Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு இல்லை:ஜெகத்கஸ்பார்

Featured Replies

அனைத்து சமூகத்தவர்களும் இணைந்து இலங்கை பிரச்சனைக்கு போராடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்பின் பேரணி இன்று சென்னையில் நடந்தது.

சென்னை போர் நினைவுச்சின்னத்தில் தொடங்கிய இப்பேரணி பெரியார் சிலை முன்பு முடிந்தது. இப்பேரணியில் சுப.வீரபாண்டியன், அறிவுமதி உட்பட இலக்கியவாதிகளும் மாணவர்கள், மாணவிகள், திருநங்கைகள், ஆன்மீகவாதிகள் என்று பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இப்பேரணியின் முடிவில் இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அருட்திரு.ஜெகத்கஸ்பார் பேசினார்.

அப்போது, ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை ஒன்றும் நப்பு நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று ரீதியாக இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை.

இந்தியா பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் பக்கமாய் இலங்கை நின்றது. இந்தியா வல்லரசாக வளர்வதை விரும்பாத நாடுகளுக்கு தன் நிலப்பரப்பினை கொடுத்துள்ளது.

இந்திய மீனவர்கள், நூற்றுக்கணக்கானோரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளது. நமது மீனவர்கள் 200க்கும் மேலானோரை படுகொலை செய்த ஒரு நாட்டுக்கு நட்பு நாடு என்ற சிறப்பும் ராணுவ பொருளாதார உதவிகளும் வழங்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

வெளியுறவு நிர்பந்தங்கள் எதுவாக இருந்தாலும் சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளூக்கு மதிப்பளிப்பதே தேசிய அரசுகளின் முதல் கடமையாகும்’’ என்று பேசினார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது, ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை ஒன்றும் நப்பு நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வரலாற்று ரீதியாக இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை.

இந்தியா பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் பக்கமாய் இலங்கை நின்றது. இந்தியா வல்லரசாக வளர்வதை விரும்பாத நாடுகளுக்கு தன் நிலப்பரப்பினை கொடுத்துள்ளது.

இந்திய மீனவர்கள், நூற்றுக்கணக்கானோரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளது. நமது மீனவர்கள் 200க்கும் மேலானோரை படுகொலை செய்த ஒரு நாட்டுக்கு நட்பு நாடு என்ற சிறப்பும் ராணுவ பொருளாதார உதவிகளும் வழங்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

வெளியுறவு நிர்பந்தங்கள் எதுவாக இருந்தாலும் சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளூக்கு மதிப்பளிப்பதே தேசிய அரசுகளின் முதல் கடமையாகும்’’ என்று பேசினார்.

தேசியம் என்பதற்குள் தமிழகம் இல்லையோ என்று ஒரு ஐயப்பாடு தோன்றம் கண்டு வருகிறது. ஏனென்றால் தமது தொப்புள் கொடி உறவுகளுக்காக பல்வேறு அரசில் தளங்களில் நின்ற போதும், தமது வேறுபாடுகளைக் கடந்த நிலையிலே, ஒரு சில கட்சிகள் தவிர, அனைவரும் தமிழனம் காப்பாற்றப்பட வேண்டும் என்று குரல்கொடுத்தும், தேசிய அரசு செவிசாய்க்கவில்லையே என்றால் என்னவென்று கொள்வது? நடுவணரசைப் பொறுத்தவரை தமிழினம் என்றால் கிள்ளுக் கீரைகள் என்ற மனப்போக்கு. வங்கத்தை அடியொற்றி, வங்காள தேசத்தை பிரித்துக் கொடுக்கமுடிந்தது. ஏனென்றால் அவர்களை மனிதர்களாகவும், இந்தியாவினது மதிப்புமிக்க இனமாகவும் நோக்கியதன் காரணத்தால். ஆனால், தமிழனம், என்ன கத்துவார்கள். அல்லது தம்மைக் கொளுத்துவார்கள். சில பஸ்களை உடைப்பார்கள். இதனைவிட வேறெதுவும் செய்யமாட்டார்கள். அப்படியே அடங்கிவிடுவார்கள். இந்தப்போக்கை மாற்ற வேண்டும். அது தமிழகத்தின் கையிலே வாக்குச் சீட்டுக்களாக இருக்கிறது. அவை எமது தன்மானத்தைக் காக்க வேண்டும். அல்லது செல்லாதவையாக்கப்பட வேண்டும். இதனூடாக மத்திய மாநில அரசுகளுக்கு இடித்துரைக்க வேண்டும். அவர்கள் நீங்கள் போடும் வாக்குப் பலத்தால் ஆட்சிக்கு வந்து, நீதியென்றால் என்ன விலை. இனமென்றால் என்ன என்றல்வா கேட்கிறார்கள். எனவே அனைத்தையும் மாற்றும் வலு மக்களிடமே உள்ளது.

எனவே இந்த மாற்றான்தாய் மனப்போக்கின் விளைவாக நாம் எமது உறவுகளைத் தீய்க்குப் பலிகொடுத்த வருகிறோம். உறவுகளே நாம் அழிகிறோம் சிங்கள இனஅழிப்பில்.ஆனால் இந்தியத் தேசிய அரசோ, அதற்குத் துணைபோகும் மாநில அரசுகளோ, உங்கள் வாக்குப் பெற்று ஆட்சிக்கு வந்தோர் இன்று, நீதிக்காய் குரல்கொடுக்கும் போது உங்களைத் தாக்கவும் உத்தரவிடுகிறது. தேசியத்துள் தமிழ் அழிவதா? அல்லது தமிழுக்கு உரிய கௌரவத்துடனான தேசியமா? என்பதை உங்களது வாக்கால் தீர்மானிக்க வேண்டும்.ஏனென்றால் தமிழ்த் தேசியம் மதிக்கப்படவில்லை. மதிப்பு இருந்திருப்பின் முத்துக்குமார் அவர்களுடன் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். எனவே நாமே சிந்திப்போம். உலகில் தமிழனுக்காய் ஒரு தேசம் அது, தமிழீழத் தாயகமே. இந்தியத் தேசத்துள் இருக்கும் தமிழக மீனவர்களை தெருநாயைச் சுடுவதுபோல் சிங்களப்படைகள் கடலிலே சுட்டுத்தள்ளுகிறது. ஆனால் இந்தியத் தேசிய அரசு மௌனம் காக்கிறது. அது ஒரு கன்னடனாகவோ, குஜராத்தியனாகவோ, மாராட்டியனாகவோ இருந்தால் சிங்களத்தின் வால் எப்போ நறுக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை.

இந்திய அரசு சிந்திக் கவேண்டிய உணமையொன்றுள்ளது. தமிழீழமக்களுக்கான இறையாண்மை மட்டுமே இந்திய இறையாண்மைக்குப் பாதுகாப்பானது. இதனை வரலாறு மெய்ப்பிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.