Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீ லங்காவின் கனவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீ லங்காவின் கனவு

இலங்கையில் சிங்கள ராணுவம்- விடுதலைப்புலிகள் போர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

எந்த நேரத்திலும் அங்கிருந்து முக்கிய தகவல்கள் வரலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

முல்லைத் தீவு மாவட்டத்தில் இலங்கை அரசால் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்ட 12 கிலோ மீட்டர் நீள பகுதியில் 8 கிலோ மீட்டர் பகுதி மட்டுமே தற்போது விடுதலைப்புலிகளிடம் இருக்கின்றது.

இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் மற்ற விடுதலைப்புலிகளும் தங்கியிருந்து சிங்கள ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள்.

பிரபாகரனுடன் அவ ருடைய மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் சூசை, பொட்டு அம்மான், போன்ற முன்னணி தளபதிகளும் பதுங்கி இருப்பதாக சிங்கள ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை பிடிக்க 50 ஆயிரம் ராணுவ படைகள் நாலாபுறமும் முற்றுகையிட்டு உள்ளனர். இந்த பகுதியின் கிழக்கே கடலில் கடற்படை தயாராக நிற்கிறது.

வடக்கு பகுதியில் இருந்து ஒரு படை பிரிவு தெற்கு நோக்கி முன்னேறி வந்தபடி இருக்கிறது. மேற்கு, வடக்கு பகுதியில் மற்ற படைகள் அரண் அமைத்து நிற்கின்றன.

பிரபாகரனை எந்த வகையிலும் தப்பி விடாமல் பிடிக்க வேண்டும் என்ப தையே சிங்கள படையினர் ஒரே நோக்கமாக கொண்டுள்ளனர். எனவே 24 மணி நேரமும் தீவி மாக கண்காணித்து வருகின்றனர்.

பிரபாகரன் தப்பி செல்வதாக இருந்தால் கடல் வழியாக செல்லும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. எனவே ஒட்டு மொத்த கடற்படையையும் அங்கு குவித்துள்ளனர். கடற்படை கப்பல்களும், படகுகளும் கடலில் சங்கிலி தொடர் போல அணி வகுத்து நிற்கின்றன.

மின்னல் வேக படகு மூலம் தப்ப முயன்றாலும் விரட்டி சென்று பிடிப்பதற்காக அதிவேகமாக செல்லும் “டோரா” வகை படகுகளை தயாராக வைத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளிடம் சிறிய வகை நீர் மூழ்கி படகு களும் உள்ளன. அதன் மூலம் பிரபாகரன் தப்பிக்கலாம் என கருதி கடலுக்குள் செல் லும் பொருள்களையும் கண்டு பிடிக்கும் அதி நவீன ரேடார் கருவிகளுடன் நிற்கின்றனர்.

இது தொடர்பாக 58-வது டிவிஷன் படை தளபதி பிரிகேடியர் சவேந்திரா டிசில்வா கூறியதாவது:-

பிரபாகரனும் அவரது மகன் மற்றும் தளபதிகளும் நீர் மூழ்கி படகு மூலம் தப்பும் வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறோம். எனவே இதை தடுக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்.

எங்களிடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் முன்னணி தலைவர் தயா மாஸ்டர் மூலம் சில தகவல் களை பெற்று உள்ளோம்.

தற்போது பொட்டு அம் மான், சூசை ஆகியோர் மட்டுமே பிரபாகரனுடன் உள்ளனர். மற்ற தளபதிகள் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரை விட்டு வெளியே வந்து விட தயாராக இருப்பதாக அறிகிறோம். இனி விடுதலைப்புலிகள் யாரும் தப்பமுடியாது.

பிரபாகரன் இங்கிருந்து தப்பி செல்ல விரும்பவில்லை என்று பிரபாகரன் கூறியதாக தயா மாஸ்டர் எங்களிடம் தெரிவித்தார்.

பிரபாகரனை நாங்கள் மிக அருகில் நெருங்கி விட்டோம். இன்னும் 2 நாளில் அவரை பிடித்து விடுவோம்.

பாதுகாப்பு பகுதியில் இன்னும் 15 ஆயிரம் பொது மக்கள் உள்ளனர். அவர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதால் மெதுவாக முன்னேறி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வடக்கு பகுதியில் இருந்து முன்னேறி வரும் ராணுவம் 4 நாட்களில் பாதுகாப்பு பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரத்தை கைப்பற்றி உள்ளது. மேற்கு பகுதியில் இருந்து 3 படைகள் முன்னேறி வருகின்றன.

இந்த படைகளும் வடக்கு பகுதியில் இருந்து வரும் படைகளும் இன்று அல்லது நாளைக்குள் ஒன்றாக இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மின் னல் வேகத்தில் தாக்குதல் நடத்தி முன்னேறி செல்வார்கள். எனவே நாளை இரவுக்குள் இறுதி முடிவு தெரிந்து விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பிரபாகரன் ஏற்கனவே தப்பிவிட்டதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை ராணுவம் மறுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் மற்ற தளபதிகளுடன் வயர்லெசில் பேசியதை இடைமறித்து கேட்டதாகவும், எனவே பிரபாகரன் அங்கேதான் இருக்கிறார் என்பதை உறுதி படுத்தி இருப்பதாகவும் கூறினார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சொல்லி சொல்லியெ வஞ்சகமில்லாமல் நாங்கள் கண்ட கனவுகள் ஆயிரம்

பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

திரு புலித்தேவனும், திரு நடேசனும் ஊடகங்களில் தலைவர் அவர்கள் மக்களோடு தான் இருக்கின்றார் என்று சொன்ன பிற்பாடு, தயா மாஸ்டராகட்டும், ஜோர்ச் ஆகட்டும் புதிதாக சொன்னது போன்றதொரு கதையையும், அவர்கள் புலிகளின் முக்கிய புள்ளிகள் போன்று காட்ட முனைவதும் சிங்களத்தின் பிரச்சாரங்களே.

ஆனால் காலம்காலமாக தலைவரின் பாதுகாப்புக்கருதி அவர் பற்றி தகவல் தெரிவிப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், புலித்தேவன் ஏன் இப்படிக் கூறினார் என்பது தெரியவில்லை. உண்மையில் அப்படி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததை வெறுக்கின்றேன். அவரின் பாதுகாப்புக்கருதி தெரிவிக்க முடியாது எனத் தவிர்ப்பது ஒன்று கடினமானதாக இருந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் வெளிவர தாமதமாகும்! இருப்பினும் நல்லதையே நினைப்போம்.

உண்மைகள் வெளிவர தாமதமாகும்! இருப்பினும் நல்லதையே நினைப்போம்.

நல்லதே நடக்கும்!

திரு புலித்தேவனும், திரு நடேசனும் ஊடகங்களில் தலைவர் அவர்கள் மக்களோடு தான் இருக்கின்றார் என்று சொன்ன பிற்பாடு, தயா மாஸ்டராகட்டும், ஜோர்ச் ஆகட்டும் புதிதாக சொன்னது போன்றதொரு கதையையும், அவர்கள் புலிகளின் முக்கிய புள்ளிகள் போன்று காட்ட முனைவதும் சிங்களத்தின் பிரச்சாரங்களே.

ஆனால் காலம்காலமாக தலைவரின் பாதுகாப்புக்கருதி அவர் பற்றி தகவல் தெரிவிப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், புலித்தேவன் ஏன் இப்படிக் கூறினார் என்பது தெரியவில்லை. உண்மையில் அப்படி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததை வெறுக்கின்றேன். அவரின் பாதுகாப்புக்கருதி தெரிவிக்க முடியாது எனத் தவிர்ப்பது ஒன்று கடினமானதாக இருந்திருக்காது.

சிங்களம் ஏமாறும்..!

உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

மாவீரர் உரையிலிருந்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.