Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச அணுகுமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் போக்கு தெளிவற்றதாகவே இருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் உறுதியானதும் அலட்சியப் போக்குடையதுமான செயற்பாடுகள் உலக நாடுகளுக்கு தற்போதைய நிலையில் பெரும் சவாலாகியிருப்பதை மறுத்துவிடவும் முடியாது. ஏனெனில், இலங்கை உலக நாடுகளது குறிப்பாக மேலைத்தேய நாடுகளினது அறிவுரைகள், ஆலோசனைகள் மட்டுமன்றி வேண்டுகோள்களைக்கூட காதில் வாங்கிக்கொள்ள தயாரில்லாதது போல செயற்பட்டு வருகிறது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலை கண்டு மேற்குலக நாடுகள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார்த்த ரீதியில் விசனம் கொண்டிருக்கின்றன என்பதையும் இதில் மறுத்துவிட முடியாது. அது மட்டுமல்லாது இலங்கை விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் தற்போதைய நிலை தடுமாற்றத்திற்கும் இதுவொரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது.

வன்னியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கும் மோதல் சூன்ய வலயம் (No Fire Zone) அதாவது பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியிருக்கும் மக்களும் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து வருவதற்காக போர்நிறுத்தத்தை நீடிக்குமாறு உலக நாடுகள் பல வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கம் அதை பொருட்படுத்தாததுடன் அவ்வாறான கோரிக்கைகளை தொடர்ந்தும் தட்டிக் கழித்தும் வருகிறது.

கடந்த ஏப்ரல் 13,14 ம் திகதிகளில் அரசாங்கமாக முன்வந்து கடைப்பிடித்த இருநாள் மோதல் தவிர்ப்பு காலத்தை மேலும் நீடிக்குமாறே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கோரின. அதைக்கூட நீடிக்க இலங்கை தயாராக இருக்கவில்லை. அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவும் மோதல் சூன்யப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு இடமளிப்பது தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாடு காண்பதில் தாங்கள் தோல்வி கண்டுவிட்டதாக இலங்கை வந்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்பில் வைத்து வெளிப்படையாகவே கூறிச் சென்றிருந்தனர். அந்த அளவுக்கு இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

கனரக ஆயுத பாவனை...

இது இவ்வாறிருக்க வடக்கு நடவடிக்கைகளில் கனரக ஆயுதங்களை பாவிப்பதை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது வார்த்தையளவில் மட்டுமல்லாது செயற்பாட்டில் அதை நிரூபித்துக் காட்ட வேண்டியிருப்பதாக ஐ.நா.வும் அமெரிக்காவும் வலியுறுத்தி நிற்கின்றன.

இதற்கிடையே வடக்கில் இன்னும் ஷெல் போன்ற கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படுவதாக செதிகள் வெளியாகவே அண்மையில் பொதுக் கூட்டமொன்றில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ""நாங்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று நான் கூறினால் அது நாம் அதனை செய்யவில்லை என்றே அர்த்தப்படும். ஆனால், இந்த வெளிநாட்டுத் தூதுவர்கள், பயங்கரவாத அமைப்பின் பிரசாரத்தை நம்புவதற்கு தயாராகவுள்ளனர்' என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிடவே அது பற்றியும் கேள்வி எழுப்ப முடியாத நிலை சர்வதேசத்துக்கு எழுந்திருப்பதாகவே தெரிகிறது.

ஆனால், கனரக ஆயுதங்களின் பாவனை நிறுத்தப்பட்டமைக்கு அரச தரப்பிலிருந்தே வெவ்வேறு கோணங்களில் கருத்து வெளியிடப்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்புத்தான் இதற்கான முன்னுரிமை காரணமென அரசாங்கத்தால் காரணம் கூறப்பட்டாலும் அரச தரப்பு அமைச்சர்களே அதற்கு அப்பாலும் சில காரணங்கள் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய அமைச்சர் டலஸ் அலகப்பெரும, வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் படையினரும் நிலைகொண்டிருப்பதால் கனரக ஆயுதங்களின் பாவனை மற்றும் விமானத் தாக்குதல்கள் போன்றன படையினருக்கும் இழப்புகளை ஏற்படுத்திவிடக்கூடுமென சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோல், அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளரோ தற்போதைய களநிலைவரங்களின் பிரகாரம் கனரக ஆயுதங்களின் பாவனை நடைமுறை சாத்தியமற்றதென்பதனாலேயே நிறுத்தப்பட்டதாக காரணம் கூறியிருந்தார். அப்படியென்றால் இவற்றின் பின்னணி என்பதில் சில கேள்விகள் எழவே செய்கின்றன.

ஐ.நா.வின்.தகவல் கசிவு

இந்த நிலையில் குறுகிய கால இடைவெளியில் இலங்கை தொடர்பான இரு விடயங்கள் ஐ.நா.விலிருந்து கசிவடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஐ.நா.வின் புள்ளி விபரங்களின் பிரகாரம் வன்னியில் இடம்பெற்ற தாக்குதல்களினால் கடந்த 3 மாதகாலப் பகுதியில் 6,432 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 13,946 பொதுமக்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக இலங்கை வந்திருந்த மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா.வின். உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் இலங்கை அரசாங்கம் சார்பில் வினவப்பட்டபோது, அது ஐ.நா.வின் உத்தியோகபூர்வ அறிக்கையில்லை என்றும் பொதுவான தகவல் திரட்டல்களின் பேரில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் கசிய விடப்பட்டிருப்பதாகவும் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேபோல் மீண்டுமொரு சம்பவம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கிறது. அதாவது, அரசாங்கத்தினால் வடக்கில் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீதே விமானப்படை விமானங்கள் தாக்குதல்களை நடத்தும் காட்சிகளைக் கொண்ட ஐ.நா.வின் இரகசிய செமதி படங்கள் அம்பலமாகியுள்ளமையினால் இலங்கை பெரும் விசனத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விடயம் குறித்து, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புனேயை அழைத்து விளக்கம் கோரியுள்ளார். இதற்குப் பதிலளித்த புனே இந்தப் படங்கள் கசிவடைந்து வெளியாகியிருப்பதாக அமைச்சிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனவே, உலக நாடுகளினது அமைப்பான ஐ.நா.விலிருந்து தகவல் கசிவடைவதென்பது சிறிய விடயமல்ல. ஒன்று இது நோக்கத்துடன் செயப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஐ.நா.வின் தொழிநுட்ப பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருக்க வேண்டும் என்பதே இங்கு அர்த்தப்பட்டு நிற்கிறது. இதில் இரண்டாவதற்கான வாப்புகள் மிக அரிதே.

எவ்வாறிருப்பினும் இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை ஐ.நா.விடம் விசாரணைகளை கோரியிருக்கிறது. அதன் பெறுபேறுகளில் இலங்கைக்கு இருக்கப் போகும் சாதக, பாதகங்களை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

முரண்பட்ட கருத்துகள்

இதேநேரம், இந்த செமதி படம் தொடர்பாக அல்ஜசீரா தொலைக்காட்சி சேவைக்கு விளக்கமளித்திருக்கும் வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலிதகோஹண, இந்த தாக்குதல்களானது பல வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதென்றும் இது சரியாக விடுதலைப் புலிகளின் ஆயுத ஆட்லறிகள் மீது இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலென்றும் இதில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென்றும் கூறியிருக்கிறார்.

எனினும்,இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென நாங்கள் கூறுவதை தயாரில்லை என்றால், என்னால் ஒன்றும் செய முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாலித கோஹணவின் விளக்கத்துக்கு முற்றிலும் முரண்பட்ட கருத்தை வெளியிட்டிருப்பதையும் அல்ஜசீரா செதி சேவை சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆனால், சர்வதேச சமூகமோ கனரக ஆயுதங்கள் தொடர்பான விடயத்திலும் எப்போதும் போல அறிக்கைகளுடன் மட்டுமே மட்டுப்பட்டு நிற்கிறது.

சுவீடன் அமைச்சருக்கு மறுப்பு

இதேநேரம், அண்மையில் இலங்கை வந்து சென்ற பிரிட்டன் வெளிவிவகார அமைச்சின் டேவிட் மில்லிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோருடன் இணைந்து வர திட்டமிட்டிருந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சார்ள் பில்ட்டுக்கு இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்து விட்டது. ஏனெனில், சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கான அழைப்பு இருக்கவில்லையென்றும் அவருடன் பின்னரொரு சந்தர்ப்பத்தில் இருதரப்பு பேச்சுகள் நடத்தப்படுமென்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு விளக்கம் வெளியிட்டிருந்தது.

எனினும், இலங்கையின் நடவடிக்கையில் விசனமுற்ற சுவீடன், இலங்கைக்கான தனது தூதுவரையும் தற்காலிகமாக திருப்பி அழைத்ததுடன் இலங்கை அரசு மீண்டும் விடுத்த அழைப்பையும் சுவீடன் அமைச்சர் பில்ட்ற் நிராகரித்திருக்கிறார். அத்துடன்,இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டிற்கு இலங்கை கடும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென்று ஐரோப்பிய ஒன்றியமும் எச்சரித்திருந்தது. அது மட்டுமல்லாது எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவம் சுவீடனின் கைகளுக்குச் செல்லவிருக்கும் நிலையில் அதன் பின்னர் இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர்வுகள் எப்படியிருக்கப் போகிறது என்பதில் இலங்கை அரசாங்கத்துக்கு சிறியதொரு சஞ்சலமாவது இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

சிறந்த உதாரணம்...

எவ்வாறிருப்பினும் இலங்கை விடயத்தில் உறுதியான தீர்மானங்களை எடுப்பதில் சர்வதேச சமூகம் இன்னும் தயக்கமான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கை அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடுகளும் அதிரடியான பதிலளிக்கைகளும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அண்மையில் கூட இலங்கை வந்திருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் மில்லிபான்ட், பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது வன்னியில் படைநடவடிக்கைகளால் பொதுமக்கள் கொல்லப்படுவதாக அங்கிருந்து நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கவே, அதை முற்றிலும் மறுத்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, "பொதுமக்களுக்கு எந்த இழப்பும் கிடையாது. பொறுப்புள்ள அராசங்கத்தின் அதிகாரி என்ற வகையில் நான் சொல்வதை நம்பப் போகிறீர்களா அல்லது பயங்கரவாதிகளின் தரப்பிலிருந்து வரும் தகவல்களை நம்பப் போகிறீர்களா' என்று திருப்பிக் கேட்கவே பிரிட்டிஷ் அமைச்சரும் பேச பதிலின்றி எழுந்து வந்திருக்கிறார்.

இதேபோல், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் வன்னி சென்று நேரில் பார்வையிட அனுமதி கோரவே, "நீங்கள் அங்கு சென்றால், பிரபாகரனை பிடிக்கும் எமது திட்டம் பிழைத்துவிடும்' எனப் பாதுகாப்பு செயலாளர் நேரடியாகவே மறுப்புக் கூறியிருக்கிறார். இவ்வாறு அரசாங்கத்தின் ஒவ்வொரு பதில்களும் நடவடிக்கைகளும் கடுமையானதாகவே இருக்கவே சர்வதேச சமூகமும் அதில் சங்கடப்பட்டு நிற்பதாகவே தெரிகிறது.

அத்துடன், மோதல்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை பெற்றுக் கொள்ள விருக்கும் 1.9 பில்லியன் டொலர் நிதியை தாமதப்படுத்த அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியான மறுதினமே அந்த நிதியுதவியை தடுத்து வைக்கும் நடவடிக்கையையோ அல்லது வேறு எந்த நடவடிக்கையையோ மேற்கொண்டு இலங்கையை தண்டிக்கத் தேவையில்லையென ஐ.நா.பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மத்தியில் இணக்கம் காணப்பட்டிருப்பது இலங்கை விடயத்தில் சர்வதேச சமூகத்தின் குழப்ப நிலைக்குச் சிறந்ததோர் உதாரணமாக கூறமுடியும். ஏனெனில், அமெரிக்காவும் ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

இலங்கையின் நம்பிக்கை ஆதாரம்

எது எப்படியிருப்பினும் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பிராந்திய வல்லரசுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் மூன்றும் இலங்கைக்கு முழு ஆதரவாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் தனது நடவடிக்கைகளில் உறுதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்குப் பொதுவான அரசியல் எதிரிகள் என்ற வகையில் இந்தியா, இலங்கைக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனா எப்போதுமே இலங்கையுடன் நட்பாக இருந்து செயற்பட்டு வருவதுடன் இலங்கையில் மின்நிலையம், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுக நிர்மாணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் மறைமுகமாக ஈடுபட்டு வருவதையும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதில், சற்றல்ல வெகுவாகவே விசனப்பட்டிருக்கும் இந்தியா, இலங்கையின் ஆதரவை தாமும் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆட்சேபனை எதுவுமின்றி உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்காக உள்நாட்டு எதிர்ப்புகளை கூட இந்தியா கருத்திற் கொண்டதாக தெரியவில்லை. அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் பிடிபட்டால் அவரை தங்கள் வசம் பெற்றுக் கொள்ளும் இந்தியாவின் நோக்கமும் இதற்கொரு முக்கிய காரணம்.

எது எவ்வாறிருப்பினும் அரசாங்கம் கூறுவது போல வடக்கில் மேற்கொள்ளப்படுவது மனிதாபிமான நடவடிக்கைகளில் அப்பாவிப் பொதுமக்கள் இழப்புகளை சந்திக்காமல் இருப்பது அவசியம். மனிதாபிமானம் இல்லாத வெற்றி வெற்றியாக இருக்க முடியாதென இலங்கை வந்து சென்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.