Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன

Featured Replies

"போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன

என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்திய கிளர்ச்சிகள், உண்ணாவிரதங்கள், முழு அடைப்புகள், இயற்றிய தீர்மானங்கள் போன்றவற்றுக்கு உருப்படியான பலன் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் இதை காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு சில அமைப்புகள் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்சினையைத் தமிழ்நாட்டு தமிழர்கள் கையாளும்விதம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே இப்போதாவது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இனி எந்த அரசியல் கட்சியும் சமுதாய இயக்கமும் இதைத் தங்களுடைய தனியுரிமைப் பிரச்சினையாகக் கையில் எடுக்கக் கூடாது. தமிழர்களுடைய முழு அக்கறையும் ஆதரவும் தேவைப்படும் இப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

சர்வதேச அரங்கில் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஆற்ற வேண்டிய செயல்களை உடனே தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை, மருந்து போன்ற அவசியப் பொருட்களைத் திரட்டி அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமும் உற்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றின் தனித்தன்மையைக் காப்பதிலும் அங்கு மற்ற இனத்தவரைக் குடியமர்த்தாமல் தடுப்பதிலும் அக்கறை எடுக்க வேண்டும். தமிழர்களுக்குச் சம உரிமை, அந்தஸ்து வழங்கி தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்பட இந்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் அவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் மீண்டும் அணுகி உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைவிடுத்து தமிழ்நாட்டில் அறிக் கைப் போர் நடத்துவதும், சுவரொட்டி விளம்பரங்கள் செய்வதும் வழிநடைப் பயண இயக்கம் மேற்கொள்வதும் போட்டி உண்ணாவிரதங்கள் நடத்துவதும் நமக் குள் மேலும் பிளவைத்தான் ஏற்படுத்துமே தவிர, பிரச்சினை தீர இம்மியளவும் உதவாது. சில நாட்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முழு அமைதி காப்பதுகூட நல்லது என்று தோன்றுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் டுபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒற்றுமையுள்ள ஓர் அணியாகச் சென்று முறையிட்டு ஈழத் தமிழ் இனத்தைக் காப்பதுதான் விவேகமாக இருக்கும். வெற்று கூச்சல்களால் இந்தப் பிரச்சினை தீராது.

வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று சகல தரப்பினரும் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திப்பதைக் கைவிட்டு அறிவுபூர்வமாக சர்வதேச அரங்கில் காய்களை நகர்த்துவதே இலங்கைத் தமிழ் இனத்தைக் காப்பதற்குப் பெரிதும் உதவும். உடனடியாகப் போர்நிறுத்தம்; சர்வதேச அளவிலான சமரசத் தீர்வு இதற்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம்.

ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நோர்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்காவது உண்மையான அக்கறையுடன் நாம் செயல்பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், "போதும் நிறுத்துங்கள்' உங்கள் அரசியலை!

தினமணி ஆசிரியர் தலையங்கம்

9 மார்ச் 2009

http://www.thinakkural.com/

போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன?

என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்திய கிளர்ச்சிகள், உண்ணாவிரதங்கள், முழு அடைப்புகள், இயற்றிய தீர்மானங்கள் போன்றவற்றுக்கு உருப்படியான பலன் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?

இந்த மாதிரியான கிளர்ச்சிகளால் , உண்ணாவிரதம் , கடையடைப்புகள் , தீர்மானங்கள் ஆகியவற்றால் தான் இலங்கை ராணுவத்திற்கான உதவி குறைக்கப்பட்டு இருக்கிறது . தமிழர்களின் கொலை கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறது . தமிழின துரோகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது . தமிழர்கள் மானம் வேகம் சூடு சொரணை அனைத்தையும் முழுவதுமாக இழக்கவில்லை என வெளிப்படுத்தியது . இன உணர்வு மேல் கையை வைப்பது முதலுக்கே மோசம் ஆகும் என அரசியல் வாதிகளுக்கு தெரிவித்தது. ஈழத்தை எதிர்த்தவரை எல்லாம் உண்ணாவிரதம் இருக்க செய்தது .

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் இதை காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு சில அமைப்புகள் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்சினையைத் தமிழ்நாட்டு தமிழர்கள் கையாளும்விதம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே இப்போதாவது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரசை பிச்சை எடுத்தால் தான் தமிழினம் பிழைக்குமா ? நம்மினம் சாக மூல முதல் காரணமே காங்கிரஸ் தான் . தமிழர்களின் தேசிய நீரோட்டத்தை சிதைத்து அரசியல் லாபம் பார்க்கும் கேவலமான பிறவிகள் . இந்தியா என்பது தமிழர்களும் இணைந்த பல பூக்களின் மாலையே என்பது இவர்களுக்கு தெரியாதா? . இந்தியா ஒருமைப்பாடு என்பது ஒரு இன மக்களின் உணர்வை இழிவு படுத்துவது இந்திய இறையாண்மையை இழிவு படுத்துவது போல ஆகும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதா ?

காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பது கூட பெரும்பாலான தமிழ் மக்களின் மன உணர்வே ஆகும் . அதனால் இது தவறில்லை. காங்கிரஸ் ஐ நம்பினால் தான் அது தமிழ் மக்களுக்கு எதிரானது ஆகும்

இனி எந்த அரசியல் கட்சியும் சமுதாய இயக்கமும் இதைத் தங்களுடைய தனியுரிமைப் பிரச்சினையாகக் கையில் எடுக்கக் கூடாது. தமிழர்களுடைய முழு அக்கறையும் ஆதரவும் தேவைப்படும் இப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

இதைதான் ஏற்கனவே தி மு க காங்கிரஸ் இரண்டும் நாடகம் ஆடி அமைத்த எதோ ஒரு இயக்கம் செய்வதாக கூறினார்களே . இதுவரை என்ன புடுங்கி இருக்கிறார்கள் என இது அங்கே போய் கேட்க வேண்டிய கேள்வி

சர்வதேச அரங்கில் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஆற்ற வேண்டிய செயல்களை உடனே தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை, மருந்து போன்ற அவசியப் பொருட்களைத் திரட்டி அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமும் உற்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் . செஞ்சிலுவை சங்கத்தையே குண்டு போட்டு ராணுவம் கொள்ளும் போது என்ன செய்ய

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்.

இது ஏதோ வேண்டும் என்றே தமிழர் போராட்டத்தை சிதைக்க உள் நோக்கத்தோடு எழுப்பப்படும் கேள்வி என நினைக்கிறன் இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றின் தனித்தன்மையைக் காப்பதிலும் அங்கு மற்ற இனத்தவரைக் குடியமர்த்தாமல் தடுப்பதிலும் அக்கறை எடுக்க வேண்டும். தமிழர்களுக்குச் சம உரிமை, அந்தஸ்து வழங்கி தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்பட இந்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்.

எப்படி ?

விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் அவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் மீண்டும் அணுகி உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலை புலிகள் ஏற்கனவே தயார் என அறிவித்து ரொம்ப நாள் ஆச்சு . ராணுவத்திடம் தான் பேச வேண்டும்

இதைவிடுத்து தமிழ்நாட்டில் அறிக் கைப் போர் நடத்துவதும், சுவரொட்டி விளம்பரங்கள் செய்வதும் வழிநடைப் பயண இயக்கம் மேற்கொள்வதும் போட்டி உண்ணாவிரதங்கள் நடத்துவதும் நமக் குள் மேலும் பிளவைத்தான் ஏற்படுத்துமே தவிர, பிரச்சினை தீர இம்மியளவும் உதவாது. சில நாட்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முழு அமைதி காப்பதுகூட நல்லது என்று தோன்றுகிறது.

இல்லை இது தவறான வேண்டுகோள் . கொஞ்சம் அமைதி காத்தால் கூட தமிழர் மேல் குண்டு மழை பொழிய ஆரம்பிக்கும்

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் டுபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒற்றுமையுள்ள ஓர் அணியாகச் சென்று முறையிட்டு ஈழத் தமிழ் இனத்தைக் காப்பதுதான் விவேகமாக இருக்கும். வெற்று கூச்சல்களால் இந்தப் பிரச்சினை தீராது.

வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று சகல தரப்பினரும் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திப்பதைக் கைவிட்டு அறிவுபூர்வமாக சர்வதேச அரங்கில் காய்களை நகர்த்துவதே இலங்கைத் தமிழ் இனத்தைக் காப்பதற்குப் பெரிதும் உதவும். உடனடியாகப் போர்நிறுத்தம்; சர்வதேச அளவிலான சமரசத் தீர்வு இதற்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம்.

ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நோர்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்காவது உண்மையான அக்கறையுடன் நாம் செயல்பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், "போதும் நிறுத்துங்கள்' உங்கள் அரசியலை!

மேற்கூறிய மூன்று கருத்துக்களை தலைவணங்கி ஏற்கிறேன் . யார் பொறுப்பு ஏற்பது ? தினமணி தயாரா ???

தினமணி ஆசிரியர் தலையங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.