Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல் முனைப்பு, புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல் முனைப்பு, புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் – பழ.நெடுமாறன்

வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் முனைப்பிற்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க...

http://www.pathivu.com/news/1201/54/.aspx

நன்றி - பதிவு

எங்களுக்கு யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி, டி வி ஐ இன் கொண்டாட்டம் என்டு ஏகப்பட்ட "எழுச்சி" நிகழ்வுகள் இருக்கு..இதுக்குள்ள உந்த மனிசன் சும்மா எங்கள கிளர்ந்தெழு அதுஇது என்டு சொல்லிக்கொண்டு இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சிறிலங்கா கூட்டுப் படுகொலையைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்களை பேரெழுச்சி கொள்ளுமாறு கோரிக்கை

திகதி: 05.04.2009 // தமிழீழம் // [சோழன்]

வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் முனைப்பிற்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் சிறீலங்கா படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, சிறீலங்கா அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.

இந்திய தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என கொங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

வன்னியில் சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் தாக்குதலின் பின்னணியிலும், நேரடியாகவும் இந்திய அரசாங்கமும், படையினரும் முழு அளவில் இருப்பதாக, தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பழ.நெடுமாறனும், தமிழ் மக்களிற்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் ஒரேயொரு சிங்கள கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சிறீலங்கா படையினரது தாக்குதல் முனைப்பு பற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், தாக்குதல் முனைப்பு உண்மையாக இருந்தால் பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உடனடியயான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இது தொடர்பான தார்மீகக் கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, சிறீலங்கா அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

sankathi

சிங்னளம் ஊடகப்போர் புரிகின்றது. எமது ஊடகங்கள் தொலை பேசி நிகழ்சிகளை நடாத்தி ஒப்பாரிவைத்துக்கொண்டு இருக்கின்றன. மக்களை எழிச்சி அடைய வைப்பதற்கு பதிலாக மனச்சோர்வடையவைப்பதாகவே இருக்கின்றது.

எமது ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் மிகக்குறைவானவர்களாகவே இருக்கின்றார். அறிவிப்பாளர்கள் இக்காலத்திற்கு ஏற்ற நிகழ்சிகளை தயபரித்து வளங்குவதற்கு வக்கற்றவர்களாவே இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்னளம் ஊடகப்போர் புரிகின்றது. எமது ஊடகங்கள் தொலை பேசி நிகழ்சிகளை நடாத்தி ஒப்பாரிவைத்துக்கொண்டு இருக்கின்றன. மக்களை எழிச்சி அடைய வைப்பதற்கு பதிலாக மனச்சோர்வடையவைப்பதாகவே இருக்கின்றது.

எமது ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் மிகக்குறைவானவர்களாகவே இருக்கின்றார். அறிவிப்பாளர்கள் இக்காலத்திற்கு ஏற்ற நிகழ்சிகளை தயபரித்து வளங்குவதற்கு வக்கற்றவர்களாவே இருக்கின்றார்கள்.

சரியாகச் சுட்டியுள்ளீர்கள் கலைவாணி.

மக்களை எழுச்சிப்படுத்தி வீதியில் இறங்கி ஒரு பலஸ்தீனியரைனப்போல், குர்திஸ்காரனைப்போல், ஆபிரிக்கனைப்போல் போராடும் வலுவை ஏற்படுத்தவதற்குப் பதிலாக ஒப்பாரி வைப்பதாகவே தோன்றுகிறது. போராட்டத்திற்கான தேவையான பங்களிப்புகள் தொடர்பாக அது தொடர்பான கருத்தாளம் மிக்க நிகழ்வுகள் அதிக அளவில் செய்யப்பட வேண்டும். இன்றும் இங்கு சில ஊடகங்கள் சீதையின் கற்பேன் சோதிக்கப்பட்டது, பசுமை நினைவுகள், சறுக்கி விழுந்தனீங்களா? ஜோடி நம்பர்1 என்று வேறு.........., அதில் ஆங்கிமும் கொச்சைத் தமிழ் உச்சரிப்புமாகத் தமிழ்க் கொலைக்காட்சிச் சேவைகளையல்லவா நடத்துகிறார்கள் சகோதரி.

தமிழ்மொழியூடான தொலைக் காட்சியென்றால், தமிழ் உச்சரிப்புச் சுத்தமாக இருக்க வேண்டாமா? இது தமிழை நச்சரிப்பது போலல்லவா இருக்கிறது. தமிழைச் சரியாக உச்சரித்துச் செய்வதற்க்குக் கூடத் தெரியாத அறிவிப்பாளர்கள் வேறு செய்கின்ற இம்சையை என்வென்று சொல்வது. தமிழினத்தின் சந்தாவில் தொலைக்காட்சிச் சேவைகளை நடத்தியவாறு, இப்படிச் செய்வது எத்துணைத் தமிழ் துரோகமென்பதை அவர்கள் உணர்வார்களா?

எங்கள் நேயர்கள் மட்டுமொன்றும் குறைந்தவர்களல்ல.எப்படியெனில?? யாராவது ஒரு கொச்சைத் தமிழ் அறிவிப்பாளர் நிகழ்ச்சி நடத்தும்போது, அந்தப் பாணிக்கே மாறிவிடுபவர்களும் உண்டு.சரியான தமிழை உச்சரிக்கத் தெரிந்தவர்கள் ஏன் மாறுகிறார்கள். தமது சரியான உச்சரிப்பைத் தொடரலாமல்லவா?

எமது உறவுகள் அழிவின் விழிம்பில் நிற்கும் இக்கால வேளையில், அதற்கு வியாக்கியானங்கள் வேறு. இதனை இப்படிச் சொல்லலாமா? செத்தவீட்டிலே நகைச்சுவை விடுவதுபோல் உள்ளது. ஊடகங்களிலும் ஜோடிகள் தங்களது வித்தகத் தன்மையை காட்டிப் புலம்பெயர் மக்களைத் திசை திருப்புகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Edited by Valukkiyaru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.