Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளே, தமிழீழ தேசியக்கொடியுடன் நீங்கள் வாழும் நாடுகளின் தேசியக்கொடிகளையும் கவனயீர்ப்புக்கு எடுத்துசெல்லுங்கள்!

Featured Replies

வணக்கம்,

இன்று கனேடிய ஊடகம் ஒன்றில் எமது பெருந்தெரு முடக்கம் சம்மந்தமான உரையாடலில் கருத்துசொன்ன - கடந்த கிழமை சிறீ லங்கா பயங்கரவாத நாட்டிற்கு பயணம் செய்த ஓர் அமைச்சர் பெருந்தெருவை தடைசெய்தவர்கள் அனைவரும் தமிழீழ தேசியக்கொடியை மட்டுமே வைத்து இருக்கின்றார்கள் என்று (அவர்கள் மொழியில் பயங்கரவாத அமைப்பின் கொடி) காரணம் சொல்லி இந்தப் போராட்டம் பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்டது என்று கூறி எங்கள் அனைவருக்கும் பயங்கரவாதிகள் பட்டம் தந்த நிலையில் நிகழ்ச்சி முடிவுற்றது.

நேற்றைய போராட்டத்தில் ஆகக்குறைந்தது சுமார் ஐம்பது தமிழீழ தேசியக்கொடிகளையாவது காணமுடிந்தது. ஆனால்... கனேடிய தேசியக்கொடி ஒருசிலவே காணப்பட்டது. தமிழர்கள் என்று தமிழீழ தேசியக்கொடியை காவுவதன் மூலம் நாங்கள் எங்களை இனம்காட்டக்கூடியதாக இருப்பதுபோல், கனேடிய தேசியக்கொடியை நாங்கள் வைத்து இருந்தாலே நாங்கள் கனேடியர்கள் - அதாவது தமிழ் கனேடியர்கள் என்று எம்மை மற்றவர்களுக்கு சரியாக இனம்காட்ட முடியும்.

தயவுசெய்து தமிழீழ தேசியக்கொடியுடன் நீங்கள் வாழும் நாட்டு தேசியக்கொடிகளையும் கவனயீர்ப்புக்கு எடுத்துசெல்லுங்கள்! அப்போதுதான் நாங்கள் சாதுரியமான வகையில் எமது போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லமுடியும். இல்லாவிட்டால், இப்படியான போராட்டங்கள் பயங்கரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் என்று கூறப்பட்டு எமது முயற்சிகள் பயனற்றதாக்கப்படும். கனேடிய அரசாங்கம் மீண்டும் மீண்டும் இந்தக்கொடிப்பிரச்சனையை காரணம்காட்டி - ஆதாரமாக காட்டி எங்கள் போராட்டங்களை இலகுவாக நசுக்கப்பார்க்கின்றது.

தவிர, தமிழீழ தேசியக்கொடி பயன்படுத்தப்படாமல் நடைபெற்ற போராட்டத்தை அமைதியை விரும்பும் நல்ல தமிழர்கள் நாடாத்தியதாகவும், தமிழீழ தேசியக்கொடி பயன்படுத்தப்பட்ட போராட்டத்தை கூடாத - அதாவது தமிழ் பயங்கரவாதிகள் நாடாத்தியதாகவும் கூறி எம்மிடையே இரண்டுபிரிவுகள் உள்ளன என்று பிரச்சாரம் செய்கின்றார்கள். இப்படியான பிரச்சனைகள் தீர்வதற்கு ஓர் வழி அரைக்கு அரைவாசி தமிழீழ தேசியக்கொடியும், கனேடிய தேசியக்கொடியும் போராட்டத்தில் பயன்படுத்தப்படவேண்டும். அல்லது, தனியே கனேடியத் தேசியக்கொடியை காவிக்கொண்டு தெருவில் இறங்கி இருக்கவேண்டும்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தை விட இங்கிலாந்தில் கூட காலம் இருந்தாலும், எனக்கு பிருத்தானிய கொடியை பிடிப்பதில் உடன்பாடு இல்லை.....

எதோ கடன் வாங்கின காசை மிதப்பாய் செலவழிப்பது போல....

இங்கு புலி கொடியை பிடிக்க கூடாது என்று சொல்வாதலேயே - பிடிக்க வேணும் போல் உள்ளது!!

பத்து கொடி பிடித்தால் பறித்து போடுவார்கள்.......ஒரே நேரத்தில் ஆயிரம் கொடி பிடித்தால்....?!

வெள்ளைகாரனுக்கும் சம்மதம் எம்மவற்கும் சம்மதம் என்றால் பிரித்தானியா கொடியின் நடுபகுதியை கிழித்து கொண்டு ஒரு புலி....ஒரே ஒரு சின்ன குட்டி புலி ஒன்று பாய்ந்து வருவது போல ரீமிக்ஸ் பண்ணி பிடிக்கலாம்!!!

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.