Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா வைத்திய சவச்சாலையில் இடப்பற்றாக்குறை சடலங்களைப் பாதுகாத்து வைப்பதில் திண்டாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா வைத்திய சவச்சாலையில் இடப்பற்றாக்குறை சடலங்களைப் பாதுகாத்து வைப்பதில் திண்டாட்டம்.

வீரகேசரி இணையம் 4/26/2009 11:24:45 AM -

வவுனியா வைத்தியசாலைக்குத் தொடர்ச்சியாக இறந்தவர்களின் சடலங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக சடலங்களை உறவினர்கள் அடையாளம் கண்டு, அவற்றைப் பொறுப்பேற்பதற்காக வரும் வரையில் வைத்துப் பராமரிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்து வருபவர்களுடன் கொண்டு வரப்படுகின்ற சடலங்கள், இவ்வாறு வரும்போது காயமடைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்போர், ஓமந்தை பகுதிக்கு வந்துள்ள மக்கள் மத்தியில் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பவர்கள், இடைத்தங்கல் நிவாரண முகாம்களில் வயோதிபம் மற்றும் சுகவீனம் காரணமாக உயிரிழக்கின்றவர்கள் போன்றோரின் சடலங்களே வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

தற்போது 30 சடலங்கள் வரையில் இவ்வாறு உறவினர்களின் வருகைக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த வியாழக்கிழமை இரண்டாவது தொகுதியாக 28 சடலங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா சவச்சாலையில் இடப்பற்றாக்குறை நிலவுவதுடன், அங்கு ஒரேயொரு குளிரூட்டியே செயற்படுவதாகவும். மாதக்கணக்கில் பழுதடைந்திருந்த மற்றுமொரு குளிருட்டி திருத்தப்பட்டுள்ள போதிலும், அதில் உள்ள இடவசதிக்கு ஏற்ற அளவில் சடலங்களை வைக்கமுடியாதிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் பல தினங்கள் சவச்சாலையில் வைக்கப்படுகின்ற சடலங்கள் மிகவும் பழுதடைந்து அந்தப் பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதாகவும், இந்த நிலைமை பொது சுகாதாரத்திற்கும், வைத்தியசாலையின் பொதுவான சுகாதார சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக அமைந்திருப்பதாகவும் பொதுமக்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை, அதிகரித்துள்ள சவச்சாலை பாவனையையடுத்து, அதனை விஸ்தரித்து கட்டுவதற்கான கட்டிட நிர்மாண வேலைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.