Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: 988 தமிழர்கள் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20/04/2009, 04:53 [ வன்னி செய்தியாளர் செந்தமிழ்]

வன்னி “பாதுகாப்பு வலயம்” மீது இன்று அதிகாலை முதல் கடும் தாக்குதல்

வன்னியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிறீலங்கா படையினர் தரை வழியாக முன்னேறும் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளதால், பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

ஏக காலத்தில் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது கடுமையான எறிகணை, மற்றும் உந்துகணைத் தாக்குதலையும் படையினர் ஆரம்பித்துள்ளனர்.

பாதுகாப்பு வலயம் மீது இடைவிடாத தாக்குதலை நடத்தி வந்த சிறீலங்கா படையினர் கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான தொடர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதால், மக்கள் பதுங்ககழிகளைவிட்டு வெளியே வர முடியாது இருப்பதாக பதிவு இணையத்தின் வன்னி செய்தியாளர் கூறுகின்றார்.

pathivu

முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் பகுதிகளில் தமது அத்தியாவசிக் கடமைகளுக்காக வெளியே சென்ற மக்களில் 30 பேர் வரையில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்திருந்தனர்

வன்னியிலிருந்து கிடைத்த தகவலின் படி தற்போது கிபிர் விமானங்கள் தொடர் தாக்குதல்களை நடாத்தியவண்ணமுள்ளன. :lol:

2ம் இணைப்பு)சிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: 988 தமிழர்கள் படுகொலை

[திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 11:38 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.

இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

--Puthinam---

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.

இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Puthinam

இன்றைய அகோர தாக்குதலில் 985 பொதுமக்கள் பலி ;1300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்

TamilNational_MAP_Puthumathalan_20th_April_2009.jpg

மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.இதன்போது சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி 1000 மேலான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது.

மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்

காயமடைந்தவர்கள் பலரும் உயிரிழக்கலாம் என்று தமிழ் நேஷனல் செய்தியாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.

Full Report and MAPS

Courtesy:TamilNational.Com

Edited by தேசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.