Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணிவே துணை!- தமிழ்வாணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமும் துணிவும்

மாறுபட்ட மனநிலைகளா?

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அச்சமும் துணிவும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட மனநிலைகள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. பல சமயங்களில் உண்மையான துணிவுக்கு, அச்சமே செவிலித் தாயாக அமைகிறது!

அச்சம் எப்போது ஏற்படுகிறது? ஒரு மனிதனை ஆபத்துகள் சூழும்போதுதான் அச்சம் தோன்றுகிறது.

அந்த அச்சத்தின் பொருள் என்ன? அதனால் விளையக்கூடிய பயன் என்ன?

நாம் காட்டு வழியே தனிமையில் நடந்து செல்லுகிறோம். அப்போது திடீரென்று ஒரு புலி எதிர்ப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே, நம் உள்ளத்திலும் உடலிலும் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

புலி நம்மீது பாயப் போகிறது. அதனிடமிருந்து நாம் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற தீவிர உணர்ச்சிதான் அச்சம். அந்த அச்சம் வந்தவுடன், தம் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள சகல சக்திகளும், நொடிப் பொழுதுக்குள் எழுச்சி பெற்று விடுகின்றன. நம்முடைய சிந்தனையும் செயல்களும், புலியிடமிருந்து எப்படித் தப்புவது என்ற ஒரே ஒரு குறிக்கோளை நோக்கியே ஒருமுனைப்படுகின்றன. இந்த நேரத்தில் நம் உடம்பிலுள்ள சில சுரப்பிகள் அபரிதமான அளவில் சுரக்கின்றன. உடனே நம்மில் இயல்பாகவே குடி கொண்டுள்ள சோம்பேறித்தனமும் அலட்சிய மனப்பான்மையும் பளிச்சென்று மறைந்து, ஒரு புதுமையான விறுவிறுப்பும் ஆற்றலும் நம் நாடி நரம்புகளை அசைக்கின்றன. ஆட்டுகின்றன. நாம் ஒரு நோயாளியாக இருந்தால்கூட, அந்நேரத்தில் அந்த நோய் பறந்துவிடுகிறது. ஒருவன் முட்டாளாய் இருந்தால்கூட அந்த நேரத்தில் அவனுடைய முட்டாள்தனம் ஒழிந்துபோய், புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. அந்தப் புலியிடமிருந்து தப்புவதற்கான ஏதாவது ஒரு யுக்தி, நம் உள்ளத்திலே மின்னல் வேகத்தில் தோன்றுகிறது. அப்படித் தோன்றுகிற அந்தக் கணத்திலேயே, நாம் அதைச் செயல்படுத்தத் தொடங்கி விடுகிறோம்.

அச்சத்தைத் துணிவுடைமை ஆக்கும் வழி என்னவென்று புரிகிறதல்லவா?

நம்முள்

உறங்கிக் கிடக்கும் சக்திகள்

எப்போது

எழுச்சி பெறுகின்றன?

புலியினால் கொல்லப்படுவதற்குப் பதிலாக ஒருவன் வெள்ளத்தினால் கொல்லப்படுவானானால் அவனை அந்த வெள்ளத்திலே குதிக்கவைத்த துணிவினால் அவன் உண்மையிலேயே ஒரு பயனையும் அடைந்தவனாய் ஆகமாட்டானே? என்று கேட்கப்படலாம்.

சாதாரண மனநிலையில் இருக்கும்போது அந்த வெள்ளத்திலே குதித்து இருப்பானானால் அந்த வெள்ளத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் அவனுடைய உடம்பிலோ உள்ளத்திலோ இருந்திருக்கமாட்டா. ஆனால், அவன் இப்போது புலிக்குப் பயந்து அல்லவா வெள்ளத்தில் குதித்து இருக்கிறான்? அந்தப் புலியைக் கண்டவுடன் அவன் உடம்பிலும் உள்ளத்திலும் எத்தனையோ விதமான சக்திகள் எழுச்சி பெறுகின்றன.

பலவிதமான சக்திகள் எழுச்சி பெற்ற நிலையில் உள்ள மனிதனுக்கும், சாதாரண நிலையிலுள்ள அதே மனிதனுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண நிலையில் உள்ளபோது குதித்திருந்தால் அவன் வெள்ளத்தால் விழுங்கப்படுவான். தன்னுடைய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எழுந்து செயல்படுகிற நிலையில் குதித்தவன் அந்த வெள்ளத்தை வென்று கரையேறி விடுவான். இங்கு அவனுக்குத் துணிவே துணையாக நிற்கிறது. துணிவே துணை!

நாம்

செயற்கரிய

காரியங்களைச் செய்வதற்கு

முயல வேண்டும்

மனிதன் செயற்கரிய காரியங்களைச் செய்து பழகவேண்டும். அப்போதுதான் அவன் பெருமைக்குரியவனாக வளரமுடியும். வாழ முடியும்!

செயற்கரிய காரியங்களை முயற்சியுடன் செய்யும்போதுதான் மேலும் மேலும் அவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கிறது. தன்னுடைய முயற்சிகளில் வெற்றி அடையும்போதெல்லாம் வாழ்க்கையில் அவனுக்கு உள்ள தன்னம்பிக்கை உறுதிப்படுகிறது. தன்னம்பிக்கை எந்த அளவுக்கு உறுதிப்படுகிறதோ, அந்த அளவுக்கு அவன் தான் எண்ணியதையெல்லாம் எண்ணியபடியே முடிக்கக்கூடிய பேராற்றலைப் பெற்றுவிடுகிறான்.

இந்தப் பேராற்றலை ஒருவன் பெற வேண்டுமானால், அதற்கு முதலிலே அவன் செயற்கரிய காரியங்களைச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

செயற்கரிய காரியங்கள் என்பது என்ன?

எவராலும் செய்வதற்கு அரிய காரியங்கள் என்பது அதன் பொருள் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தனிப்பட்ட ஆற்றல்களை கருத்திலே கொண்டு பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்ற முடிவுக்கு வருகிறான் அல்லவா? அப்படி ஒரு முடிவுக்கு வரும்போது தன்னால் முடியாத காரியங்கள் என்று அவன் எவற்றை நினைக்கிறானோ அவற்றை விட்டு விட்டு, தன்னால் முடியக் கூடிய காரியங்கள் என்று எவற்றை நினைக்கிறானோ அவற்றை மட்டுமே செய்ய முயற்சி செய்வதுதான் இன்று சமுதாயத்திலே காணப்படுகிறது.

தங்களால் முடியக்கூடிய காரியங்களில் மட்டுமே ஈடுபடக்கூடியவர்கள் ஆற்றலிலோ அல்லது புகழிலோ என்றைக்கும் சிறியவர்களாகத்தான் இருப்பார்களே தவிர பெரியவர்களாக வளர அவர்களால் முடியாது.

மிருகங்களிடமிருந்து

பயில வேண்டிய

பாடம்

மிருகங்களிடம் குணம் உண்டு. ஒன்று எதிர்த்துத் தாக்கும் அல்லது ஓடிவிடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து கொண்டு அஞ்சி விழிக்காது. தாக்குதலில் இறங்குவது என்று முடிவு செய்துவிட்டால் தன் உயிர் போகும் வரையில் தன் துணிவைக் கைவிடாது.

உதாரணமாகப் பூனையை எடுத்துக் கொள்வோம்.

பூனை, திறந்த வெளியில் நம்மைக் கண்டால் ஓடிவிடும். சாதாரணச் சைகையாலேயே அதை ஓட்டிவிடலாம். இதை வைத்துப் பலர் பூனையைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதாவது பூனை ஒரு சாதுவான பிராணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது உண்மையல்ல.

தோற்றத்தால் அது எளிமை வாய்ந்த பிராணியாக இருக்கலாம்.

ஆனால், அதன் மனம் மிக உறுதி வாய்ந்தது.

‘பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி’ என்ற பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

போலித்தனமான குணங்களைத் தன்னகத்தே அடக்கிக்கொண்டு லஞ்சம் தீர்க்கும் மனிதர்களை இந்தப் பழமொழியால் குறிப்பிடுவதுண்டு.

ஆனால், இந்தப் பழமொழி முக்கியமாகப் பூனையின் இயல்பையும் குறிக்கின்றது என்று அறியமாட்டார்கள்.

பூனை, பார்ப்பதற்குத்தான் பூனை. ஆனால், அது பாயத் தொடங்கிவிட்டால் செயலில் புலியைப்போல் இயங்கும்.

அதாவது, ஒரு பூனையைத் தனி அறையில் அடைத்துவிட்டு, ஒரு மனிதன் அந்த அறையில் தடி ஒன்றுடன் நுழைந்துவிட்டான் என்றால், அப்போதுதான் அவனால் பூனையின் இயல்பை உணர முடியும்.

பூனை அந்த அறையினுள் கொடிய விலங்காகிவிடும். அடிபட்டுச் செத்துப் போவது உறுதி என்றாலும் நமக்கிருக்கும் ஒரே வழி துணிந்து இந்த மனிதனுடன் போராடுவதுதான் என்ற முடிவுக்கு அது வந்துவிடும்.

மனிதன் வெல்வானா பூனை வெல்லுமா என்பதல்ல பிரச்னை. ஆனால், இந்தப் பூனையின் இயல்பிலே மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய ஒர் உண்மை இருக்கிறது. எந்தச் செயலிலும் வேறு வழியே இல்லையென்றால் துணிந்துவிட வேண்டியதுதான். துணிவு ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும். ஆனால் அந்தத் துணிவு முன்னர் குறிப்பிட்டதுபோல் அறிவு பூர்வமாகவும் நாணயமானதாகவும் இருக்க வேண்டும். வெற்றி நமக்குத்தான்.

பொருளாசை

எப்போது

போற்றத்தக்கது?

புகழாசையைப் போற்றுகிறவர்கள், பொருளாசையையும் காதல் வேட்கையையும் இழிவாக எண்ணுகிறார்கள். இவை இழிவானவை அல்ல. உயர்ந்தவையே!

காதல் வேட்கையினாலோ பொருளாசையினாலோ ஒரு மனிதன் கீழ்த்தரமான செயல்களில் இறங்குவானானால் அது கண்டிக்கத்தக்கது. அதற்கு மாறாக, ஒருவன் செயற்கரிய செயல்களில் ஈடுபடுவதற்கு அந்த இரண்டு ஆசைகளும் துணை செய்யுமானால், அவை போற்றத் தக்கனவே.

செயற்கரிய செயல்களைச் செய்யத் தூண்டுகிற அளவுக்கு ஒரு சராசரி மனிதனுடைய உள்ளத்திலே காதல் வேட்கையோ, பொருளாசையோ, புகழாசையோ அவ்வளவு தீவிரமாக எழுவது இல்லை. அது தீவிரமாக எழாத நிலையில் ஒரு மனிதன் தோல்வியைக் கண்டு அஞ்சுகிறவனாக இருக்கிறான். ஒருவன் தோல்வியைக் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கும் வரையில், அவனால் எந்த ஒரு விஷயத்திலும் துணிந்து செயல்பட முடியாது. முடியவே முடியாது!

நாம் செய்ய நினைப்பதோ, எளிதிலே கைகூட இயலாத காரியம். எனவே, அந்தக் காரியத்தில் நமக்குள்ள வெற்றி வாய்ப்புகளைக் காட்டிலும், தோல்வி வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு வேளை வெற்றி கிடைத்துவிட்டால், அது மிகவும் பெருமைக்குரியதுதான். ஆனால், தோல்வி வந்துவிட்டாலோ, நாம் தாங்கமுடியாத துன்பத்திற்கு ஆளாகி விடுவோமே என்று தயங்குவது ஒரு சராசரி மனிதனுடைய குணம்.

தோல்வியினால் ஏற்படக்கூடிய அவமானத்தை எண்ணி மனிதன் அஞ்சுகிறான். இந்த அச்சம் உள்ளத்தில் இருக்கும் வரையில் பொருள் ஈட்டும் செயல்களில் இறங்குவதற்கான துணிவு வராது; வரவே வராது.

தோல்வியை எண்ணி அஞ்சுகிறவன், தன்னையும் அறியாமல் தோல்வியையே எதிர்பார்க்கிறான். உள் உணர்வு தோல்வியை எதிர்பார்த்தால், மேலும் மேலும் தோல்விகள் வந்துகொண்டே இருக்கும்.

தொடரும்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரதி அக்கா உங்கள் பதிவுக்கு.

அருமையான விடயம். தற்போதைய சூழ்நிலைக்கேற்ப உங்கள் விடயம் அமைந்துள்ளது

அதாவது களத்திலும்,புலத்திலும் நடைபெறும் போராட்டங்களுக்கும், சிலரின் மௌனத்தை கலைக்கவும்

பலரின் சந்தேகத்தை போக்கவும் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.