Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் துணை இராணுவக் குழு நடத்திய கொலை வெறியாட்டம்: சமாதான சபை தலைவர் உட்பட 4 தமிழர்கள் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொரவேவவில் 4 இளைஞர்கள் சுட்டுக்கொலை

வீரகேசரி இணையம் 4/26/2009 10:09:25 AM -

திருகோணமலை மாவட்டம் மொரவேவ பிரதேசத்தில் நேற்றிரவு நான்கு தமிழர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.நொச்ச

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நொச்சிக்குளம் சமாதான சபையின் தலைவர் உட்பட நான்கு தமிழர்கள் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினால் மொறவேவ பிரதேசத்திலும் சாந்திபுரத்திலும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மொறவேவாவில் நேற்று சனிக்கிழமை இரவு 8:.45 நிமிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நொச்சிக்குளம் சமாதான சபையின் தலைவர் 48 வயதுடைய கோணேஸ்வரன், 60 வயதான சேகர், 32 வயதான அமீர் ஆகிய மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சிறிலங்கா படையினரின் சோதனைச் சாவடி நிலையத்திற்கு அருகில் உள்ள கோணேஸ்வரனின் கடைக்குச் திடீரென சென்ற துணை இராணுவக் குழுவினர் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளையில் 70 வயதுடைய இராசமணி என்பவர் சாந்திபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று இரவு 9:00 மணியளவில் துணை இராணுவக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மொறவேவ, சாந்திபுரம் ஆகிய இரு இடங்களும் கந்தளாய் காவல்துறை அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களாகும்

அதேவேளையில் மேற்படி கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கந்தளாய் காவல்துறை அத்தியட்சகரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகேணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் முறையிட்டுள்ளார்.

கொலைச் சம்பவங்களினால் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் துரைரட்ணசிங்கம் கந்தளாய் காவல்துறை அத்தியட்சகரிடம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ் இள வயது ஆண்கள், பெண்கள் ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்படுவதுடன் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையங்களில் தடுத்து வைக்கப்படுவது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.