Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இங்குள்ள குழந்தைகள் தாலாட்டுப் பாடல்களைக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் இறந்து கொண்டிருப்பவர்களின் மரண ஓலத்தைத் தான்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள குழந்தைகள் தாலாட்டுப் பாடல்களைக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் இறந்து கொண்டிருப்பவர்களின் மரண ஓலத்தைத் தான்:

இலங்கை அரசாங்கம் அதனைப் பாதுகாப்பு வலயம் என்று கூறலாம். ஆனால் அங்கு பாதுகாப்பில்லை. எந்தக் கவனிப்பும் இல்லாத பிரதேசம் அது. உணவும் கூட எதுவும் இல்லை.

கடந்த மாத ஆரம்பத்தில் 24 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் காயமுற்றிருந்தார். 12 நாட்களின் பின்னர் மார்ச் 14ஆம் திகதி தற்காலிக இடத்தில் இயங்கி வரும் ஒரேயொரு வைத்தியசாலையில் அவர் ஒரு குழந்தையைப் பிரசவித்தார். குழந்தையின் தொடையில் ஒரு சிறிய ஷெல்துண்டு இருப்பதை மருத்துவப் பணியாளர்கள் அவதானித்தனர். பிறந்த அந்தக் குழந்தை பால்குடிப்பதற்கு முன்பதாகவே சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாயிற்று.

ஒரு வகையில் இந்தத் தாயாரும் குழந்தையும் அதிஷ்டவசமானவர்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஷெல் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்னொரு கர்ப்பிணித்தாயாரின் வயிற்றில் இருந்த ஆறுமாத சிசுவின் பாதத்தில் செல் துண்டு ஒன்று கடுமையாகத் தாக்கியுள்ளது. அந்தக் கர்ப்பிணித்தாயாரும் சிசுவும் பின்னர் மரணமடைந்திருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் இவை எல்லாம் சர்வசாதாரணமானவை. இப்பிரதேசத்தில் ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். இப்பிரதேசம் 12 கி.மீற்றர் நீளமானதும் 1.5 கி.மீ அகலமானதுமான இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பிரதேசமாகும். மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. மறுபுறத்தில் கடனீரேரி இருக்கிறது. போர் கடனீரேரியின் மேற்குப் புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கடல் வழியாக இந்தப் பாதுகாப்பு வலயத்துக்குள் போய் வர முடியும்.

இந்தப்பிரதேசம் ஒவ்வொரு நாளும் படுகொலைக் களமாக இருக்கிறது. வைத்தியசாலை மீதும், நிவாரண உதவி வழங்குமிடங்களிலும், தெருக்களிலுமாக ஷெல் இப்பிரதேசம் எங்கணும் நாளாந்தம் வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணத்தின்படி நாளாந்தம் 63 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். 145 பேர் படுகாயமடைகின்றனர்.

உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது என்பது அங்கு பெரும் சவாலாக இருக்கிறது. உணவு இல்லாத பிரச்சினை மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

உணவு இருப்பு என்பது பெருமளவுக்கு இல்லாததால் வன்னி மிகப் பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் தெரிவித்திருக்கிறது.

இந்த மக்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்யும் வாய்ப்பற்று இருந்தனர். தேங்காயும் மீனும் மட்டும் தான் சந்தையில் கிடைக்கின்றது. ஆனால் தேங்காயின் விலை ரூபாய் 250. வெங்காயத் தாள்கள் கூட அங்கு கிடைப்பதில்லை. கடந்த மாதம் நான்கு சிறுவர்கள் அடம்பன் இலைகளைச் சாப்பிட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.