Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் மக்கள் அவலங்கள் - மனிதாபிமானப் பணியாளர் ஒருவரின் சாட்சியங்கள்.

Featured Replies

ஒலிப்பதிவு 1

ஒலிப்பதிவு 2

நன்றி

தமிழ்நெற்

முழுமையான ஆங்கிலச் செய்திக்கும், படங்களிற்கும்

உலகெங்குமே நடக்காத ஒரு விடயம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் தெய்வா என்கிற மனித நேயப் பணியாளர். தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளரான இவர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்துள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் கடந்த 48 நாட்களாகப் பணியாற்றி வருகிறார்.

இலங்கை இராணுவத்;தின் தாக்குதலில் படுகாயமடையும் பொது மக்கள் வன்னியிலிருக்கும் இந்த ஒரேயொரு வைத்தியசாலைக்குத் தான் எடுத்து வரப்படுகின்றனர்.

இலங்கை அரச படைகள் தமது தாக்குதல்கள் மூலம் ஒரு இனஅழிப்பை நடாத்திக் கொண்டிருக்கின்றன. அவர்களைப் பட்டினிச்சாவுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. வெளியுலகம் இவற்iறையெல்லாம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார். தமிழ் மக்கள் முற்றாகவே அழிந்து போக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா?

இரண்டு வாரங்களுக்கு முன்பு நாங்கள் மிக அவலமான ஒரு நிலைமையில் இருந்தோம். செல் ஒன்று வீழ்ந்து வெடித்து ஒரு குடும்பத்தில் மூத்த குழந்தை இறந்து விட்டது. படுகாயமடைந்த தந்தையும் தாயாரும் இரண்டாவது குழந்தையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அக்குழந்தை ஒரு எட்டு மாதக் குழந்தையாக இருந்தது. தாய்ப்பாலே குடித்து வந்தது.

குழந்தைக்குச் சிறு காயமே ஏற்பட்டிருந்தது. ஆனால் தாயாருக்கோ ஒரு பக்க நெஞ்சிலும் மார்பிலும் செல் தாக்குதலில் கடும் காயமேற்பட்டிருந்தது. தாயாருக்கு முதலுதவி வழங்கப்பட்டதும் தாயார் தன்குழந்தைக்குப் பசியாற்ற விரும்பினார். தாயார் குழந்தையை அணைத்தபடி இருந்தார். சிறிது நேரத்தில் தாயார் இறந்து விட்டாரென்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் குழந்தை இறந்த தாயாரிடம் பால் குடித்தபடியே இருந்தது...

இறந்த தாயாரிடமிருந்து அந்தக் குழந்தையைத் தூக்கிய போது அது வீரிட்டு அழுத அழுகையை என்னால் இன்னமும் மறக்க முடியாமலே இருக்கிறது என்கிறார் தெய்வா என்கிற தெய்வேந்திரம்.

இந்த வேலையைச் செய்வதற்கு பெருமளவில் சுயகட்டுப்பாடு தேவை. ஆனாலும் கூட மிக அவலமான தருணங்களில் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுவதை தடுக்க முடிவதில்லை என்கிறார் அவர்.

பெப்ரவரி 10ம் திகதியிலிருந்து ஆகக்குறைந்தது படுகாயமடைந்த 6600 பேர் புதுமாத்தளனிலிருந்து திருகோணமலைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என சர்வதேச செஞ்சிலுவைச்சங்க சத்திரசிகிச்சை நிபுணர் மார்ட்டின் ஹேர்மன் தெரிவித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் வைத்தியசாலையில் பணியாற்றுவதென்பது மிகப் பயங்கரமானது என்று அவர் சொல்கிறார்.

திருமலைக்கு வந்து சேர்ந்துள்ள நோயாளர்கள் முற்றாகக் களைப்படைந்த நிலையிலேயே வந்துள்ளனர். மருத்துவப் பற்றாக்குறையாலும், பெருமளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரேயொரு தற்காலிக வைத்தியசாலையான புதுமாத்தளன் வைத்தியசாலையை நாடுவதாலும் அவர்கள் ஒட்டி உலர்ந்தவர்களாகவும் மிகவும் பலவீனமானவர்களாகவும் காணப்படுகின்றனர்.

படுகாயமடைந்த பல கர்ப்பிணிப் பெண்கள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னொருநாள் 7 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்து அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய வயிற்றிலிருந்த சிசு செல்லின் துண்டுகள் தாக்கியதில் படுகாயமடைந்திருந்தது.

இவ்வாறான ஒரு சம்பவத்தைக் காண்பது என் வாழ்நாளிலேயே இது தான் முதல் முறை. வயிற்றினுள் இருந்த சிசு கொல்லப்பட்டது மட்டுமல்ல. பிறக்காத அந்தச் சிசுவின் தலையின் ஒரு பகுதி சிதைந்தும் இருந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் உயிருடனிருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.

இது மிகப் பயங்கரமானது. அச்சமூட்டக் கூடியது. எனக்கு எங்காவது சென்று ஓவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது.

சிறுவர்கள் காயமடைதல் என்பது மிகப் பயங்கரமானது. ஒரு ஆறு மாதக் குழந்தைக்கு கால்விரல்கள் பிளந்திருந்தது. இவ்வாறான காயங்கள் இங்கு சாதாரணமானவை. நாளாந்தம் இவ்வாறு ஏராளமான காயமடைபவர்களை நாம் காண்கிறோம்.

வலைஞர் மடத்திலிருந்து ஒரு 14 வயது இளைஞி ஒருவர் வைத்தியசாலைக்குச் கொண்டு வரப்பட்டிருந்தார். அவருடைய மார்பிலும் வயிற்றிலும் செல் துண்டுகள் தாக்கியிருக்கின்றன. இந்த இளைஞியின் தாயார் அவருடைய மற்றிரு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள். அந்தத் தாயார் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. அத்தோடு அவர் இரத்தப் போக்கினால் இரத்தத்தையும் இழந்திருந்தார். இதன்காரணமாக அவர் இரத்தம் வழங்கும் தகுதியும் இல்லாதிருந்தார். சற்று நேரத்தில் காயம்பட்ட அந்த இளைஞி மரணமானாள்.

மார்ச் 31ஆம் திகதி படுகாயமடைந்த 120 பேர் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் தமது கைகளை அல்லது கால்களை அல்லது இரண்டையும் இழந்திருந்தனர். அத்தோடு அவர்கள் இரண்டு மூன்று நாட்களாக எதனையும் சாப்பிட்டிருக்கவுமில்லை. இன்று காலையில் ஏதாவது சாப்பிட்டீர்களா என்று அவர்களுள் எவரைம் கேட்டால் வெறும் பிளேன் ரீ மட்டும் குடித்தோம் என்பார்கள்.

என்னால் இவற்றை விபரிக்க முடியவில்லை. மிகவும் பலகீனமான வஞ்சிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த அரசின் மிகப்பெரும் துயரமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இன்னொரு நாள் ஒரு இளம் தாயார் தனது கைகுழந்தைக்கு பால்மாவைத் தேடியலைந்தார். நான் தாய்ப்பாலைக் கொடுக்குமாறு கூறியபோது தான் சரியாக உணவு உண்ணாததால் குழந்தைக்குப் பால் கொடுக்கப் பால் சுரப்பதில்லை என்று வேதனையோடு கூறினார். அந்தக் குழந்தையோ ஓயாமல் அழுது கொண்டேயிருந்தது. அத்தோடு அக்குழந்தை போசாக்கின்றியும் இளைத்துப் போயுமிருந்தது. நான் காணும் பெரும்பான்மையான குழந்தைகள் போசாக்கின்றியும் போதிய வளர்ச்சியின்றியும் இருக்கின்றன.

சிலநாட்களுக்கு முன்னதாக மூன்று ட்ராக்டர் நிறைய காயமடைந்த மக்கள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களுள் பெரும்பாலானவர்கள் மிகப்பெரியளவில் காயமடைந்திருந்தார்கள். முதற்கட்டமாக அவர்கள் உயிர்பிழைப்பதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டேன். அங்கு வந்திருந்த ஒரு மனிதரின் கண்முழி வெளியே வந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவருக்கு கண்ணில் மட்டுமே காயம்பட்டிருந்தது. அதற்கு மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டியிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு செல் வந்து வைத்தியசாலைக்குள் விழுந்தது. நானும் அவரும் நிலத்தில் தூக்கி வீசப்பட்டோம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாங்கள் பணியாற்றுகிறோம்.

காயம்பட்டவர்களை நிலத்திலேயே படுக்க வைக்கிறோம். எங்களிடம் பாய்கள் கூட இல்லை. விரிப்பதற்குத் துணியோ அல்லது பிளாஸ்டிக் சீற்றோ எதுவுமில்லை. எங்களால் காயம்பட்ட எல்லோரையும் காப்பாற்ற முடிவதில்லை. பெரும்பாலும் கைகளையோ அல்லது கால்களையோ அல்லது இரண்டையுமோ இழந்தவர்கள் இரத்தப் பெருக்கினாலேயே மரணமடைந்து போகிறார்கள்.

நாங்கள் மிக வேகமாக சுழன்றடித்துப் பணியாற்ற வேண்டியிருக்கிறது. அந்தப் படுக்கையிலிருப்பவர் இறந்து விட்டாரா? அவரைத் தூக்கி வெளியே போட்டு விட்டு அந்த இடத்தில் அடுத்தவருக்கு மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கிறது. இது தான் நாங்கள் பணியாற்றுகிற சூழல்.

படுகாயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் ட்ராக்டரில் லோட் கணக்கில் ஏற்றிக் கொண்டு வரப்படுகிற போது ஐந்து நிமிடம் கூட எங்களால் ஓய்வெடுக்க முடிவதில்லை.

தொடர்ந்த செல் தாக்குதல் காரணமாக மக்கள் தெருவெங்கும் பிணமாகக் கிடக்கிறார்கள். அநாதவராக இருக்கும் அவ்வாறானவர்களின் உடல்களை எடுத்து வந்து பெறக்கூடிய தகவல்களைப் பெற்று உறவினர்களுக்கு அறிவிப்பதும் தகவல்கள் ஏதுமில்லாதவர்களுடைய முகங்களை படம் பிடித்து விட்டு அவற்றை தாழ்ப்பதுமான பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.