Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கச் செனட் சபையில் சாட்சியமளித்த ஆன்னா நெய்ஸ்ரட் வருகை குறித்து சிறிலங்கா அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க செனட் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஆன்னா நெய்ஸ்ரெட், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக வழங்கியுள்ள தகவல்கள் தொடர்பாக சிறிலங்கா அரச மட்டத்தில் அதிர்ச்சியற்றிருப்பதாகத் தெரியவருகிறது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தேன் செனட்சபையில் ஆன்னா எனக் கூறியிருந்தார். ஆயினும், இவர் எவ்வாறு அனுமதி பெறாது இலங்கை வந்து வவுனியா சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தார் என்பது பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியாவுக்குச் சென்று வைத்தியசாலையிலுள்ள மக்களைச் சந்தித்ததாகவும், ஆனாலும் இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்லமுடியாதபோதும் முகாம்களுக்கு வெளியவிருந்த இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்ததாகவும் ஆன் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டபோதும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் தம்மிடம் உரிய முறையில் அனுமதி பெறவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சும், மனித உரிமைகள் அமைச்சும் தெரிவித்துள்ளன.

யாருக்கும் விசேட அனுமதி வழங்காத நிலையில், உல்லாசப் பயணிகள் போன்று நாட்டுக்கு வந்தே அவர்கள் இவ்வாறான செயற்பாட்டைச் செய்துள்ளனர். இது குடிவரவுச் சட்டத்தை மீறும் செயல். இந்த விடயம் தொடர்பாக நாங்கள் விசாரணைகளை நடத்துவோம் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாகவும் அறிப்படுகிறது. ஆயினும் சிறிலங்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஆன்னா மறுத்துள்ளார்.

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=268

Edited by forlov

தனது முகமூடி இவரால் கிழியப்போகிறது எனப்பயத்தினால் அவரை குற்றம் சாட்டி திசை திருப்பும் வழமையான பாணி..

எனவே தமிழ் மக்களே இப்படி போய்வருவர்களை, விடையம் நன்கு அறிந்த வெளி நாட்டினர்களை ஒன்றிணையுங்கள்.. அவர்கள் மூலம் உலகம் முழுவதும் அறிக்கைகளை வெளியிட செய்ய வேண்டும்..

இலங்கையின் பலயீனம் எது பலம் எது என அறிந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு..

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்கிறது பிச்சை அதுக்குள்ளை வீராப்பு வேறை.

உத்தியோக பூர்வமான வரவிற்கும், உத்தியோகப்பற்றற்ற வரவிற்குமிடையில் காணப்படும் வேறுபாட்டை, அல்லது அரச பிரதிநிதிகளால் நேரிடையாக வழங்கப்படும் தகவல்களுக்கும் நேரடி நடவடிக்கைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு, இவரது அறிவித்தலால் உலகம் புரிந்து கொள்ளதற்கு ஓரு வாய்பு உள்ளது.

அதுமட்டுமன்றி அமெரிக்க தேவைகருதிய செயற்பாடுகள் விரிவடைவதற்கான தேவைகள் அதிகரித்திருப்பதையும் இது காட்டுகின்றது.

என்ன ? இனிமேல் வெளிநாட்டினர் வருகையின் போது கடவுச்சீட்டுகள் மேலதிகமாகக் கவனிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.