று தொடங்கினால் இப்ப ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும் நாளடைவில் வளர முடியும் ) கூட்டணி வைப்பவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது எனது விருப்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.