Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் எம்.பிக்களின் ஆர்ப்பாட்டம் அசைக்குமா, என்ன……?

Featured Replies

பிரிட்டிஷ் எம்.பிக்களின் ஆர்ப்பாட்டம் அசைக்குமா, என்ன……?

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு பிரிட் டனில் முகிழ்த்திருக்கிறது. அதற்கான முன்னறிவித் தல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டிருக் கின்றது. அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பி னர் சர்மா விரேந்திரக்குமார் விரைந்து விவாதிக்கப் பட வேண்டிய பிரேரணை (Early Day Motion) என்ற வரிசையில் நேற்றுமுன்தினம் அந்தப் பிரேரணை யைச் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தம் செய்வ தற்கு ஒப்புதல் தெரிவித்து நடைமுறைப்படுத்தும் வரை, பொதுநலவாய அமைப்பிலிருந்து (Commonwealth) அதனை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என்பதே அந்தப் பிரேரணையின் கருவாகும்.

சர்மா விரேந்திரக்குமார் சமர்ப்பித்துள்ள பிரேர ணைக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையில் வன்னிப் பகுதியில் நெருக்கடி கள் தீவிரமடைந்து வருவது, இந்த வருட ஆரம்பத்தில் 2,000 பேர் போரில் பலியாகியது ஆகியன அந்தப் பிரேரணையில் முன்னிறுத்திக் காட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றப் பிரேரணைக்கு முன்னறிவித்தல் கொடுத்ததோடு மட்டுமின்றி, இலங்கை நிலைவரம் அதன் பின்னணி என்பன குறித்து பொதுநலவாய அமைப்பிற்கும் நீண்ட மகஜர் ஒன்றை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிடையில் இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தம் செய்யவேண் டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆர்ப் பாட்டத்தில் தமிழ் மக்களோடு சேர்ந்துகொண் டனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையும் வகித்தனர். லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பின் மத்திய அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு அமைதிப்பேச்சுக்கள் ஆரம் பமாகும்வரை, இலங்கையை பொதுநலவாய அமைப் பிலிருந்து இடைநிறுத்தவேண்டும் என்ற முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவ்வேளை பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட் டத்திலான செயலணிக் குழுவின் மாநாடு நடை பெற்றுக்கொண்டிருந்தது. அந்த மாநாட்டில் பொது நலவாய அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் அமைச் சர்கள் பங்குபற்றியிருந்தனர்.

தத்தமது தொகுதிகளில் வாழும் ஈழத்தமிழர் களின் உறவுகள் இலங்கையில் இன்னல்களைச் சந் தித்துக்கொண்டிருக்கிறார்கள

தமிழ் நாட்டில முடிஞ்சுது இப்ப லண்டனுக்கு போட்டுது, சட்டசபையில தீர்மானம் நிறைவேற்றப்போகீனமாம்

  • தொடங்கியவர்

களத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டுமே நிகழ்வுகளைத் தீர்மானிக்கக் கூடியது. உலக மாற்றங்களையும் உள்வாங்குதல் அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கை நீக்கப்பட்டால் கிரிக்கட் டெஸ்ட் (Cricket Test) ஆட்டங்களிலில் ஈடுபடமுடியாது. எல்லாம் நன்மைக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் தரும் செய்தீ. இலங்கையரசு தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் இதுவரைகாலமும் உலக நாடுக்ளின் அன்பளிப்பு,கடன்கள் ,ஐ எம் எப் கடன்களென்று போரிலே காலத்தை ஓட்டின இலங்கை இதுவரை பெற்ற கடன்களை கூடமீள செலுத்தாமல் பதிவழித்திருந்தது ஆனாலும் உலக நாடுகளின் அனுசரணை மூலம் இந்த சுரணை இல்லாத இலங்கைக்கு கடன் பெற வசதியாக விருந்தது.அனைத்து உலக நாடுகளும் இலங்கையை புறக்கணித்தால் இலங்கை நிச்சயமாக வழிக்கு வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.