Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாசிய இராணுவப் புவியியல். - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள ஐ.எஸ்.ஐ. கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவுவதற்கு வாய்ப்புள்ளது குமுதம் தீராநதி தைமாத இதழில் இருந்து

மா. கிருஷ்ணன் ()தினக்குரல்

ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர் வ.ஐ.ச. ஜெயபாலன். பெருமளவு கவிதைகள், கொஞ்சம் சிறுகதை மற்றும் குறுநாவல்கள்எழுதியுள்ள ஜெயபாலன் சமூகவியல் ஆவுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தென்னாசியாவில் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த அதன் புரிதலை விரிவாக நம்முடன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்கள் முக்கியமானவை. காலத்தின் அவசியம் கருதி அதனை மீள் பிரசுரம் செகின்றோம்:

கேள்வி : இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான உங்கள் நேர்காணலில், கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ இந்தியாவின் எதிரிகள் திட்டமிடுகிறார்கள் என குறிப்பிட்டிருந்தீர்கள். சமீபத்திய மும்பைத் தாக்குதல் உங்கள் அனுமானத்தை உறுதிப்படுத்தியுள்ளது. உங்களுக்குக் கிடைத்த எத்தகைய தகவல்களின் அடிப்படையில் இந்த அனுமானத்துக்கு வந்தீர்கள் எனக் கூறமுடியுமா?

பதில் : பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைப் போலவே, என்னை நான் உலகத் தமிழர்களின் ஒரு அங்கத்தவனாகத்தான் உணர்கிறேன். ஆனபடியால் என்னுடைய அக்கறைகளும் ஈடுபாடும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தென்னாசியப் பிராந்தியத்தைப் பற்றியே தொடர்ந்து இருந்து வருகிறது. என் அடிப்படைத் தேடலாக இது இருப்பதால், தென்னாசியா மற்றும் தென்னாசியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய வல்லரசான இந்தியா, என் இனமானத் தமிழர்கள் பற்றி நான் பயணம் செயும் பல்வேறு நாடுகளிலும் நான் சந்திக்கும் அறிஞர்கள் எத்தகைய கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக, இந்தியா மீதான என் ஈடுபாட்டுக்குக் காரணம், இந்திய அரசின் மேம்பட்ட செயல்பாடும் இந்தியாவின் பாதுகாப்பும், எங்களையும் உட்படுத்தி தென்னாசியாவைச் சேர்ந்த அனைவருக்கும் முக்கியத்துவம் தருவதும்தான். இந்தியாவின் பிரச்சினை தென்னாசிய நாடுகளின் பிரச்சினைதான். இந்தியாவின் எதிரிகள் கை ஓங்குவது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல, எங்களுடைய பிரச்சினையும்கூடத்தான்.

நான் இலங்கையில் இருந்த காலங்களில் கொழும்பில் உள்ள பல்வேறு துறை அறிஞர்களுடனும், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகளுடனும், ராஜதந்திரிகளுடனும் பழகியிருக்கிறேன்.நோர்வேயில் சமாதான முயற்சியில் ஈடுபட்ட தூதுவர்களுடன் பேசியிருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செயும் போதெல்லாம், அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகளைச் சந்திந்திருக்கிறேன். இவர்கள் எல்லோரின் மூலமாக எனக்குத் தெரிய வந்த தகவல்களைவிட முக்கியமானது, இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளரும் இராணுவ ஆவாளருமான எனது நண்பர் சிவராமன் என்னுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள். தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினருடன் நெருக்கமான பழக்கம் சிவராமனுக்கு இருந்தது. அவர்கள் மூலம் அவர் நிறைய தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவற்றையெல்லாம் வைத்து ஒரு புத்தகம் எழுதும் திட்டமும் அவருக்கு இருந்தது. இலங்கையில் இருந்தால் அது சாத்தியமில்லை என்பதால் ஜப்பானில் குடியேறிவிட்டு பிறகு எழுதுவேன் எனச் சொல்லிவந்தார். இந்நிலையில்தான் அவர் கடத்திக் கொல்லப்பட்டார். கருணா கோஷ்டியினர்தான் அவரைக் கொன்றார்கள் என்று சொல்லப்பட்டாலும், அவருக்குத் தெரிந்த பல்வேறு நாடுகளின் உளவுத்துறை ரகசியங்கள் வெளியாகக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது என் சந்தேகம். ஏனெனில், அவரது புத்தகம் வந்தால் பல அதிகாரிகளின் ரகசியத் தொடர்புகள் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்று அவரே என்னிடம் சொல்லி இருக்கிறார். இப்படி பல்வேறு வழிகளில் எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உள்ளார்ந்த ஊடுருவல்களுக்கு வாப்பான சூழல் இந்தியாவில் இருக்கிறது என்பது என் அனுமானம். 1992இல் "சன்' தொலைக்காட்சியில் என் நேர்காணல் ஒளிபரப்பானது. அதில் நான் இது சம்பந்தமாக சில விஷயங்களை வலியுறுத்தி இருந்தேன். அதன்பிறகு "நந்தன்', "ஞாநியின் சூதீம்தரிகிட', "தீராநதி'ஆகிய பத்திரிகைகளிலும் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

கடைசியாக, "தீராநதி'க்கு அளித்த நேர்காணலில் இலங்கை கடற்படையில் சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளைச் சேர்ந்த உளவுப்பிரிவினர் ஊடுருவி இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கைக் கடற்படைக்குள் ஐ.எஸ்.ஐ.யின் ஊடுருவல் பற்றி, காகம் கறுப்பு என்பதுபோல், கொழும்பில் எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் ஒரு கடற்படை வீரன் ராஜீவ் காந்தியைக் கொலைசெய முயற்சித்ததை இதனுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கலாம். ராமேஸ்வரம், நாகபட்டினம் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல்பகுதியில் பல ஆண்டுகளாக நடந்துவரும் கடத்தல்களில் ஐ.எஸ்.ஐ.யின் கை இருக்கிறது என்பதை கொழும்பில் நான் சந்தித்த ராஜதந்திரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியக் கடற்கரை தொடந்து கண்காணிக்க முடியாத அளவுக்கு மிக நீளமானது. உண்மையில் கடற்கரையோரமாக வாழும் மீனவச் சமுதாயம்தான் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள். மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய அரசுக்கு எதிரான மனநிலையை அவர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் ஐ.எஸ்.ஐ.யின் நோக்கம். அது நிறைவேறினால் கடற்கரை வழியாக அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவது சுலபமாகும் என நினைக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டமிடுகிறார்கள் என்று குறிப்பிட்டேன். என் தீராநதி நேர்காணலின் ஆங்கில மொழிபெயர்ப்பை டில்லியில் நான் சென்ற சில அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் என் வார்த்தைகளை கவனிக்கிறார்கள் என்பது உறுதிப்பட்ட பிறகு, இந்திய அதிகாரிகளைச் சந்திக்கும் வாப்புக் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இந்த விஷயங்களை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது என் அனுமானம் உறுதியாகியுள்ளது.

கேள்வி: சமீபத்தில் தென் தமிழகக் கடற்கரை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் வாப்புள்ளது என்றும் கூறியிருக்கிறீர்கள்?

பதில் : மும்பை பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படை கண்காணிப்பைத்தீவிரப்படுத்த

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.