Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல ஆயிரம் மக்களின் இறுதி மூச்சு நிற்கப்போகும் இறுதி நிமிடங்கள்: எம் மக்களின் குருதிகள் தோய்ந்த நினைவுகளுடன் விடுதலையை நோக்கி நாம் நடப்போம்

Featured Replies

தம்மை காப்பாற்றக்கோரி போரில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் விடுத்த வேண்டுகோள்களை அனைத்துலக சமூகமும் சரி, மனிதாபிமான அமைப்புக்களும் சரி முற்றாக புறக்கணித்துள்ள நிலையில் அந்த மக்களின் இறுதி மூச்சுக்களை அடக்கும் தாக்குதல்களை சிறீலங்கா படைகள் ஆரம்பித்துள்ளன.

முள்ளிவாய்கால் பகுதி குருதியினால் தோய்ந்து போகின்றது, அங்கு குழந்தைகளினதும், பெண்களினதும், முதியவர்களினதும் மரணஓலங்கள் மட்டுமே குண்டு சந்தங்களுக்கு மத்தியில் எழுகின்றன. பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களும் மரணமடைந்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் முன்நகரும் படையினரால் சுட்டு கொல்லப்படுகின்றனர். இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஒரு குறுகிய நேரத்தில் குறுகிய நிலப்பரப்பில் மனித குலம் சந்தித்துள்ள பேரிழப்பு இது.

வன்னி பகுதிக்கான தொலைதொடபுகள் முற்றாக இல்லாது போயுள்ளதால் இராணுவத்தின் தகவல்கள் தான் உலகத்தை எட்டி வருகின்றன. எல்லா மக்களையும் வெளியேற்றி விட்டோம் என அறிக்கை விட்டுள்ள சிறீலங்கா அரசு எஞ்சியுள்ள மக்களை கூட்டம் கூட்டமாக திட்டமிட்ட முறையில் படுகொலை செய்து வருகின்றது.

கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளில் 25 தொடக்கம் 30 ஆயிரம் மக்களே வெளியேறியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே தற்போது எஞ்சியுள்ள பகுதியில் மேலும் பல ஆயிரம் இருப்பது உண்மை. அவர்களை காப்பாற்றும் சமரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் சமராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் விடுதலைப்புலிகளின் அனைத்துலக இரஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி திரு செல்வராஜா பத்மநாதன் அமெரிக்காவிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். பாரிதொரு மனிதப்பேரவலம் ஏற்படும் முன்னர் பல ஆயிரம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துலகத்திற்கு உண்டு. அமெரிக்காவினால் அதனை மேற்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் முன்வரவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று வரையிலும்; வன்னியில் நடைபெற்றுள்ள மனிதப்பேரவலம் தொடர்பான அனைத்துலகத்தின் அசைவுகள் மந்தமாகவே உள்ளன. அங்கு கொல்லப்பட்ட மக்கள் தொடர்பாக அனைத்துலக ஊடகங்களும் சரி, மனிதாபிமான அமைப்புக்களும் சரி அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை அனைத்தும் சிறீலங்கா அரசின் பிரச்சாரப்போரில் சிக்குண்டு போயுள்ளன.

படைத்தரப்பை பொறுத்தவரையில் உளவியல் போரை மேற்கொண்டு அனைத்துலகத்தில் பரந்துவாழும் மக்களின் உளவுரன்களை முற்றாக முறிடிக்க முயன்று வருகின்றது. அதன் மூலம் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் எழுச்சிகளை அடக்கிவிடவும் முனைந்து வருகின்றது.

ஆனால் மனிதப்பேரவலத்தை நிறுத்த முடியாது போரை தூண்டிய அனைத்துலகத்திடமும், அவலப்பட்ட மக்களை படுகொலை செய்வதற்கு சிறீலங்கா அரசிற்கு காலஅவகாசம் வழங்கிய அனைத்துலகத்திடமும், செயற்திறன் அற்றுப்போன ஐ.நாவிடமும் நாம் நீதிகேட்க நாம் கிளர்ந்து எழவேண்டும். அனைத்துலக சமூகம் இந்த மனிதப்பேரவலத்தை தடுக்க தவறியதற்கான காரணம் எமக்கு தேவை. சிறீலங்கா அரசின் படுகொலைகளை அனுமதித்து எமது மக்களை புறம்தள்ளியதற்கான பதிலை அவர்கள் கூறவேண்டும்.

ஜனநாயகம் என்ற சாயத்தை பூசியுள்ள இந்த அனைத்துலக சமூகத்தின் வாசல் கதவுகளை திறப்பதற்கு நாம் எமது பெரும் பலம் கொண்டு மோதுவோம்.

அணிதிரளுங்கள் எம் உறவுகளே,

குறுகிய நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் மக்களின் குருதிகள் தோய்ந்த நினைவுகளுடன் எமது விடுதலையை நோக்கி நடப்போம்.

www.sankathi.com

Edited by thamizhanpan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.