Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? - இலங்கை அரசின் அறிவிப்பில் எழும் சந்தேகங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக, இலங்கை ராணுவம் இன்று அறிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியில் நம்பகத்தன்மை இல்லாதவண்ணம் சூழல் நிலவுவதாக, சர்வதேச தமிழ்ச் சமுதாயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்துவிட்டதாக, இன்று (மே 18) காலை தொடங்கியே இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, புலிகளின் அரசியல் தலைவர் நடேசன், சமாதான செயலர் தலைவர் புலித்தேவன், புலிகளின் சிறப்பு ராணுவத் தலைவர் ரமேஷ் ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டதாக, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

இடையிடையே, இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மையென இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கார ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வந்ததும், பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.

அதன்பின், எஞ்சிய புலிகளின் முக்கியத் தலைவர்களை இலங்கை ராணுவம் சுற்றி வளைக்க, பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் வாகனம் ஒன்றில் தப்பியோட முயன்றதாகவும், அப்போது பிரபாகரனை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் இலங்கை அரசு தொலைக்காட்சி சேனலில் செய்தி வெளியிடப்பட்டது. இதை, இலங்கை ராணுவமும் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், முப்படைகளின் தலைவர்களும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து போர் முடிவடைந்ததை அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிகழ்ச்சியையும் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

ஆனால், இன்றைய நிகழ்வை உற்று நோக்கும்போது, புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில் உண்மைத் தன்மை இல்லை என்றும், அந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது என்றும் சர்வதேச தமிழ்ச் சமூகம் தெரிவிக்கிறது. இது, இலங்கை நிகழ்வை உற்று கவனித்து வரும் சிலரிடம் பேசியபோது தெரிய வருகிறது.

போர்ப் பகுதிகளில் நடப்பனவற்றை, இலங்கை ராணுவமோ அல்லது அரசோ தெரிவிப்பதை வைத்து மட்டுமே உலக நாடுகள் நம்ப வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, இந்தத் தகவல்களை உறுதி செய்து கொள்வதில் குழப்பம் மேலிடுகிறது.

இதற்கு முக்கியக் காரணம், சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கொழும்புவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, போர் நடக்கும் வடக்குப் பகுதிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. அண்மையில் கூட போர்ப் பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்ற இங்கிலாந்தின் சேனல் 4 என்ற ஊடகத்தின் நிருபர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால், போர் பகுதியில் நிகழ்ந்தவற்றை புகைப்படங்கள் அல்லது வீடியோ வாயிலாகவே ஆதாரமாக வெளியிட்டு, தாங்கள் வெளியிடும் செய்திகளை நிரூபிக்கும் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு.

இந்தச் சூழலில், பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறும் இலங்கை அரசு, அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்தை, இதுவரை (இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணி) வெளியிடவில்லை.

இதனால், பிரபாகரன் மரணமடைந்தார் என்றச் செய்தியை பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ்ச் சமுதாயம் நம்ப மறுப்பதாகவே தெரிகிறது.

இலங்கையில் போரை நிறுத்தவில்லையெனில், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அண்மையில் முதன்முதலாக, நேரடியாகவே இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல், போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு சர்வதேச சமுதாயம் கடுமையாக எச்சரிக்கை கொடுத்து வந்தது. இதனால், அந்நாட்டு அரசு நெருக்கடிக்கு உள்ளானதாகவே தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், பிரபாகரன் உள்பட புலிகள் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடுவதால், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைத் திசை திருப்ப முடியும் என்பதாலேயே இப்படிச் செய்ததாக, ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், பிரபாகரன் தப்பிச் செல்ல முற்பட்ட போது, அவரைச் சுட்டுக் கொன்றதாக செய்தி வெளியிடும் இலங்கை ராணுவம், அப்படி மிக நெருக்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் பிரபாகரனின் உடலை இதுவரை அடையாளம் காணவில்லை என்பது அவர்களது வாதம்.

இந்த சந்தேகம் மேலும் வலு சேர்க்கும் வகையிலேயே, இதுவரை 18 முக்கிய புலிகளின் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பட்டியல் ஒன்று, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொட்டு அம்மான், நடேசன், சார்லஸ் ஆன்டணி உள்பட 18 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளவே தவிர, பிரபாகரனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக, பிரபாகரனின் உடலை அடையாளம் காணும் பணியில் ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளதாக, அந்தப் பட்டியலின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போர்க் களத்தில் இறந்து கிடைக்கும் பலரது உடல்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என ராணுவம் கூறிவருவதாகவும் சிலர் புகார்களை எழுப்புகின்றனர்.

போர்ப் பகுதிகளில் சென்று செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாததால், சர்வதேச ஊடகங்கள் அனைத்துமே, இலங்கை அரசு தரப்பு சொல்லும் தகவல்களை மட்டும்தான் மேற்கோள் செய்தி வெளியிட வேண்டிய நிர்பந்தம் உள்ளதால், அந்தச் செய்திகளில் நம்பகத்தன்மை குறைவு என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையிலேயே, இலங்கை அரசின் இன்றைய அறிவிப்புகளும், குறிப்பாக பிரபாகரன் மரணம் குறித்த தகவல் சந்தேகத்தை எழுப்புகின்றது என்பது தமிழ்ச் சமூகம் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

வீடியோ அல்லது புகைப்பட ஆதாரங்களை வெளியிட வேண்டிய இலங்கை அரசு, அப்படி எதையும் இதுவரைச் செய்யாதிருப்பதும் ஊடகங்கள் மத்தியிலேயே கேள்வி எழுப்பச் செய்கிறது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான போரை நிறுத்துவதற்காக, உலக நாடுகள் முழுவதுமுள்ள தமிழர்கள் அண்மைக்காலமாக தங்களால் இயன்றவரை முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு நாடுகளில் அவர்கள் போராட்டங்களும், உண்ணாவிரதமும் நடத்தினர்.

தமிழினத்தைக் காப்பதற்காக, இவ்வாறு அல்லும் பகலுமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்த தமிழ் மக்கள், இலங்கை அரசு தரப்பில் இருந்து வெளியிடும் செய்திகளைக் கண்டு, ஒரு புறம் அதிர்ச்சியும் துயரமும் அடைந்து வந்தாலும், அந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை மீது தொடர்ந்து வினா எழுப்பி வருகின்றனர்.

http://www.vikatan.com/vccms/vcunicode.asp?artid=1197

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.