Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மனியிலும் நாடாளுமன்ற முன்றலில் உண்ணாநிலைப் போராட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியிலும் நாடாளுமன்ற முன்றலில் உண்ணாநிலைப் போராட்டம் !

தமிழகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் தமிழினம், சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் தமது உறவுகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், உடனடியாகப் போர்நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதோடு அரசியல் ரீதியாக தமிழினத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்பட வேண்டுமென வலியுறுத்தியும், தமிழரது தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தென்துருவம் முதல் வடதுருவம் வரை வரலாற்றுப் பயணமாக, வரலாற்றுப் பணியாக தமிழினத்தின் விடுதலை வேட்கையும் உரிமைக்குரலும் ஓங்கிவரும் வேளையில், அதன் தொடர் எழுச்சியாக, யேர்மனியிலும் டுசுல்டோவ், ஸ்ருட்காட், விஸ்பாடன், சாபுறுக்கன், எனத் தொடராகப் பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழீழ மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களின் குவிமையமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.04.2009) முதல், யேர்மனியின் தலைநகரமான பேர்லின் நகரிலே மாபெரும் தொடர் உண்ணாநிலைப் போராட்டமொன்றினை தமிழ் இளையோர் தன்னெழுச்சியோடு முன்னெடுக்க இருக்கிறார்கள்.

கடந்த 22 ஆண்டுகளின் முன் திலீபண்ணா ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை அறப்போரை தொடுத்தபோது இந்திய அரசு செவிசாய்க்க மறுத்துத் திலீபண்ணாவின் உயிரைப் பறித்துக் கொண்டது. காந்தி தேசம் என்று தம்மையழைத்தவாறு காந்தியடிகளின் சாத்வீகப்போராட்டத்தைத் தமிழரின் தாயக மண்ணிலே குழிதோண்டிப் புதைத்ததோடு நில்லாது பல்லாயிரம் தமிழ் மக்களைப் படுகொலை செய்ததென்ற உண்மையையும் வரலாறு பதிவாக்கியுள்ளது. அதன் தொடராக இன்றும் அதே காங்கிரஸ் தலைமையிலான இந்திய நடுவணரசு ஆட்சியில் இருந்தவாறு, ஈழத்தீவின் பூர்விகக் குடிகளான தமிழ் இனத்தைத் துடைத்தழிக்கும் கைங்கரியத்துக்குத் துணைபோவதென்பதும், உலகால் தடைசெய்யப்பட்ட இரசாயான அயுதங்களை வழங்கித் தமிழினப் படுகொலைக்கான தனது முழுமையான ஒத்தாசையையும் வழங்கி வருகின்றது என்ற உண்மைகள் தற்போது அனைத்துலக ஊடகங்களில் அம்பலமாகத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அனைத்துலக மட்டத்திலே இந்தியப் பேரரசின் உண்மைத் தன்மையையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தியா ஒருவேளை தனது இறுதி நடவடிக்கையாகத் தமிழினம் மீது அணுகுண்டைப் பாவித்தாலும் ஆச்சரியப்படமுடியாதெனத் தமிழினம் சிந்திக்கத் தலைப்படுள்ளதானது, இந்தியாவும் இன்னுமொரு அணுவாயுதப் பயங்கரவாத நாடாகிவிடுமோ என்ற ஐயம் எழுவது இயல்பானதே. ஏனென்றால் உலகில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை சிறிலங்கா பாவித்தது. பாவித்தும் வருகிறது. இந்தியாவோ இரசாயன ஆயுதங்களைக் கொடுத்து ஏவுவிக்கிறது. என்பதைவிட ஏவுகின்றது என்பதே பொருத்தமானது. ஏனென்றால் இந்தியப் படையினரின் பிரசன்னத்தைப் பிரான்ஸிலுள்ள ஊடகங்கள் வெளியிட்டுளனவல்லவா?

மேற்கு நாடுகளிலோ காந்தியடிகளுக்குச் சிலையும், அவரது பெயரிலே வீதிகளையும் வைத்திருந்தவாறு, காந்தியடிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட வடிவங்களை கையாளும் மக்கள் மீது தமது காவல்துறையினரை சந்தர்ப்பத்திற்கேற்ப ஏவிவிட்டவாறு சனநாயக ரீதியில் போராடுங்கள் என்று உதட்டளவில் மட்டும் கூறியவாறு, பெருமளவிலான ஆயுத தளபாட பணம் படைத்துறை ஆலோசனைகளெனப் பெரும் இனப்படுகொலையை நடாத்தும் சிங்கள இனவாத அரசுக்கு வழங்கியவாறு, தமிழ் மக்களிடம் வன்முறை வேண்டாம், ஆயுதம் வேண்டாம், சனநாயக ரீதியில் போராடுங்கள் எனப் பெரும் நாடகமாடும் இவர்களது முற்றத்தில் நாமனைவரும் ஒன்றிணைந்து, இவர்கள் கூறும் சனநாயக வழியிலே சென்று இன்றைய வரலாற்றுப் புறநிலையைக் கருத்திலே கொண்டு அணிதிரண்டு நீதியைக் கேட்க எம் தேசியக் கடமையில் நாமும் ஒருவராவோம்.

அலையென எழுவோம்

மலையென நிமிர்வோம்

தடைகளை உடைப்போம்

எம் தேசம் காப்போம்!

எங்கும் எழுவோம்

எம் தேசம் காப்போம்

தங்கும் வீடொன்றும்

தாய் வீடல்ல !

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://tnggermany.wordpress.com/

அலையென எழுவோம்

மலையென நிமிர்வோம்

தடைகளை உடைப்போம்

எம் தேசம் காப்போம்!

எங்கும் எழுவோம்

எம் தேசம் காப்போம்

தங்கும் வீடொன்றும்

தாய் வீடல்ல !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.