Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை பேக்கரியில் வாங்கிய உணவுகளை உண்டவர்களில் வைத்தியசாலையில் 107 பேர் அனுமதி ஒருவர் பலி

Featured Replies

திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களும் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. வெதுப்பகமொன்றிலிருந்து கொள்வனவு செய்த பொருள்களை உட்கொண்ட 107 மாணவர்கள் சுகவீனமுற்றதைத் தொடர்ந்தே அனைத்து வெதுப்பகங்களும் சீல் வைக்கப்பட்டள்ளன.

வெதுப்பகமொன்றில் கொள்வனவு கொள்வனவு செய்த பாணை உற்கொண்ட திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து திருகோணமலையிலுள்ள பாடசாலைகளில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைகளுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் 107 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதுடன், 4 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எமது செய்திப் பிரிவுக்குக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களையும் மூடி சீல்வைத்துள்ளனர்.

எனினும், அச்சமடைந்த மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதால் திருகோணமலை நகரில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பதற்றம் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு உணவு விஷமானது என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் உணவு நஞ்சான சம்பவம் குறித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில் : நீதிமன்றம் உத்தரவு

வீரகேசரி இணையம் - திருகோணமலையில் உணவுப் பண்டங்கள் நஞ்சான சம்பவம் தொடர்பாக இரண்டு பேக்கரிகளின் உரிமையாளர்கள் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விகாரை வீதியிலுள்ள பேக்கரியொன்றின் உரிமையாளரான செல்லத்துரை மகேந்திரன், பிரதான வீதியிலுள்ள பேக்கரியொன்றின் உரிமையாளரான பரராஜசிங்கம் மோகன் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு திருகோணமலை மஜிஸ்திரேட் ரி.எல்.ஏ.மனாப் முன்னிலையில் இந்நபர்களைப் பொலிஸார் ஆஜர்படுத்தினர். பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை மஜிஸ்திரேட் பிறப்பித்தார்.

அதேவேளை பேக்கரியொன்றில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சானதன் காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் 10ஆம் குறிச்சியைச் சேர்ந்த 62 வயதான மீனவர் ஜீவநாயகம் துரைரட்னத்தின் சடலத்தை பிரேதப் பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் கையளிக்கமாறு மஜிஸ்திரேட் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை நடைபெறும் மரண விசாரணையின் போது சாட்சிகளை ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கான உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சந்தேகத்திற்குரிய இரண்டு பேக்கரிகளிலிருந்து உணவுப் பண்டங்களைக் கைப்பற்றிய பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினர் மறு அறிவித்தல் வரை குறிப்பிட்ட பேக்கரிகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, குறித்த பேக்கரிகளில் உணவு பண்டங்களை வாங்கி சாப்பிட்டு வாந்தி,மயக்கம், வயிற்றுளைவு போன்ற அறிகுறிகளுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மரணமடைந்தவர் உட்பட 4 மீனவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஈ.ஞானகுணாளன் தெரிவித்தார்.

இவர்கள் நால்வரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த பேக்கரியொன்றில் வாங்கிய பாண், கறி என்பவற்றை காலை உணவாகவும், இரவு உணவாகவும் கடற்றொழிலுக்கு சென்றிருந்த வேளை சாப்பிட்டதாகவும் அவர் கூறுகின்றார். பாடசாலை மாணவர்கள் உட்பட ஏனையோர் நேற்றைய தின்மே வாந்தி, மயக்கம், தலையிடி போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தனர் எனவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலை தகவல்களின் படி 202 மாணவர்கள் உட்பட 270 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர் .104 பேர் தவிர்ந்த ஏனையோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

நோய்வாய்ப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் வாந்தி ஆகியவற்றுடன் பேக்கரியில் கைப்பற்றப்பட்ட உணவு மாதிரிகளும் அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கும் இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

.........

தமிழரை குண்டுபோட்டு கொல்வது போதாதென்று , நஞ்சு வைத்தும் கொல்கிறார்களோ .........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.