Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வர்ஷா கொலையின் மர்மங்கள் மறைக்கப்பட்டன - கொலையை விடுதலைப் புலிகள் மீது போடவும் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்ஷா கொலையின் மர்மங்கள் மறைக்கப்பட்டன - கொலையை விடுதலைப் புலிகள் மீது போடவும் திட்டம்

திகதி: 01.04.2009 // தமிழீழம் // [விடியல்]

திருகோணமலை பாடசாலைச் சிறுமி வர்ஷா கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்தின் மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கன்னியா காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை சென்.மேரிஸ் பாடசாலைச் சிறுமியான வர்ஷா (வயது 6) அண்மையில் சிலரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆறுபேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இதில் பிரதான சந்தேக நபரான ஒப்ரின் மேர்வின் நிரோஷன் (வயது 25) திருகோணமலை வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்வதற்காக பொலிஸார் தங்களது வாகனத்தில் கொண்டு சென்றபோது பொலிஸாரைத் தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறி பொலிஸார் இவரை சுட்டுக்கொன்றிருந்தனர்.

இதேவேளை, இந்தக் கடத்தல் கொலை வழக்கின் 2 ஆவது சந்தேக நபரான திருகோணமலை கந்தசாமி கோவில் வீதியைச் சேர்ந்த வரதராஜன் ஜனார்த்தனன் (வயது 24) என்பவர், உப்புவெளி செல்வநாயகபுரம் பகுதியில் தொழில்நுட்பக் கல்லூரிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைக் காண்பிப்பதாக பொலிஸாரைக் கூட்டிச் சென்றபோது புத்தகக் கட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சயனைட்டை அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே, இக்கொலை வழக்கின் 3 ஆவது மற்றும் 4 ஆவது சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் கன்னியா சாரதாபுரம் மாதஊத்துக் காட்டுப் பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் உறுதியாக வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் மீது சுமத்தும் முயற்சியாக சிறிலங்காவின் கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

இது பற்றி சிறிலங்கா பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்த்தன கூறுகையில்; இந்த சந்தேக நபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, திருகோணமலை அரசாங்க அதிபரையும் மாகாண ஆளுநரையும் கொலை செய்யுமாறு விடுதலைப் புலிகள் தங்களைப் பணித்துள்ளதுடன், இதற்காக தங்களிடம் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கியையும் தந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்தத் தற்கொலைத் தாக்குதல் அங்கியை எடுப்பதற்காக அவர்கள் தெரிவித்த காட்டுப் பகுதிக்கு நேற்று பிற்பகல் அழைத்துச் சென்றோம். அவ்வேளையிலேயே அங்கு மறைந்திருந்த விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களான சிவானந்தன் நிஷாந்தன் மற்றும் டானி ரெஜினோல்ட் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதுடன், அவர்களுடன் சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடியும் மற்றொரு கான்ஸ்டபிளும் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

இதேநேரம், அந்தப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அங்கியும் கைக் குண்டொன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் சிறிலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி இவங்கள் யாருக்கும் மலம்,சலம் போகாட்டியும் அதுக்கும் காரணம் புலிகள் தான் என்று சொல்லுவங்கள்

Edited by prasaanth

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.