Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட கட்சிகளுக்குத் தேர்தலில் உரிய பாடம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்புகளுக்குத் தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவோம் என்ற எழுச்சியுடன் புறப்பட்டிருக்கின்றது தமிழக சினிமாத்துறை.இந்திய அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக விளங்கி வருவது சினிமா.

தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸின் ஏகோபித்த ஆட்சியுரிமையை அடியோடு வீழ்த்தி அதனைக் கைப்பற்றி, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தக்க வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டுமே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே திரையுலக செல்வாக்கை வைத்தே மக்கள் மத்தியில் ஊடுருவி வளர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டன என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம். அவ்வாறு தமது பிரபலம் மூலம் அரசியலில் அதிக செல்வாக்குச் செலுத்தும் திறமையும், தகைமையும் கொண்ட தமிழ்த் திரையுலகத்தினரே இப்போது இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்புகளுக்கு எதிராகக் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றனர். தமிழக சினிமாத்துறையின் மூத்த இயக்குநர் பாரதி ராஜா தலைமையில் பல திரையுலகப் பிரமுகர்களும் இன்று முதல் தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர். பிரதான தொகுதிகளில் ஒன்று கூடி பிரசாரக்கூட்டங்களை முன்னெடுக்கும் அவர்கள், இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்பினரை நடக்கப்போகும் தேர்தலில் தோற்கடித்து அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் எனப்பொதுமக்களிடம் பகிரங்கமாகக் கோருவார்கள் என்று அறிவிக்கப்படுகின்றது.

திரையுலகினர் ஒரே மேடையில் தோன்றும் பொதுக் கூட்டங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் திரண்டு வருகின்றமை வழக்கம். திரையுலகினர் ஒரு தரப்பை இலக்கு வைத்து அம்பலப்படுத்த முயல்வது அத்தரப்பினருக்கு பேரிடியாகவும், வரும் தேர்தலில் பேரடியாகவும் அமையும் என்று ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

இலங்கைத் தமிழர்களை நட்டாற்றில் விட்ட பிரதான தரப்பாகத் தமிழகத்தில் குற்றம் சுமத்தப்படுவது காங்கிரஸ் கட்சி மீதுதான். இம்முறையும் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நாற்பது மக்களவைத் தொகுதிகளில் பதினாறில் போட்டியிடுகின்றது.

இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டு, காட்டிக் கொடுத்த குற்றத்துக்காக அந்தப் பதினாறு தொகுதி களிலும் அக்கட்சியை மண் கவ்வ வைத்து நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனத் துடியாத் துடிக்கின்றது தமிழகத் திரையுலகம்.

இந்தியத் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றது. பிரசார நடவடிக்கைகள் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வுக்கு வரப்போகின்றன. இந்த ஒரு வாரமும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலேயே தனது எதிர்ப் பிரசார நடவடிக்கைகளை முறுக்கி விட முடுக்கி விட தீர் மானித்திருக்கின்றது தமிழகத் திரையுலகம்.

காங்கிரசோடு சேர்ந்து, பதவிச் சுகத்துக்காக இலங்கைத் தமிழர்களின் நலனைப் புறமொதுக்கி நடந்து கொண்ட தி.மு.கவும், ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் கிளர்ந்துள்ள அரசியல் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது உறுதி என்கின்றன தமிழகச் செய்திகள்.

இந்தியப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இருந்ததுதான் பாட்டாளி மக்கள் கட்சி. கடைசி நேரத்தில் அணிமாறி, காங்கிரஸிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டாலும், தீவிர ஈழத் தமிழர் ஆதரவுப் போக்குடைய அக்கட்சி, தனது புதிய கூட்டணியின் தலைமைக் கட்சியான அ.தி.மு.கவையே ஈழத்தமிழருக்கு அதிக பரிவு காட்டும் தரப்பாக மாறவைத்துத் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவான மிகத் தீவிரப் போக்குக்கு அ.தி.மு.கவையும் அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவையும் மாற்றச் செய்ததன் மூலம் அந்த அணியில் தாங்கள் இணைந்து கொண்டதன் நியாயத்தை டாக்டர் இராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும், வைகோவின் ம.தி.மு.கவும் நிரூபித்திருக்கின்றன எனலாம்.

ஆனால், தமிழகத்தின் ஆளும் தி.மு.கவோ, தான் சார்ந்த கூட்டணியின் தோழமைக் கட்சியான காங்கிரஸுடன் சேர்ந்து ஈழத் தமிழர்களைக் கைவிடும் செயலுக்கு உடந்தையாகி "சோரம்" போன குற்றத்துக்காக இந்தத் தேர்தலில் பெருவிலை கொடுக்கப் போகின்றது என்று நம்பலாம்.

இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட குற்றத்தில் இனிமேல் பிராயச்சித்தம் செய்யவே முடியாத அந்தத்துக்கு தி.மு.க. வந்துவிட்டதுதான் பரிதாபம். அரசியல் பிழைப்புக்காகப் பொறுப்புடன் செயற்படத் தவறிய அதன் தலைமை, இனிமேல் மீளவே முடியாத அதல பாதாளத்துக்குள் தூக்கி வீசப்பட்டாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை.

அதேசமயம், மறுபுறத்தில் அதன் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவோ, இதுவரை இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அவர்களைத் தூக்கி எறிந்து, அவர்களின் நலன்களைப் புறம் ஒதுக்கி, உதாசீனமாக நடந்து கொண்டாலும் கூட, இப்போது இறுதி நேரத்தில் தன்னைத் திருத்திக் கொண்டு, நேர் வழிப் பாதைக்குத் தன்னை வழிப்படுத்தி, தன்னை உயர்த்திக்கொண்டது மட்டு மன்றி, அரசியலிலும் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டும் விட்டது.

பாவம்! தி.மு.கவும் அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியும். அரசியல் சாணக்கியராகக் கருதப்பட்ட அந்த முதியவரின் அரசியல் காலடி கடைசி நேரத்தில் இப்படித் தான் தவற வேண்டுமா?

40 வெற்றி என்ற செய்திகள் வரும் அப்பொலுது தெரியும் தமிழர் யார் என்று

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கண்டபடி கனவு காணக்கூடாது அங்குக தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக இருக்கின்றது எனும் தரவுகள் எமக்குக் கிடைக்காதவரைக்கும்.

காங்கிரஸ் தொற்பது உறுதி. ஆனால் எமக்கு தி.மு.க வும் தொற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காங்கிரஸ் தொற்பது உறுதி. ஆனால் எமக்கு தி.மு.க வும் தொற்கவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

2000ம் ஆண்டென நினைக்கிறேன். எமக்காக் குரலெடுத்துப் பாடிவரும் மதிப்பிற்குரிய திரு " தேனிசை " செல்லப்பா அவர்கள் யேர்மனியில் நடைபெற்ற எழுச்சி இசை நிகழ்விலே, எதிர்காலத்தில் தமிழகத்திலே தமிழீழத்தக்கு ஆதரவான அணியென்றும் எதிரான அணியென்றும் தேர்தல் களம் மாற்றமடையும் என்றார். அது நிதர்சனமாகி வருகிறது. தமிழக மக்கள் விழிப்போடிருந்தால் மாற்றமொன்று மலரும். தமிழக மட்டத்திலே என்பதை நாம் மனங்கொள்ளல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.