Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல் வீரவன்ஸவிற்கு மனநோய் பீடித்துள்ளதா எஸ்.பி.திசாநாயக்க கேள்வி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ஸவிற்கு மனநோய் பீடித்துள்ளதா எஸ்.பி.திசாநாயக்க கேள்வி?

பொங்கு தமிழ் வைபவத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனோ கணேசன் மற்றம் இரா. சம்பந்தன் ஆகியோரை கைதுசெய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளமை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திசாநாயக்க, வீரவன்ஸ சுயநினைவில் பேசுகிறாரா? அவருக்கு மனநோய் பீடித்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் உரிமைகள் அற்ற குடிமக்கள், அவர்கள் தமது இன, மத , மொழியை காட்டிக் கொடுத்து சிங்களவர்களுக்கு அடிமை தொழில் செய்வதன் மூலம் மாத்திரமே உரிமைகளை பெற முடியும் என வீரவன்ஸ போன்றவர்கள் நினைப்பார்களேயானால், தற்போது பெற்றுள்ள யுத்த வெற்றிகளுக்கு நீண்ட ஆயுள் இருக்காது எனவும் திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொங்கு தமிழ் வைபவத்தில் கலந்து கொண்ட மனோ கணேசன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் ஏன் கைதுசெய்யப்பட வேண்டும். விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர், விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்துவதற்காக தடை நீக்கப்பட்டது.

அதில் எந்தத் தவறுமில்லை. ஜனாதிபதி சந்திரிக்காவும் பேச்சுவார்த்தைக்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். போர் நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணமித்தனர். அவர்கள் பல்வேறு அரசியல் உள்ளிட்ட வைபவங்களை ஏற்பாடு செய்தனர். பொங்கு தமிழ் வைபவங்கள், வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் மாத்திரமின்றி நுவரெலியாவிலும் நடைபெற்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் வழி நடத்தலிலேயே நுவரெலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அச்சிட்டப்பட்ட சுவரொட்டிகளில் தொண்டமான் மற்றும் பிரபாகரனின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. பொங்கு தமிழ் என்பதன் அர்த்தம் தமிழ் மக்களின் எழுச்சி என்பதாகும்.

இந்த பொங்கு தமிழ் நிகழ்வில் மனோ கணேசன், இரா. சம்பந்தன் மாத்திரம் கலந்துகொள்ளவில்லை. இதில் அமைச்சர்களான ராஜித சேனாதிரத்ன, தொண்டமான், முத்துசிவலிங்கம், சந்திரசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்கள் எவரும் தவறிழைக்கவில்லை. விடுதலைப்புலிகளை அரசியல் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொள்ள செய்வற்காக அவ்வாறான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதிலோ அவற்றில் கலந்துகொள்வதிலோ எந்த தவறும் இருக்க முடியாது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்தப் பிரச்சினையை எழுப்புவது வீரவன்ஸ என்பதே, 71 ஆம் ஆண்டுப் போராட்டம் அரச விரோத, சட்ட விரோத போராட்டமாகும். இந்த போராட்டங்களின் போது ஜே.வீ.பீ கோடிக்கணக்கான சொத்துக்களையும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் அழித்தது. அதன் காரணமாவே விஜேவீர உள்ளிட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

77 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர் ஜயவர்தனவினால் இவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. ஜே.வீ.பீக்கு விதிக்கப்பட்;டிருந்த தடைநீக்கப்பட்டது. இதன் பின்னர் ரோஹண விஜேவீரவின் தலைமையில் நாடு முழுவதிலும் அரசியல் கூட்டங்களும், வகுப்புகளும், பேரணிகளும் நடத்தப்பட்டன. தடை நீக்கப்பட்டதும் ஜே.வீ.பீ செய்த நடவடிக்கைகளை ஏன் விடுதலைப்புலிகள் செய்ய முடியாது.

அன்று சிங்கள தலைவர்களுக்கு ஜே.வீ.பீயின் கூட்டங்களுக்கு செல்ல முடியுமாயின், மனோ கணேசன் மற்றும் சம்பந்தன் ஆகியோருக்கு ஏன் பொங்கு தமிழ் வைபவங்களில் கலந்துகொள்ள முடியாது. அதற்கான தடை என்ன?. இதில் காணப்படும் சட்டரீதியான தடை என்ன?.

ஜே.வீ.பீயினர் தற்போதும், விஜேவீர உள்ளிட்ட ஜே.வீ.பீயின் தலைவர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். நாட்டின் சட்டத்தின் பிரகாரம் இவர்கள் அனைவரும் ராஜதுரோகிகள். உண்மையில் இவர்கள் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற கொலைகாரர்கள். சோமவன்ஸவும் வீரவன்ஸவும் இந்த குழுவைச் சேர்ந்தவர்களே, எனினும் இவர்கள் 71 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற எழுச்சியை நினைவுக்கூறுவதில் தனக்கு சிக்கல் இல்லை எனவும் இது அவர்களின் உரிமை எனவும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருணா இராணுவத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்ற விடுதலைப்புலிகளின் இராணுவத்தை வழி நடத்திய தலைவராவார். அத்துடன் ஆணையிறவு, பூநகரி, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி இராணுவ முகாம்களில் இருந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை கொன்ற புலிகளின் தலைவர். அரந்தலாவவில் 67 பிக்குகளையும் கருணாவே கொலை செய்தார். அவர் தற்போது ஒரு அமைச்சர். அவருக்கு எவரும் இதுவரை அரசியல் மன்னிப்பு வழங்கவில்லை. அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் அவருக்கு மரண தண்டனையே விதிக்கப்படும்.

இதனைத் தவிர போலிக் கடவூச்சீட்டில் வெளிநாட்டுக்கும் அவர் தப்பிச் சென்று, இங்கிலாந்தில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். போலிக் கடவூச்சீட்டு தயாரித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த குற்றச்சாட்டில் கருணாவுக்கு பல வருடம் சிறைத்தண்டனை வழங்க முடியும். எனினும் கருணாவுக்கு எதிராக எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.

கருணா தனது தவறை திருத்தி கொள்வதில் தனக்கு எந்த முரண்பாடு கிடையாது எனவும் அவரின் தவறுகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினாலும் தனக்கு பிரச்சினையில்லை எனவும் இவை எதுவும் இல்லாத நிலையில் கருணா தற்போது ஒரு அமைச்சராக உள்ளதாகவும் திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். விமல் வீரவன்ஸ கருணாவை கைதுசெய்யுமாறு கூறுவதில்லை.அவர்மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் கூறுவதில்லை. அவர் 67 பிக்குகளை கொன்ற கொலையாளி இல்லையா?. போலி கடவூச்சீட்டு தயாரித்த மோசடியாளர் இல்லையா எனவும் எஸ்.பி.திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட வேண்டாமா?. இதனை விட பயங்கரமானது தொண்டமானை கைதுசெய்ய வேண்டாமா?. மனோ கணேசனும், சம்பந்தனும் செய்த தவறுகள் என்ன, அவர்கள் பொங்கு தமிழ் உற்சவத்தில் கலந்துகொண்டதா? எனவும் எஸ்.பீ.திசநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

1987 ஆம் 90 ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வீ.பீயின் கொலைகளுக்கு பொறுப்பு கூறவேண்டியவரும் உயிருடன் உள்ள ஜே.வீ.பீயின் தலைவரும் சோமவன்ஸ அமரசிங்கவாகும். அவரைக் கைதுசெய்து வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாமா?. அவர் போலி கடவூச்சீட்டு மூலம் வெளிநாட்டுக்கு சென்று போலி கடவூச்சீட்டு மூலம், இலங்கை திரும்பியவர், இந்த குற்றங்களுக்காக அவரை கைதுசெய்ய வேண்டாமா?. வீரவன்ஸ சுயநினைவுடன் பேசுகிறாரா?.அவருக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதா?. ஒரே தவறை செய்தவர்களில் சிலரை கைதுசெய்வதும் ஏனையோர் அமைச்சர் பதவிகளை வகிக்கவும் உள்ள சட்டம் என்ன?.எனவும் எஸ்.பீ.திசாநாயக்க தனது அறிக்கையில் கேட்;டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=8775&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.