Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வணங்கா மண்' ஒரு பாரதூரமான விடயம்: பிரித்தானிய அரசிடம் சிறிலங்கா தெரிவிப்பு

Featured Replies

லண்டனில் இருந்து வன்னிக்குப் புறப்படவிருக்கும் 'வணங்கா மண்' கப்பலில் ஏற்றப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்காக அல்ல தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவே ஏற்றிச் செல்லப்படுவதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இது ஒரு பாரதூரமான கரிசனைக்குரிய விடயம் எனவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளது.

முன்னர் நிவாரணத்துக்கான என வந்த கப்பல்களை ஆயுதக்கடத்தல்களுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ள லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதரகம், இந்த விடயம் தொடர்பாக தாம் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

"இந்தக் கப்பலின் பயணம் தொடர்பாக நாம் அறிவோம். இந்த விடயத்தில் நாம் அக்கறை கொண்டிருக்கின்றோம். இக்கப்பல் தொடர்பாக பாரதூரமான கேள்விகள் உள்ளன. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் எமக்குத் தெரியும்" என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளையில் சிறிலங்காவின் கடற்பரப்புக்குள் இந்தக் கப்பல் நுழைந்ததும் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் என வெளியான செய்திகளையும் தூதரகப் பேச்சாளர் மறுத்திருக்கின்றார். இந்தக் கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்பதையிட்டு அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார்.

கப்பல் சோதனை செய்யப்பட்டு மனிதாபிமான உதவிகள் மட்டுமே கப்பலில் உள்ளது என பிரித்தானிய அரசாங்கம் உறுதிமொழி தந்தால் அதனை அனுமதிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், சிறிலங்கா அரச தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்களை கப்பலில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்பவர்கள் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார்கள்.

மருந்து, குழந்தைகளுக்கான பால்மா, அரிசி, மா போன்றனவே இந்தக் கப்பலில் கொண்டு செல்லப்படுவதாகவும், சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கே இவை விநியோகிக்கப்படும் எனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

'வணங்கா மண்' கப்பலில் உள்ள அனைத்துக் கொள்கலன்களும் பிரித்தானிய அதிகாரிகளால் சோதனையிடப்பட்டவை எனவும் தெரிவித்த அவர், இவற்றை அனுமதிப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

புதினம்

வடபிராந்தியத்தில் மோதல் பகுதியில் சிக்கியிருக்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களுக்காக 400 தொன் உணவு மற்றும மருந்துப் பொருட்கள் பிரிட்டனில் சேகரிக்கபட்டு கப்பலில் அனுப்புவதற்கு எற்பாடுக் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த உதவியானது 'புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும போர்வை' என்ற விசர்னம் கொழும்பிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

'வணங்கா மண்' என்ற கப்பலிலேயே இந்த நிவாரணப் பொருட்கள் வன்னிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இக்கப்பல் பயணம் தொடர்பாக பிரபல்யப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் பதன் கிழமை அரசியல்வாதிகள், தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள், பிரமுகர்கள் மத்திய லண்டனில் ஒன்று கூடியதாகவும் அடுத்த வார முற்பகுதியில் இக்கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்று 'காடியன்' பத்திரிகை நேற்று தெரிவித்தது.

புதன் கிழமை மத்திய லண்டனில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிவர்ளில் மொடல்களான ஜஸ்மின் கின்னஸ், ஜேட் பாhர்பிற் மற்றும் ஓர்பிங்டன் எம்.பி. ஜோன் ஹோரம் என்போர் முக்கியமானவர்களாவர். ஜோன் ஹோரம் எம்.பி. தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்றக் குழுவில் உறுப்பினராகவுள்ளார்.

மருந்து, குழந்தைகளுகாகன பால்மா, அரிசி, மா என்பனவற்றையே இந்த வணங்கா மண் கப்பல் ஏற்றிச் செல்லும் என்றும் இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயமெனப் பிரகடனப்படுத்தபட்டுள்ள பகுதியிலுள்ள மக்களுக்காகவே இப்பொரு.ட்கள் கொண்டு செல்லப்படவுள்ளதாக இந்த நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது.

ஆயினும், இது பாரதூரமான கரிசனைக்குரிய விடயமென சிங்கள அரசு கூறுகிறது.

முன்னர் நிவாரணப் பொருட்களுடன் வந்த கப்பல்களை ஆயுதக் கடத்தலுக்கு புலிகள் பயன்hபடுத்தியதாக அரசு கூறியுள்ளது.

'இக் கப்பல் தொடர்பாக நாம் அறிவோம். இந்த விடயத்தை பிரி. அதிரகாரிகளின் கனவனத்திற்கு நாம் கொண்டு சென்றுள்ளளோம்.' என்று பிரி. உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் 'கார்டியனுக்கு' தெரிவித்துள்hர்.

'நாம் அக்கறை கொண்டுள்ளோம். இக்கப்பல் தொடர்பாக பாரதூரமான கேள்விகள் உள்ளன. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து எமக்குத் தெரியும்' என்றும் தூதரகப் பேச்சாளன் மேலும் கூறியுள்ளார்.

இதே வேளை இலங்கையின் கடற்பரப்புக்குள் 'வணங்காமண்' நுழைந்தவுடன் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் என்று ஊடகச் செய்திகளை பேச்சாளன் மறுத்திரு;ககிறார். இந்த உதவியை அனுமதிப்பதா? இல்லையா என்ன்பது தொர்பாக அரசு பரசீலிக்கும். கப்பல் சோதனை செய்யபட்டு மனிதாபினமான விநியோகமே அங்கு இருக்கிறது என்ற உறுதி மொழியை பிரட்டிஷ் அரசிடமிருந்து பெற்றுக் கொண்டால் அரசு இது தொடர்பாக பரசீலிக்க கூடும் என்று தூதரகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

'அக்ற் நௌ' (இப்போதே செயற்டுவோம்) என்ற இந்த நடவடிக்கைக் குழுவின் பணிப்பாளர்களில் ஒருவரான கிரகாம் வில்லியம்சன் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறார்.

வணங்கா மண்ணின் சகல கொள்கலன்களும் பிரி. அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். "மூன்றாவது தரப்பொன்று சோதனையிடப்பட்டமை போதாதா? வேண்டுமென்றே எதிர்மறையானதாகவும் உதவியை அனுமதிக்காமல் விடுவதற்கான சாட்டை கண்டுபிடிக்கவும் அரசு முயற்சிப்பதாக நான் நினைக்கின்றேன்' என்றும் அவர் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க இக்கப்பல் தொடர்பாக தங்களுக்குத் தெரியுமெனவும் இலங்கை அரசு தங்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டதாகவும் பிரி. வெளிவிவகார அமைச்சின் பெண் பேச்சாளர் கார்டியனுக்கு தெரிவித்தரு;கிறார்.

சம்பந்தப்பட்ட பிரி. அதிகாரிகளின் கவனத்துக்கு இத்தகவலை தெரிவித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்குமாறு குரல் கொடுக்கும் பிரபல்யமானவர்களில தமிழ் பாடகி மாதங்கி அருட்பிரகாசம் (MIL) எழுத்தாளர் அருந்ததி ரோயும் அடங்கியிருப்பதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.