Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா போடும் கணக்கு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா போடும் கணக்கு...

சென்னை எழும்பூர் மியூசியம். கட்டட ஓரத்தில் கடைவிரித்தது அலப்பறை டீம்.

நான் கொஞ்சம் ஓவர். அதிகமா பேசிடுவேன். அதனால் வரமுடியாது என்ற சுவருமுட்டி சுந்தரத்தை ஆள்வைத்து தூக்கி வந்திருந்தார்கள். வானம் மப்பும் மந்தாரமுமாக ஊட்டி மாதிரி இருந்தது டீமுக்கு வசதியாகப் போய்விட்டது. வழக்கம் போல் பேசிய சித்தன், நேற்று அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்ட இடத்துக்கு யார் போனது. புதுசா தகவல் ஏதாவது இருக்கா. மக்கள் என்ன பேசிக்கிட்டாங்க? என்றார்.

"ஒரு விஷயத்துல சந்தோஷம். ஒரு விஷயத்துல வேதனை. அதாவது அ.தி.மு.க.விலேயும் இருக்கு ஈழ ஆதரவாளர்களுக்கு நம்ப கட்சி ஒண்ணுமே செய்யலைங்கிற கவலை போயிடுச்சு. அந்த விஷயத்துல சந்தோஷம். அதே நேரத்துல இப்படியான போராட்டத்தை ஒரு நாலுமாசம் முன்னாடி தொடங்கியிருந்தா இன்னும் ரொம்ப நல்லா இருந்திருக்குமே. கருணாநிதி மாதிரியான எதிர்தரப்பு ஆளுங்க தேர்தல் நாடகம் போடுறாரு ஜெயலலிதான்னு சொல்றதுக்கு வாய்ப்பு இல்லாம போயிருக்கும். இப்ப பாரு. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி போச்சுன்னு பேசிக்கிட்டாங்கப்பா..."- கோபாலு.

அதுசரி. யார் அரசன். யார் புருஷன்- அன்வர்பாய்.

"காங்கிரஸ்தான் அரசன். எப்படியும் அந்தக்கட்சி வந்துடும். அதுக்கு அந்தக் கட்சியிலேயே இருந்த அம்மா காங்கிரஸ் ஆளுங்களே தூபம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. எப்படியும் காங்கிரஸ் அ.தி.மு.க பக்கம் வந்துடும்ங்கிற தைரியத்துலதான், அம்மா இலங்கைத் தமிழர் விஷயத்தை கண்டுக்காம விட்டு வெச்சாங்க. இந்தியா இலங்கை நாட்டு விஷயத்துல தலையிட முடியாது. சண்டைன்னு நடந்தா அப்பாவி பொதுமக்கள் சாகத்தான் செய்வாங்க அப்டீன்னு எல்லாம் சவுண்ட் விட்டாங்க. இப்ப பாரு. காங்கிரஸ் காலை வாரி விட்டுடுச்சு. இதனால புருஷனான மக்கள் வாக்க வாங்க முடியாத நிலை. என்னதான் அ.தி.மு.க உண்ணாவிரதம், இலங்கைத் தமிழருக்கு ஒரு கோடி கட்சி நிதி அப்படி இப்படின்னு பல்டி அடிச்சாலும் மக்கள் நம்புவாங்களான்னு பெரிய சந்தேகமே இருக்கு"- சுவருமுட்டி சுந்தரம் சவுண்ட் தொடங்கியது.

சரி. நம்ப கலைஞர் என்ன செய்யப்போறாராம்?- கோபால்.

"என்ன செய்வாரு. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு. சாணக்கியத்தனம்னு செயல்பட்டவருக்கு அதுவே மரணக்குழி. போக்கு அப்படித்தான் போகுது. ஜெயலலிதா தேர்தலுக்காகத்தான் இப்போ இலங்கை ஆதரவு சவுண்ட் விடுறாருன்னு பக்கம் பக்கமா அழுதபடியே அறிக்கை விடுறாரு. கடிதம் எழுதறாரு. சரி. உருப்படியா நீ என்ன செய்தேன்னு கேட்டா ஐயகோ. தம்பி தமிழ்ச்செல்வனுக்காக கடிதம் எழுதினேனே அப்படீங்கிறாரு. தலிவரே. அதெல்லாம் ரொம்ப முன்னாடி. சோனியா அரசு இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததை ஏன் தடுக்கலைன்னு கேட்டா, ஐயையோ. நான் ஆஸ்பிட்டல்ல படுத்துக்கிடந்தது இந்த தமிழ் சமூகத்துக்கு தெரியாதா?ங்கிறாரு. அது இப்போதான். இடையில நாலுமாசமா இந்தா பாரு, அந்தா பாருன்னு அறிக்கை விட்டே மகள் கனிமொழிகிட்ட ராஜினாமா லெட்டர் வாங்கின பிறகு என்ன செய்தீங்கன்னு கேட்டா, அடடா உடன்பிறப்பே. இதுகூட தெரியாதா. வரலாற்றை திரும்பிப்பார். புரட்டிப்பார்ங்கிறாரு. அதையெல்லாம் பார்க்குறதுக்குள்ள அங்கே இலங்கை தமிழினமே காணாம போயிடும். இங்கே எலக்ஷன்ல நீயும் காணாமா போயிடுவேன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாரு. எல்லாத்துலேயும் அனுபவரீதியா பார்த்துடறதுன்னு இருக்காரு"- சுவருமுட்டி போட்டுத்தாக்க தொடங்கியிருந்தார்.

சரிப்பா. கொஞ்சம் பார்த்துப்பேசு. இறையாண்மைக்கு எதிரா பேசினதா உள்ள போயி கம்பி எண்ணப்போறே- சித்தன்.

"ஆங். இது ஒண்ணு இருக்கா. இப்போவெல்லாம் கலைஞர், சோனியாவை திட்டினாக்கூட இறையாண்மையைக் கொச்சைப்படுத்தியதா உள்ளே வச்சுடறாங்களேப்பா. இப்படியே போனா மக்களெல்லாம் சேர்ந்து அவிங்க ரெண்டு பேத்தையும் வெளியே வச்சுடுவாங்க. தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சி கடந்த 42வருஷமா வெளியேதான் இருக்கு. இந்த தபா தி.மு.க வெளியேதான். தி.மு.க ஆளுங்களே முனகிகிட்டு திரியறாங்க. தலைவர் குடும்ப நலனை பத்தி கொஞ்சம் ஓவராவே யோசிச்சுப்புட்டாரு. எப்படியும் சென்ட்ரல்ல காங்கிரஸ்தான் வரும். கூட ஒட்டிக்கிட்டு இருந்தாதான் மகன் ஸ்டாலின் அரியணை நிரந்தரமா இருக்கும். இல்லாட்டி கவுத்திட்டு கட்சியையே ரெண்டு மூணா காங்கிரஸ் உடைச்சிடும். கடைசி காலத்துல அத கண்ணால பார்க்கணுமான்னு கணக்கு போட்டே கட்சிக்காரங்களான நம்பள மக்கள்கிட்ட இருந்து ஒரேயடியா பிரிச்சிட்டாரு. இப்போ எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு போய் ஓட்டு கேட்கறது. ஏற்கனவே கரண்ட் விஷயத்துல பாதி மூஞ்சிய ஆற்காட்டாரு கருக வச்சுட்டாரு. அப்பால விலைவாசி உயர்வு. சட்டக்கல்லூரி மாணவர் கலவரத்துல மக்கள் அபாயசங்கே ஊதிட்டாங்க. இப்போ வக்கீலுங்க போலீஸ் மோதலில் பாடையே கட்டிடுவாங்க போலிருக்கு. இலங்கைத் தமிழர் பிரச்னையவாவது உணர்வுப்பூர்வமா எடுத்துக்கிட்டுப் போய் மக்கள்கிட்ட ஓட்டு கேட்கலாமான்னு பார்த்ததையும் தலைவரு குடும்ப நலனுக்குள்ள போட்டு புதைச்சுட்டாரு" என்று சுவருமுட்டி சுந்தரம் அளந்து கொண்டே இருக்க, பயந்துபோன சித்தன் அவன் வாயைப்பொத்தி என்னய்யா ஓவராயிட்டா இப்படியா உளர்றது என்று அடக்கினார்.

"யோவ். நான் ஓவரானாலும் உண்மையைத்தான் சொல்வேன். விடுமய்யா" என்று எகிறிய சுவருமுட்டி, சந்தடிச் சாக்கில் பாட்டில் தண்ணீரை எடுத்து குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். குறுக்கிட்ட கோட்டை கோபாலு, "அண்ணே எனக்கொரு சேதி கிடைச்சது. கோட்டையில இருக்குற உயரதிகாரிங்க தரப்பு, இந்த அரசு என்னென்ன நலத்திட்டத்தை எல்லாம் செய்திருக்கு. எந்தெந்த மாவட்டத்துல திட்டம் நல்லாயிருக்கு. எந்த மந்திரிக்கு நல்ல செல்வாக்குன்னு எல்லாம் தகவல் திரட்டி தலைவருக்கு கொடுத்துக்கிட்டு வர்றாங்களாம். அத வச்சு ஏதாவது செய்ய முடியுமான்னு கலைஞர் யோசிக்கிறாராம்"- சுவருமுட்டி.

என்ன யோசிக்கிறாராம்?- அன்வர்பாய்.

"அதான்பா. நலத்திட்டத்தை மையம் வச்சுதான் எல்லாமும். இந்த இலங்கைத்தமிழர் விஷயத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளிடணும்னு நினைச்சிருந்ததை, இந்தம்மா ஜெயலலிதா உண்ணாவிரதம் தொடங்கி கெடுத்துப்புட்டாங்க. இனிமே இலங்கைத்தமிழரை மையம் வச்சுதான் பிரச்சாரமே இருக்கும். என்னதான் விலகிப்போனாலும் அந்தம்மா காங்கிரசையும், தி.மு.க.வையும் நாக்க பிடுங்கிற மாதிரி இல்ல கேள்வி கேட்கும். இலங்கைக்கு ராணுவ உதவி செய்தது யாரு? சோனியாவும் அவருக்கு பல்லக்கு தூக்கிச் சுமந்த கலைஞரும்தானே அப்படீங்கற கேள்விய எப்படி எதிர்கொள்றதுன்னு ப்ளான் பண்றாராம்பா"- கோபாலு.

எப்படி பிளான் பண்ணாலும் தேறுமான்னு உடன் பிறப்புகளே யோசிக்கிறாங்க. திருமங்கலம் இடைத்தேர்தல்ல கடைப்பிடிச்ச தி.மு.க வோட பிரியாணிக்கொள்கையை நடைமுறைப் படுத்தலாம். கூடவே ஓட்டுக்கு ரெண்டாயிரம், மூவாயிரம் கொடுத்திடலாம்னு வேற கணக்கு பார்க்குதாம் அறிவாலயம். கொடுத்துப் பிடுங்கலாம்ங்கிறதுதான் சிறப்புத் திட்டமாம். அதுக்கும் நம்ப தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா குறுக்கால கட்டையைப் போட்டிருக்கிறாராம். தேர்தல் அதிகாரி அவர்பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாரு. தலைவருதான் உடன்பிறப்பேன்னு கடிதம் எழுதி அந்தக்கடிதத்துல நரேஷ்குப்தாவை வறுத்தெடுத்துட்டாரு. இப்போ பதிலுக்கு வறுத்துடறேன் வா-ன்னு பம்மிக்கிட்டு நிக்கிறாரு. தேர்தல்விதி மீறல்னு இருந்தா உடனே கட்டம் கட்டி, இன்டர்நெட்டுல பட்டியலைப் போட்டு நாறடிச்சுடுவேன்கிறாரு. அப்படி இப்படின்னு அனுசரிச்சுப் போற அதிகாரிங்களையும், ஒழுங்கா நடவடிக்கை எடுக்கலேன்னா கடுமையான நடவடிக்கையை நான் எடுத்துடுவேன். சஸ்பெண்ட் வரைக்கும் போயிடும். ஜாக்கிரதைன்னு சொன்னதை வச்சு எல்லா அதிகாரிங்களும் தண்ணி அடிக்காமலே ஆடிப்போயிருக்காங்கப்பா" என்று சொல்லி சிரித்தார் சுவருமுட்டி.

அடங்க மாட்டேங்கிறாருப்பா சுவருமுட்டி. சரி. பா.ம.க, விஜயகாந்த் எல்லாம் என்ன முடிவுல இருக்காங்களாம்- கோபாலு.

"அதையேன் கேக்குற. கிராமத்துல மாட்டுச்சந்தை நடக்குமே. அங்க ஒரு துண்டுக்குள்ள ரெண்டு பேரு கையை விட்டுக்கிட்டு, விரல்பிடிச்சு இந்த அமவுண்ட்டுன்னு ரேட்டு பேசுவாங்கள்ல. அந்த மாதிரி டாக்டரய்யா. அந்தத் தொழில்ல நல்ல எக்ஸ்பர்ட். இந்தப்பக்கம் தி.மு.க.கிட்டே ஒன்பது எம்.பி தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதின்னு துண்டுக்குள்ள கையை நீட்டுறாரு. அந்தப்பக்கம் அ.தி.மு.க.கிட்டே ஏழு. கூடவே ஒரு ராஜ்யசபா சீட்டுங்கிறாராம்"- சுவருமுட்டி.

அதுக்கு ரெண்டு கட்சித் தலைவர்களும் என்ன சொல்றாங்க- கோபாலு.

"என்ன சொல்வாங்க. சான்சே இல்லை. வெறும் ஆறு எம்.பி தொகுதிதான். அதுவும் வடக்கு மாவட்டப் பகுதில மட்டும் கொடுக்க முடியாது. தெற்கே இரண்டு தொகுதி. ஜெயிக்கிறது உன்பாடு. அப்புறம் மகன் அன்புமணிய கொல்லைப்புற வாசல் வழியா பதவிக்கு அனுப்பி வைக்குற ராஜ்யசபா சீட்டு எதுவும் கிடையாது ன்னு அ.தி.மு.க அம்மா கறாரா சொல்லிட்டாங்களாம். இந்தப்பக்கம் கலைஞரோ, உடன்பிறப்பே. தமிழின உணர்வே. கொஞ்சம் தயவு பண்ணு. ஆறுதான் உனக்கு. கூட வேணும்னா மகனுக்காக ஒரு ராஜ்யசபா தர்றேன்னு சொல்றாராம். இன்னும் பேரம் படியல. கடைசியா எது சரிப்பட்டு வருதோ அதுக்கேத்த மாதிரி டாக்டரய்யா தமிழ் உணர்வை கூட்டி குறைச்சுக்குவாராம்"- சுவருமுட்டி.

அப்படிப்போடு. நம்ப கேப்டன் கணக்கு என்னவாம்-அன்வர்பாய்.

"ஐயோ. அவரு அலம்பல ஏன் கேட்குறே. இப்போ சட்டமன்ற எலக்ஷன் வந்தா நான்தான் சி.எம். அந்தளவு மக்கள் செல்வாக்கு இருக்கு. நான் தி.மு.க, அ.தி.மு.க மாதிரியான மாநில கட்சிங்க கூட கூட்டணி வைக்கமுடியாதுன்னு சொல்லிக்கிட்டு தேசிய நீரோட்டத்துல கலந்து காங்கிரஸ்கூட பேசுறாரு. உங்க கூடதான் கூட்டணி. தி.மு.க கூடவெல்லாம் பேசி சீட்டை வாங்கமாட்டேன். வேண்டும்னா அந்த கட்சிக்கிட்டே தொகுதிய வாங்கி உங்கமூலமா கொடுங்கன்னு சொல்றாராம். கூடவே பெரிய நிதியையும் கேட்டிருக்காராம். மத்தியில முன்ன நிதி பற்றாக்குறையா இருந்த கதர்சட்டைக்காரர்தான் பேச்சுவார்த்தை நடத்துறாராம். இந்தப்பக்கம் அ.தி.மு.க கூட்டணிக்கும் பேச்சு நடத்துறாரு. ரெண்டுமே படியலேன்னா, அய்யய்யோ. இந்தக் கட்சிகள் எல்லாம் ரொம்ப மோசம். நான் ஏற்கனவே சொன்னமாதிரி எந்த கட்சி கூடவும் கூட்டணி இல்ல. மக்கள்தான் என்னோட கூட்டணி அப்படீன்னு சவுண்ட் விடறதா இருக்காராம். அதுவும் இல்லாட்டி இலங்கைத் தமிழருக்காக இந்த தேர்தலையே புறக்கணிக்கணும் அப்படீன்னு பிளேட்டையே மாத்திப் போடறதா உத்சேமாம்"

ஏம்ப்பா. ஒரு பெரிய கட்சித்தலைவரு. இப்படி புறக்கணிச்சுப் பேசுவாரா?- சித்தன்.

"என் வாய ரொம்பக் கிளறாதீங்க. உண்மையைச் சொன்னா சுடும். தமிழ்நாடே இலங்கைத் தமிழருக்காக கொதிச்சுட்கிட்டிருக்கிறப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போவெல்லாம் கலைஞர், சோனியாவை திட்டினாக்கூட இறையாண்மையைக் கொச்சைப்படுத்தியதா உள்ளே வச்சுடறாங்களேப்பா.

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.