Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம் பெயர்ந்த மக்களிடையே உளவியல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன வன்னி உளவியல் இணைப்புக் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடம் பெயர்ந்த மக்களிடையே உளவியல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன வன்னி உளவியல் இணைப்புக் குழு:

குறுகிய காலத்திற்குள் பல்வேறு தடவை இடம் பெற்ற இடப் பெயர்வு, இம்மக்கள் தமது பொருளாதார மூலங்களை இழந்துள்ளமை, ஒவ்வொரு தருணத்தையும் குண்டுவெடிப்புகள் ஷெல்தாக்குதல்கள் குறித்த அச்சத்துடனேயே கழிக்க நேர்கின்றமை, தமது அன்புக்குரியவர்கள் கொல்லப்படுவதையும் காயமடைவதையும் கண்ணால் காண நேர்பவை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருந்துகள் இல்லாமை, உணவுத் தட்டுப்பாடு பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக உணவை தேடிக்கொள்வது சவாலான விடயமாக உள்ளமை, இவ்வகையான காரணங்களால் இடம் பெயர்ந்த மக்களிடையே உளவியல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என வன்னிப்பிராந்திய உளவியல் இணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் வைத்திய சாலையில் உளவியல் பிரிவு பதில் பொறுப்பதிகாரி டாக்டர் ஜே.சிவமனோகரன் மற்றும் வன்னிப்பிராந்திய உளவியல் இணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ்.எட்மன்ட் ரெஜினோல்ட் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவி;க்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கடுமையான யுத்தம் காரணமாக 333,000 மக்கள் இடம்பெயர்ந்து 12 கிலோமீற்றர் நீளமானதும் 1.5 கிலோமீற்றர் அகலமானதுமான குறுகிய நிலப்பரப்பிற்குள் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதி இலங்கை அரசாங்கத்தினால் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆட்லறி, கிளஸ்டர் குண்டு, பல்குழல் பீரங்கி, மோட்டார் ஷெல் மற்றும் நீண்டதூர வீச்சுடைய துப்பாக்கிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் 3000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7000 இற்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர்.

30 சதுரகிலோமீற்றரைவிட குறைந்த பரப்பளவுடைய இடத்தில் 333000 பேர் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் ஷெல் தாக்குதலில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிக உயர்வாக உள்ளது. அத்துடன் உணவுத் தட்டுப்பாட்டினாலும் இதே பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கொண்டுவரப்படும் உணவுப் பொருட்களிலேயே தங்கியுள்ளனர்.

ஏற்கெனவே பட்டினியால் 16 பேர் மரணமடைந்துள்ளமை மாத்தளன் வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மருந்துகள் இன்மையால் மோதல் தவிர்ப்பு வலயத்தில் ஷெல் தாக்குதல்களினால் தினமும் காயமடையும் நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையில் அங்கு இயங்கும் மருத்துவ நிறுவனங்கள் உள்ளன.

வன்னியில் தற்போது வசிக்கும் மக்களிடையே ஏற்பட்டுள்ள உளவியல் தாக்கங்களை மதிப்பிடுவது மிகவும் சவாலான விடயம். பல குடும்பங்கள் ஏற்கனவே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறவினர்களை ஷெல் மற்றும் வான் தாக்குதல்கள் காரணமாக இழந்துள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 5000 பேர் ஏற்கனவே அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் இடம்பெறும் கடும் ஷெல் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டு விடுவோம் அல்லது காயமடைந்துவிடுவோம் என்ற தொடர்ச்சியான அச்சத்துடன் மக்கள் உள்ளனர். பெரும்பாலான மக்கள் ஷெல் தாக்குதலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இரவுநேரங்களை பங்கர்களில் கழிக்கின்றனர்.

தற்போதைய யுத்தம் காரணமாக வன்னியில் 288 பாடசாலைகள் மீள திறக்கப்படாததால் 65000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட சுமார் 7800 மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். முன்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை 13000 சிறார்கள் இழந்துள்ளனர்.

உணவுத் தட்டுப்பாடு போஷாக்குப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பிள்ளைகளின் உடல் உள வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தாய்மார்கள் அனுபவிக்கும் அச்ச சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பல குழந்தைகள் உடல், உள பாதிப்புகளுடன் பிறக்கும் அபாயமுள்ளது. வன்னியில் சிசு மரண வீதம் உயர்வாகவுள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இதுவரை 128 சிறார்கள் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளனர்.

இப்பகுதியிலுள்ள வயோதிபர்கள் உணவு, போதிய மருந்துகளின்மை காரணமாக நோய்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.

யுத்தம் காரணமாக பிள்ளைகளால் வயோதிபர்கள் கைவிடப்பட்டுள்ளமை, குடும்பங்கள் பிரிந்துள்ளமை நிரந்தர சமூக பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது. ஏற்கெனவே மூன்று தசாப்த கால யுத்தத்தினாலும் 2004 ஆம் ஆண்டு சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட சமூகமொன்றையே நாம் கையாள்கிறோம் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்குள் பல்வேறு தடவை இடம்பெயர்ந்த இம்மக்கள் தமது பொருளாதார மூலங்களை இழந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு தருணத்தையும் குண்டுவெடிப்புகள் ஷெல்தாக்குதல்கள் குறித்த அச்சத்துடனேயே கழிக்கின்றனர். தமது அன்புக்குரியவர்கள் கொல்லப்படுவதையும் காயமடைவதையும் கண்ணால் கண்டவர்கள் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருந்துகள் இல்லை. உணவுத் தட்டுப்பாடு பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக உணவை தேடிக்கொள்வது சவாலான விடயம்.

பொதுமக்கள் பலர் உளவியல் பாதிப்புகளுக்காக மாத்தாளன் வைத்தியாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பலர் உயிர்வாழ்வதற்கான ஆர்வத்தை இழந்து, தற்கொலை மனப்பான்மையை கொண்டுள்ளமையை பரவலாக அவதானிக்க முடிகிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.globaltamilnews.net/tamil_news....=7755&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.