Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி - ராஜபக்சே கூட்டுச் சதி : ஜெயலலிதா குற்றச்சாட்டு

Featured Replies

நாமக்கல், ஏப்.29:

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் நோக்கில், தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை போர் நிறுத்தம் மேற்கொள்வது என முதலமைச்சர் கருணாநிதியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கூட்டு சதித் திட்டம் செய்துள்ளதாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாக குற்றம்சாட்டியுள்ளார்.

"நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வைரம் தமிழரசியை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியது:

உங்களுக்கு நான் இப்போழுது ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன், கவனமாக கேளுங்கள். கருணாநிதியும் ராஜபக்சேவும் இணைந்து தீட்டியுள்ள சதித் திட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி, 'ராஜபக்சேவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக எனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.

அதாவது கருணாநிதி, ராஜபக்சேவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால், அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

நாளைக்கே ஜெயலலிதா சொல்கிறபடி மத்திய அரசு அமைந்துவிட்டால், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா. ஏனென்றால், ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத்தான் பிரச்னை. எனவே, அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதைக் கேளுங்கள்.

தேர்தல் நடக்கும் தேதியான மே மாதம் 13 ஆம் தேதி வரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று மீண்டும் என் தயவில் மத்திய அரசு அமைந்தால், நீங்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை உங்கள் விருப்பம் போல் அணுகலாம். நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். எனவே உங்களுக்குப் பிரச்னை வராமல் தடுக்க மே மாதம் 13 ஆம் தேதி வரை போர் நடத்தாமல் பொறுத்திருங்கள். இங்கு தேர்தல் முடிந்தவுடன் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்,' என்று ராஜபக்சேவுடன் கருணாநிதி பேசியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.

கருணாநிதி தனது பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார். கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வருகின்ற தேர்தலில் தமிழின துரோகி கருணாநிதியை மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி, நீங்களெல்லாம் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்," என்றார் ஜெயலலிதா.

http://www.vikatan.com/vc/2009/pelect/subpage.asp?artid=1007

Edited by வசி_சுதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.