Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் கோரும் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்தத் தயார்- கெஹலிய

Featured Replies

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பரிந்துரைக்கப்பட்டபடி மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்துகொள்வது குறித்துப் பரிசீலிக்கத் தயார் என இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்தார்.

மோதல் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்து, இலங்கை அரசாங்கம்

பரிந்துரைக்கும் வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றி சர்வதேச நடவடிக்கை படையணியொன்று அங்கு நுழைவதற்கும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும் என்று பாதுகாப்புப் பேச்சாளர் தெரிவித்தார்.

"20 சதுர கிலோமீற்றர் பிரதேசத்துக்குள் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற வழிசெய்யும் என்றால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மற்றும் ஏனைய சர்வதேச நாடுகள் பரிந்துரைக்கும் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தத்துக்கு நாம் தயார்'' என்றார் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல.

அரசாங்கம் வகுக்கக்கூடிய வழிமுறைகள் எவை என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்காவிட்டாலும், கள நிலைமைகளைப் பொருத்து அவை காலத்துக்குக் காலம் மாற்றமடையலாம் என்று மட்டும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் செய்துகொள்ளப்பட்டு, மனிதாபிமான தலையீட்டுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என, கடந்த வியாழனன்று நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐ.நா. சார்ப்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது குறித்தும் இதன்போது கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும் என்று அமெரிக்கத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

"மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக 48 மணிநேர மோதல் நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் செய்தபோதும், புலிகள் அதற்கு இணங்காத காரணத்தினால் மக்கள் தொடர்ந்தும் அங்கு சிக்குண்டுள்ளனர்'' என்று இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் ஒரு மோதல் இடைநிறுத்தம் செய்துகொள்ளப்படுவதாயின் இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் வழிமுறைகளுக்கு அமையவே அது மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கெஹலிய, வெளியாரின் தலையீடோ, செல்வாக்கோ இதுவிடயத்தில் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்று கூறினார்.

"பொதுமக்களைக் கருத்தில் கொண்டு எதிரிக்கு எதிரான விமான மற்றும் கனரக ஆயதப் பயன்பாட்டை நாம் நிறுத்திவிட்டோம். அதேநேரம், பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்து தாக்குவதன் மூலம் புலிகள் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்'' என்று தெரிவித்த அமைச்சர் றம்புக்வெல்ல,

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு போர்நிறுத்தம் குறித்து அரசாங்கம் ஆர்வம் கொள்ளவில்லை எனவும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிய பின்னர் பாதுகாப்புப் படையினர் புலிகளை இல்லாதொழிப்பர் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் இலங்கை விவகாரம் குறித்துக் கலந்துரையாடுவதற்கு சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வியாழனன்று கூட்டப்பட்ட உத்தியோகப்பற்றற்ற பாதுகாப்புசபைக் கூட்டத்தின் பின்னர் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தத்துக்கான கோரிக்கை இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புலிகளை சிக்கலில் மாட்டிவிட்டு தாங்கள் தப்பிக்க ஒரு திட்டம் ஆனால் இதற்கும் அவர்களிடம் வழி உள்ளது :)

  • கருத்துக்கள உறவுகள்

இது புலிகளை சிக்கலில் மாட்டிவிட்டு தாங்கள் தப்பிக்க ஒரு திட்டம் ஆனால் இதற்கும் அவர்களிடம் வழி உள்ளது :o

இதற்கு வழி அவர்களிடம் இருக்கோ இல்லையோ புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருக்கிறது.

கமாஸ் இயக்கம்.. பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும்.. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்தும் அதனை துடைத்தழிக்க இஸ்ரேல் காசாவில் ஆக்கிரமிப்புச் செய்ய பலஸ்தீனர்கள் அனுமதிப்பதில்லை. எப்போது இஸ்ரேல் காசா நோக்கி நகர்கிறதோ அப்போ எல்லாம் பலஸ்தீனர்களும் சர்வதேசமும் இஸ்ரேலை வெளியேறக் கேட்கின்றனவே தவிர.. கமாஸை அழித்துவிட்டு.. வெளியேறும் வரை பலஸ்தீனர்கள் காசாவை விட்டு வெளியேறனும் என்று கேட்பதில்லை.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் போராட்டங்களில் யுத்த நிறுத்தத்தை வழியுறுத்துகிறார்கள்.. புறக்கணி சிறீலங்காவை வழியுறுத்துகிறார்கள்.. எவராவது தமிழர் தேசத்தில் இருந்து சிறீலங்கா படைகளை வெளியேற்று என்று கோரி இருக்கின்றனரா.. இல்லை..!

We want Tamil Eelam என்கின்றனர்.. எவராவது We dont want SL army in our home land என்று கோசம் போட்டிருக்கின்றனரா. இல்லை..! இது சிங்கள இராணுவத்தை அனுமதித்தபடி தமிழீழம் கோரும் வினோத கோசமாகவே இருக்கிறது..! அதுதான் ரம்புக்வல போன்றவர்கள் இவ்வளவு இடாக்காகப் பேச காரணம் அமைக்கிறது.

நாமும் எமது குரல்களின் பாணியை சிங்கள ஆக்கிரமிப்புக்கு வசதியாகத்தான் இட்டு வருகின்றோம். பலஸ்தீனர்கள் சொல்வது போல நாம் பலமாக ஒருமித்த குரலில் இஸ்ரேலே வெளியேறு என்று சொல்வதில்லை. பலஸ்தீனர்கள் காஸாவிற்குள் மட்டும் இல்லை. மேற்குக்கரையில் வாழ்கின்றனர் அது இஸ்ரேலுக்கு சார்பான பலஸ்தீனர்களின் நிர்வாகத்தில் இருக்கிறது. அதுமட்டுமன்றி பலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்குள் பொருளாதார தேவைகள் கருதிப் போகின்றனர். அதையெல்லாம் காரணம் காட்டி காசா மக்களை வெளியேற்றி கமாஸை அழிக்கப் போறம் என்று இஸ்ரேல் சொன்னால் ஐநாவோ இதர சர்வதேச சமூகமோ.. அரபு உலகமோ ஏற்குமா..??!

ஏன்.. பலஸ்தீன மக்கள் தான் ஏற்பரா.

ஐநாவினதும்.. சர்வதேசத்தினதும் இந்தக் கோரிக்கைகளுக்கு நாம் தான் இடமளித்தோமே அன்றி. சிறீலங்கா அல்ல.

புலிக்குத்தடை என்று புலிக்கொடியை ஒளித்ததும் நாம் தான். புலிக்குத் தடை என்று தலைவரின் படத்தை ஒளித்ததும் நாம் தான். தமிழீழம் கேட்கும் நாம் சிங்களப்படைகளை வெளியேறவோ வெளியேற்றவோ கேட்பதில்லை ஏன்..???! அவ்வளவு பாசமா அவர்கள் மீது.

சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணத்திலும் இதர தமிழீழப் பகுதிகளிலும் கொல்லப்பட்டு தென்னிலங்கையில் வகைதொகையின்றி கதைதுகள் காணாமல் போதல்கள் நிகழும் நிலையிலும்.. அங்குள்ள தமிழ்மக்களை பாதுகாக்க தனி அரசு அமைக்கவும்.. சிங்களப் படைகளை வெளியேற்றி தமிழர் தாயகத்தை சிங்களப் படைகளற்ற தேசமாகவும் மாற்றித்தர ஏன் நாம் உலகிடம் குரல் கொடுக்கவில்லை..??! இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன..??! :):lol: :lol: :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

29/03/2009, 13:02 [ கொழும்பு நிருபர் மயூரன் ]

ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் கோரும் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்தத் தயார்- கெஹலிய

வன்னியில் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் கோரும் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்தத் தயார் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சிவிலியன்களை பாதுகாக்கும் நோக்கில் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அவர் சிவிலியன்களை விடுதலை செய்யும் நோக்கில் ஏற்கனவே 48 மணிநேர யுத்த நிறுத்தமொன்று அறிவிக்கப்பட்ட போதிலும் அதன் மூலம் எவ்வித பயனும் கிட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்படமாட்டாது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கனரக ஆயுதங்களைக் கொண்ட தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன்கள் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டால் விரையில் புலிகளை முற்றாக தீர்த்துக்கட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டள்ளது. 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 8000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள் என ஐ.நா மனித உரிமை ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போது மனித உரிமை ஆணையாளர் நவநீதப்பிள்ளை மீது இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்து.

இந்நிலையில் அமெரிக்கா, பிரித்தானிய உட்பட பல நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக இந்த முடிவை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை போரியுள்ள 190 கோடி டொலர் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அந்த அமைப்பினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையிலும் இந்த போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.