Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியின் மனித பேரவலமும் நீதி தவறிபோன ஐ.நா சபையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி வாரவெளியீடு - சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் உலகின் கண்கணில் அதிகம் தெரிவதில்லை என்பது மிகவும் வேதனையானது. இலங்கை அரசாங்கத்தின் பிரசாரங்களை அனைத்துலகமும், அனைத்துலக ஊடகங்களும் நம்ப முற்படுவதுடன், இந்தப் பேரவலத்தை நிறுத்துவதற்கும் அவர்கள் முன்வரவில்லை.

இருந்தபோதும் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் சிறு சிறு அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், எதிர்வரும் 29 ஆம் திகதி ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தினை முறியடிக்கவும் இலங்கை அரசாங்கம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்தப் பேரவலமான நிலையைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை உத்தியோகபூர்வமற்ற முறையில் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. சீனா, ரஷ்யா உட்பட அதன் 15 உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடல்களுக்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதம அதிகாரியான விஜய் நம்பியார் தனது இலங்கை விஜயம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என சபையில் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவர் அது தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு மறுத்தமை அங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. நம்பியாரின் இந்த முடிவை பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்று நேரடியாகவே எதிர்த்திருந்ததாக ஐ.நா.வின் ஊடக மையமான இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.

ஒரு மனிதப்பேரவலமான நிலையில் அது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடத்துமாறு ஐ.நா.வினால் அனுப்பப்பட்ட பிரதிநிதி, அது தொடர்பில் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை கலந்துரையாடலில் தகவல் வெளியிட மறுத்தமை இதுவே முதல்தடவை. அவர் தனது பதவியையும், ஐ.நா.வையும் அவமதித்துள்ளதாகவே பல அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. எனினும் நம்பியாரின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து அவரின் கடந்த கால செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பில் ஆராயப்படுவது பொருத்தமானது. நம்பியார் இந்திய அரசின் பிரதி பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும், இந்தியாவின் பாதுகாப்பு சபையின் செயலாளர்களின் தலைவராகவும் பணியாற்றியிருந்தமை கவனிக்கத்தக்கது.

மேலும் அண்மையில் மூன்று நாள் விஜயமாக இலங்கைக்கு வந்து சென்ற நம்பியார் இந்தியாவில் தங்கிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போதைய போரில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு படைத்துறை மற்றும் நிதி உதவிகளை மட்டும் வழங்கி வரவில்லை. அதனுடன் இராஜதந்திர ரீதியாகவும் உதவிகளை வழங்கி வருகின்றது என்பது தெளிவாகியுள்ளது. இலங்கை அரசுக்கு ஏற்படும் இராஜதந்திர அழுத்தங்களை இந்திய மத்திய அரசு ஐ.நா.வின் ஊடாகக் குறைப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பது தற்போது வெளிப்படையானது. இதனிடையே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மைக்காலமாக இலங்கை தொடர்பாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பிலும் அனைத்துலக அரச சார்பற்ற உதவி அமைப்புக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், தமிழ் மக்களும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

வன்னியில் மனிதப் பேரவலம் ஒன்று உருவாகியுள்ள போதும், ஐ.நா.வின் தகவல்களின் பிரகாரம் அங்கு கடந்த மூன்று மாதங்களில் 4500க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள போதும் ஐ.நா. செயலாளர் நாயகம் போர் நிறுத்தம் என்ற சொற் பிரயோகத்தை தனது அறிக்கைகளில் பயன்படுத்தத் தவறியமை பாரிய விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. அகில உலகமும் போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசிய போதும் உலகில் அமைதியையும், மனிதாபிமானத்தையும் நிலைநாட்ட என உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசாதமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக கடந்த புதன்கிழமை மூடிய அறைக்குள் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தில் நம்பியார் தனது அறிக்கையை வெளியிட சம்மதம் தெரிவித்திருந்தார். எனினும் அவரின் கருத்துக்களை பார்க்கும் போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு மனிதாபிமான பிரச்சினை மட்டுமே என்ற வட்டத்திற்குள் முடக்கிவிட அவர் முயல்கின்றார் என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட கருத்துக்களில் இலங்கையில் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் இல்லை, மனிதாபிமான பிரச்சினைகளே உள்ளன என்ற கருத்துப்பட அவர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியோகப் பற்றற்ற கூட்டத்தினை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு சரணடையவேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டமை தமிழ் மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், ஐ.நா.வின் இந்த நீதி தவறிய போக்கிற்கான காரணம் என்ன என்பது தற்போது தெளிவாக உள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர். அதாவது ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரியாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் இந்தியாவை சேர்ந்த விஜய் நம்பியார் போன்றவர்கள் பணியாற்றும் போது தமிழ் மக்கள் எவ்வாறு ஐ.நா.விடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்? எனினும் நடைபெறும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது எதிர்வரும் நாட்கள் பல இராஜதந்திர நகர்வுகளைக் கொண்ட நாட்களாக இருக்கும் என்பதுடன், மோதல்களும் மேலும் உக்கிர நிலையை அடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான். போராட வாருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.