Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம்.

http://www.tamilnational.com/

US discuss humanitarian situation in Sri Lanka with Tamil Diaspora

THURSDAY, 09 APRIL 2009 01:16 ADMINISTRATOR

யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்த இணைப்பிலுள்ள செய்தியைப் பார்த்திருபீர்களென நம்புகிறேன். இதற்கான கருத்துகளைப் பின்னூட்டமிடுவதூடாக எமது கருத்துகளை இவர்கள் முன் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. நாம் அமெரிக்க அரசுத் தலைவர் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால் கொள்கையை மாற்றக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய தலைமைகள் பிராந்திய ரீதியாகச் செயற்பட்டு வருகின்றன. இதிலே உள்ள இருவரும் (திரு றிச்சட் பௌச்சர், திரு றொபேட் ஓ பிளேக்) அமெரிக்க நலன்களைத் தெற்காசியாவிலே பேணும் வல்லமை படைத்தோராவர். இவர்களை நோக்கியும் எமது கருத்துகள் சென்றடைய வேண்டும். ஏனென்றால் நாங்கள் இரவுபகலாகக் குளிரிலும் பனியிலும் மழையிலுமாக நித்திரை விழித்து வெள்ளை மாளிகையின் கதவைத் திறக்க வைத்தாலும், இவர்கள் சொல்கின்ற தகவல்களின் அடிப்படையிலேயே, அவர்களின் அரசுகள் சிந்திக்கும்.எனவே இதிலே அவர்களின் கூற்றுக்கள் என்பன எமது அறவழிப் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யக் கூடியதாகும். அதாவது மக்களைப் புலிகள் விடுவிக்க வேண்டுமெனக் கோருவதானது எத்துணை யதார்த்தத்துக்குப் புறம்பானதும் தமிழினப் படுகொலையை ஊக்குவிப்பதும், உதவுவதுமான நடவடிக்கையென இவர்களை நாம் கேட்க வேண்டும்.

எனவே தயவுசெய்து இதனையும் செய்வோம். ஏனென்றால் இவர்கள் தெரிந்து கொண்டே நடிப்பவர்கள். அந்த நடிப்பின் பொய்மைத் தனத்தைத் தமிழினம் கவனிக்கிறது என்ற எண்ணப்பாடு இவர்களுக்கு வரவேண்டும். அமெரிக்க அரசுத் தலைமை மட்டுமே மாறியுள்ளது. ஆனால் தெற்காசியாவில் புஷ்ஷின் ஆட்சியில் இருந்தவர்களே இன்றும் இருக்கிறார்கள். ஒரு மென்போக்கான தோற்றப்பாடு மட்டுமே காட்டப்படுகிறது என்பதே உண்மையாகும்.ஆனால் தெற்காசியாவில், இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளில் மாற்றம் வரவில்லை என்பதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. முன்னைய ஆட்சியிலே வெளிப்படையான நகர்வென்றால் இன்றைய ஆட்சியிலே மறைமுகமான நகர்வாக இருக்கிறது.

இதனையேதான் நாம் கடந்த காலங்களில் இந்தியா தொடர்பாகவும் செய்து வருகிறோம். தமிழக உறவுகள் எப்போதும் எம்முடனேயே ஆனால் வென்றெடுக்கப்பட வேண்டியவர்களை நாம் அணுகாமல் விட்டதன் விளைவே இன்று எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்குத் தடைபோட முனையும் காரணிகளாக உள்ளன. இப்படிச் சொன்னதும் இவர்கள் எங்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடுவார்களென்றல்ல. சிங்கள அரச பயங்கரவாதத்திற்குத் துணைபோவதையாவது தடுக்கலாம் என்பதேயாகும்.

- நன்றிகள் -

முடிந்த அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம். முயற்சியால் சிங்கள அரச பயங்கரவாதத்தை முறியடித்து எம் தேசம் காப்போம்

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தேசம்.

எல்லாக் கதவுகளையும் தட்டுவோம். எல்லோரும் இணைந்து தட்டுவோம்.மூன்று பின்னூட்டங்களே பதியப்பட்டுள்ளது. கண்டும் காணததுபோல் இருந்தவர்கள் பொதுவான மொழியாடல்களையே வெளிப்படுத்தகிறார்கள். இவர்களை நீதியின் பக்கம் நின்று பேசவைக்கத் தொடர் முயற்சிகள் தேவை. தயவுசெய்து அனைவரும் இணையுங்கள்.

" நாடு பெரிதானால் தமிழ்த் தேசியத்தின் முன் நாமென்றும் சிறியவர்களே. ! "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.