Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட் அணி தாக்குதல்"றோ"(RAW) மீது சந்தேகம்:பாகிஸ்தான்; புலிகளின் ஆதரவு தமிழகத்தில் பெருகிவரும் காலத்தில்தான் ராஜீவ்காந்தி கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் அணி தாக்குதல்"றோ"(RAW) மீது சந்தேகம்:பாகிஸ்தான்; புலிகளின் ஆதரவு தமிழகத்தில் பெருகிவரும் காலத்தில்தான் ராஜீவ்காந்தி கொலை

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 06:32.52 AM GMT +05:30 ]

பாகிஸ்தான் லாகூரில் சிங்கள கிரிக்கெட் அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள அணியினரில் பலர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களின் மீதான இந்த தாக்குதல் உலகையே அதிர வைத்தது.

பாகிஸ்தான் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. ஆரம்ப நிலை விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது.

அப்படி என்றால் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று ஆரம்ப கட்ட விசாரணையில், பாகிஸ்தானில் இந்த தீவிரவாத திட்டம் தீட்டபடவில்லை என்பது உறுதியானது. பாகிஸ்தானில் சிங்கள கிரிக்கெட் வீரர்கள் தாக்குதல் நடத்திய உடன் அந்த நாட்டு பாதுகாப்பு உட்துறை செயலர் இந்த தாக்குதலில் வெளிநாட்டு சக்தியொன்று இணைந்திருக்கிறது என்று கூறினார்

ஆரம்பத்தில் இந்த செயலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானின் பத்திரிக்கை "த டான்" இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதிகளின் கைவரிசை இல்லை என்று நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது :-

பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாதிகள் இவ்வளவு பெரிய தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியாது. ஏனெனில் முதல் குறிப்பாக அந்த பத்திரிக்கை சொல்வது தீவிரவாதிகளின் நிதி ஆதாரம்:-

உலகம் முழுவதும் பணம் கொழிக்கும் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மட்டும் பின் தங்கிவிடவில்லை, பாகிஸ்தான் கிரிகெட் சபை இந்தியாவை அடுத்து அதிக பணம் கொழிக்கும் ஒரு கிரிக்கெட் சபை. இந்தியாவில் எப்படி கிரிக்கெட் சபை சுதந்திரமாக செயல் படுகிறதோ அதே போல் பாகிஸ்தான் கிடிக்கெட் சபையும் மிகவும் சுதந்திரமாக செயற்படும் ஒரு அமைப்பு.

இந்த அமைப்பின் நிதி எந்த வழியில் செலவிடப்படுகிறது என்று கேட்பார் யாருமில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானின் கிரிக்கெட் சபை வருமானம் கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஆட்டங்கள் ரத்து மூலமாக வருமானம் பாதிக்கபட்டு வந்தது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வருமான பாதிக்கபடுவது மறைமுகமாக தீவிரவாத குழுக்களுக்கு வருமானம் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்

இந்த நிலையில் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் கிரிக்கெட் விளையாட வந்த சிங்கள அணியை தாக்கும்போது தற்போது உள்ள வருமானமும் போகக்கூடிய வாய்ப்பு என்பது அனைவருக்கும் தெரிந்தது.

அப்படி இருக்க பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதிகள் சிங்கள கிரிக்கெட் அணிமீது தாக்குதல் நடத்துவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

பாகிஸ்தானின் விசாரணையில் சிங்கள் கிரிக்கெட் வீரர்கள் மீதன தாக்குதலில்

லஷ்கர் -எ-தொய்பா, ஜமாத்-உத்-தவா, போன்ற பெரிய இயக்கங்கள் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தெரிந்து விட்டது. பாகிஸ்தானில் இயங்கும் மற்ற தீவிரவாத குழுக்கள் அனைத்தும் இந்த இரண்டு தீவிரவாத குழுக்களில் இருந்து பிரிந்து சென்றதும், மறைமுகமாக இந்த இரண்டு பெரிய குழுக்களின் கட்டளைகளை செய்யும் பலிபீடமாகத்தான் உள்ளது.

அப்படி ஏதாவது ஒரு சிறிய குழு இந்த செயலில் இறங்கினால், இந்த பெரிய குழுக்களும் இந்த தாக்குதல் திட்டத்தை தடுக்க முற்பட்டிருக்கும். அதே நேரத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் மும்பை நகரம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத குழுக்கள் என்று விசாரணையில் தெரிய வந்தும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பதும் உறுதியானது.

இந்த தாக்குதலினால் லஷ்கர்-ஏ-தொய்பாவின் பெயர் உலகம் முழுவதும் கெட்டுவிட்டதும் அல்லாமல் பாகிஸ்தானில் தங்களால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையும் வந்தது. லஷ்கர்-ஏ-தொய்பாவின் பல பெரிய தலைகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இது போன்ற பெரிய தீவிரவாத தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு செயற்படுத்துவது என்பது சாத்தியமில்லாதது. இவை அனைத்தையும் விட மிக முக்கியமான விடயம் லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற குழுக்களுக்கு ஆசான்கள் போன்று இருக்கும் தாலிபான் இயக்கத்துடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறது.

மேலும் தாலிபான்களுடன் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த இக்கட்டான நேரங்களில் இது போன்ற மிகப்பெரிய தாக்குதல் நடத்துவது என்பது தனது காலிலேயே சம்மட்டியை போட்டுக்கொள்வது போன்றதாகும். ஆகையால் இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் நடத்த சாத்தியமில்லை.

பாகிஸ்தானின் உட்துறை மந்திரி ரகுமான் மாலிக் சிங்கள கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் குறித்த ஆரம்ப கட்ட விசாரணை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை இன்று பாகிஸ்தானின் பிரதம மந்திரி யூசுப் அலி கிலானியிடம் சமர்ப்பித்தார். 40 பக்கம் அடங்கிய இந்த விசாரனை அறிக்கையில் மிகவும் தெளிவுபட விபரங்கள் அடங்கியுள்ளது. இதுவரை பத்திரிகைகளில் வெளியிடவில்லை என்றாலும் பாகிஸ்தானின் உட்துறை அமைச்சகத்தில் இருந்து இந்த விசாரணை அறிக்கையில் சில வெளிநாட்டு சக்திகள் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது

.

பாகிஸ்தானில் உள்ள தெற்கு வரிசிஸ்தானில் இருந்து இயங்கும் சில தீவிரவாத குழுக்கள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தாக்குதல் திட்டம், இதற்கான பண உதவி அனைத்தும் வெளிநாட்டில் தீட்டபட்டுள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தான் மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்டு நெருக்கடியாக சூழ்நிலையில் உள்ள நேரத்தில் சில வெளிநாட்டு சக்திகள் மிகவும் சாதூரியமாக செயல்பட்டு இந்த தாக்குதலை நிறைவேற்றி உள்ளது.

வெளிநாட்டு சக்தி என்பது இந்திய உளவுத்துறையான "றோ" வின் மீது சந்தேகக் குறி திரும்பி உள்ளது. சிங்கள கிரிக்கெட் வீரரகள் மீதான தாக்குதல் குறித்து சமீபத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையான "மவுசா" இந்த தாக்குதல் குறித்த திட்டம் பாகிஸ்தானின் அருகில் உள்ள நாடு ஒன்றிலேயே நடந்துள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய உளவுத் துறையான "றோ" இந்த தாக்குதல் விவகாரத்தில் திட்டம் ஏன் வகுக்கவேண்டும் என்றால் தற்போது உள்ள சூழலில் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் திட்டத்துடன் இறங்கி இருக்குமோ என்றும் உலக பாதுகாப்பு ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். RAW (றோ) ஏன் இந்த திட்டத்தை தீட்ட வேண்டும் சந்தேக பார்வை "றோ" வின் மீது ஏன் பதிய வேண்டும். இதற்கான சில முக்கியமான காரணங்களையும் சொல்கின்றனர்.

1, பாகிஸ்தான் மும்பை தாக்குதலுக்கு பிறகு உலக அரங்கில் பாகிஸ்தானின் மீதான நம்பகத்தன்மை கெட்டுவிட்டது.

2, இதன் மூலம் பல முதலீட்டாளர்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்ய தயங்குகின்றனர். தற்போது 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இங்கிலாந்து பெற்றோலிய நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தவிருக்கும் பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலை, கொரியாவுடன் இணைந்து செயற்படுத்தவிருக்கும் விவசாய அபிவிருத்தி திட்டம் இந்த இரண்டு திட்டம் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பாகிஸ்தானுக்கு அள்ளித்தரும் மற்றும் சுமார் 40 இலடசம் பேருக்கு நேரடி மறைமுக வேலைவாய்ப்பு, இது போன்ற பல திட்டங்கள் செயல்பட இருக்கும்போது மும்பை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

3, பாகிஸ்தான் அரசும் தீவிரமாக செயல்பட்டு உலக நாடுகளில் மெல்ல மெல்ல இழந்த தனது செல்வாக்கை மீட்டு வருகிறது. மேலும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா சமீபத்தில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டிருக்கிறது.

"பாகிஸ்தானும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவுடன் தனது நட்பை புதுப்பித்து தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவன் கிடையாது என்று கூறிக்கொண்டு வருகிறது".

பாகிஸ்தானின் இது போன்ற பிரசாரத்தால் மும்பை தாக்குதல் குறித்த தாக்கம் விரைவில் உலக அரங்கில் காணாமல் போனது. இது பாகிஸ்தானின் பிரசாரத்திற்கு கிடைத்த வெற்றியே என்று கூறலாம்.

பாகிஸ்தானின் இந்த வேகத்தை தடுப்பதற்காக நேரடியாக பாகிஸ்தானிலே, ஏனெனில் புலிகளின் வளர்ச்சியை ஆரம்ப காலத்தில் இருந்தே தடுப்பதில் முனைப்பாக செயற்பட்டு வந்தது "றோ" அமைப்பு. தமிழகத்தில் விடுதலை புலிகளின் ஆதரவு அதீதமாக பெருகிவரும் காலத்தில் தான் ராஜீவ் காந்தி கொலை. அதன் பிறகு இந்தியாவில் விடுதலை புலிகளின் மீதான தடை,

விடுதலை புலிகளுக்கு எதிராக தமிழகத்தில் பிரசாரம் என வெற்றி கண்ட றோவிற்கு சமீபத்திய விடுதலை புலிகளுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலைகளை மீண்டும் திசை திருப்பும் நோக்கமாகவும் சிங்கள கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இதற்கு ஏற்றாற்போல் தாக்குதல் நடந்த உடன் இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று அடுத்த நிமிடமே செய்திகள் ஒலிபரப்ப தொடங்கிவிட்டது.

வெளி நாட்டு தொடர்பு இருக்கிறதென்பது வேறு எந்த நாடும் இந்த சம்பவத்தில் ஈடுபடுவதற்காக தெளிவாக காரணங்கள் எதுவுமே இல்லாத நிலையில் இந்திய உளவுத்துறை மீது சந்தேகம் வரத் தொடங்கியுள்ளது

தமிழ்வின்

Edited by rathy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.