Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி அழிப்பு யுத்தம்

Featured Replies

சிறீலங்கா இராணுவம் தனது இறுதிஅழிப்பு யுத்தத்தைத் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக வன்னியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்தால் உங்கள் உங்கள் உறவுகளைக் காக்க ஏதாவது செய்யுங்கள்.

  • தொடங்கியவர்

'Safety zone' in smoke, close-quarter fighting is on

[TamilNet, Friday, 15 May 2009, 05:39 GMT]

The entire safety zone area is in smoke since the early hours of Friday as shelling by the Sri Lanka Army was destroying all the structures within a narrow strip of coastal land which is densely populated with tens of thousands of people. 75% of the population remains under bunkers as close quarter fighting was heard. Hundreds of civilians are being killed and maimed in the carnage caused by the SLA, which attempts to enter the remaining part of the so-called safety zone before the election results are published in India.

People were dying without water and food as gunfire by the SLA was reaching from all the directions, a rescue worker who remains under the bunkers near the hospital told TamilNet. Casualties are uncountable.

Nobody is there to take care of the wounded at the hospital as all the civil activities have come to a standstill.

No civil movement was reported as SLA was using its maximum fire power on densely populated safety-zone which has been under siege for months.

http://tamilnet.com/art.html?catid=13&artid=29368

எல்லாமே காலம் தள்ளிவிட்டது! இந்தியா தான் நினைத்ததை செய்;து முடிக்கிறது! இந்திய வெளியுறவு அமைச்சர் அமரிக்காவின் வேண்டுகேளை நிராகரித்துடன் தனக்கு 48 மணிநேரம் அவகாசம் தரும் படியும் அதன் படி இன்னமும் 24 மணி நேரத்தில் அதாவது இந்திய தேர்தல் முடிவுகள் வெளியாக முன் புலிகளின் கதை முடிந்து விடும் என கூறியுள்ளார். கடல் வழியாக மக்களை காக்க அமரிக்கா எடுத்த முடிவுக்கு தடை போட்ட இந்தியாவே மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு உடந்தையாகியுள்ளனர்.

எமக்கு எதிரி சிறீ லங்கா மட்டுமல்ல அல்ல இந்தியாவே! இந்தியா பாவிக்கும் ஆயுதம் சிறீ லங்கா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி 'மக்கள் காப்பு வலயம்' இன்று அதிகாலை 4:30 நிமிடமளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறுகின்ற சூழலில் - அந்தச் சண்டைகளில் சிறிய ரக தாக்குதல் துப்பாக்கிகள் தவிர பெரும் கனரக ஆயுதங்களைப் பாவிக்கக முடியாத நிலை இருந்தும் -

நெடுந்தூர மற்றும் குறுந்தூர கனரக பீரங்கள், பல்குழல் வெடிகணை ஏவிகள் கொண்டு தரைப்படையினரும், ஒலிமிகை வேக போர் வானூர்திகள் மற்றும் தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு வான் படையினரும், அதிவேக தாக்குதல் படகுகளின் கனரக பீரங்கிகள் கொண்டு கடற்படையினரும் - சாதாரண தமிழ் பொதுமக்களை இலக்கு வைத்து ஈவு இரக்கமற்ற கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

'இறுதி தாக்குதல்'

இதேவேளையில் கொழும்பு படைத் தலைமையக உயர் வட்டாரங்களில் இருந்து மிக நம்பகமான ஒரு வழியில் தற்போது கசிந்த தகவலின் படி -

தற்போதைய இந்த தாக்குதல் ஒர் 'இறுதி தாக்குதல்' என்ற வகையில், அரச மற்றும் படை உயர் பீடங்களினால் சில நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டதாகவும் -

அத்தகைய ஒர் 'இறுதி தாக்குதல்' மேற்கொள்ளப்படும்போது 30 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என கணிக்கப்பட்டதாகவும் -

அந்த அளவுக்குப் பெரும் தொகையில் மக்கள் கொல்லப்படும் நிலை இருந்தாலும், இந்த திட்டத்தை முன்னெடுத்து இந்த 'இறுதி தாக்குதலை' மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாவும் தெரிய வருகின்றது.

இந்த பின்னணியிலேயே - சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் - அடுத்து வரும் 48 மணிநேரத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலய'த்திற்குள் படையினர் நுழைவர் என்று கடந்த சில நாட்களுக்குள் அறிவித்திருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது 'பாதுகாப்பு வலய' பகுதிக்குள் நுழையும் தாக்குதலை அடுத்து வரும் 48 மணிநேரத்தில் படையினர் மேற்கொள்வர் என்று தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து -

ஜோர்தானில், நேற்று நடைபெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அடுத்த "48 மணிநேரத்தில் இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இத்தகைய பின்னணியிலேயே - 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீதான மூர்க்கத்தனமான இன்றைய தாக்குதலை தமது மூன்று சிறப்புப் படையணிகளான - 53, 58, 59 ஆகிய படையணிகள் இணைந்து தொடங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன.

வரலாற்றின் உச்ச மனிதப் பேரவலம்

வன்னியிலிருந்து 'புதினம்' செய்தியாளர் அனுப்பிய ஆகப்பிந்திய தகவலின் படி -

கரையமுள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மிகக் கடுமையான நேரடிச் சண்டை நடைபெறுகின்றது.

இவற்றுக்கு அப்பால் - ஏனைய பகுதிகளிலில் இருக்கும் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான தாக்குதலை சிங்களப் படைகள் நடத்துகின்றன.

இந்த தாக்குதல்களில் - கனரக ஆயுதங்களை மட்டுமன்றி - வீழ்ந்து வெடிக்கும் இடங்களைப் பற்றி எரிய வைக்கும் ஒருவிதமான இரசாயனக் குண்டுகளையும் சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பெருமளவில் வீசுகின்றனர்.

'மக்கள் காப்பு வலயம்' எங்கும் நெருப்புப் பற்றி எரிவதுடன் - வான் பரப்பு புகை மண்டலமாகி இருக்கின்றது.

இந்த கரும்புகை மண்டலத்திற்கு மேலே பறக்கும் சிங்களப் போர் வானூர்திகள் - கீழே எதனையும் தெளிவாகப் பார்க்க முடியாத நிலையில் - கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுகின்றன.

தாக்குதலுக்கு அஞ்சி சிதறி ஓடிய மக்கள் மீது தொடர்ந்து குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால் - தெருத் தெருவாக தமிழர்கள் கொல்லப்படுவதுடன், அவர்களது நூற்றுக்கணக்கான அவர்களது உடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே குவியல் குவியலாகக் கிடக்கின்றன.

பல இடங்களில் - பதுங்குகுழிகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால், பலர் அவற்றிற்குள் மூடுண்டும் கொல்லப்படுகின்றனர்.

பீரங்கி குண்டுச் சிதறல்களினாலும் இரசாயனத் திரவங்களாலும் - படுகாயமடைந்தும், உடல் அவயவங்களை இழந்தும், கொதிக்கும் எரிகாயங்களுடனும் ஆயிரக்கணக்கானவர்கள் தெருத் தெருவாகவும், பதுங்கு குழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அப்படி அப்படியே கிடந்து கதறுகின்றனர்.

இவர்களை தூக்கி எடுக்கவோ, சிகிச்சைகள் அழிக்கவோ எவரும் இல்லை. யாருக்கும் யாரும் உதவ முடியாமல் எல்லோர் மீதும் குண்டுகள் வீழும் பெரும் மனித அவலம் நிகழ்கின்றது.

சில இடங்களில் - படுகாயமடைந்து வீழ்ந்து கிடந்த மக்களுக்கு மேலாகவும், பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்பு தேடி பதுங்கியிருந்த மக்களுக்கு மேலாகவும், சிங்களப் படையினர் தமது கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளை ஏற்றிச் சென்றதை தாம் நேரில் கண்டதாக தப்பி வந்த மக்கள் சிலர் கதறலோடு சுறுகின்றனர்.

இதேவேளையாக - எற்கெனவே அண்மைக்காலமாக குடிதண்ணீர், உணவு எதுவுமே கிடைக்காத நிலையில் பசிக்கொடுமையால் வாடிய மக்கள் பலர் இப்போது பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்கின்றனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.