Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தமிழர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது: பத்மநாதன் தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தமிழர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது: பத்மநாதன் தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி

தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் பாதுகாப்பாக உயிருடன் உள்ளதாகவும், மற்றும் பல மூத்த உறுப்பினர்களும், தலைவர்களும் தங்கள் உயிர்களை கொடுத்தது அல்லது கொல்லப்பட்டார்கள் என்பது மிகவும் துரதிஷ்டவசமானதென்றும் தமிழ்நெற் இணையத்தளத்துக்கு, திங்கட்கிழமை அன்று விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பு பொறுப்பாளர், செ. பத்மநாதன்

கூறியுள்ளார்.

மேலும், சிறிலங்கா அரசு இராணுவ வெற்றியை அறிவித்திருந்தாலும், அது ஒரு கூனலான வெற்றியென்பதை சிறிலங்கா அரசு உணரவில்லை. தமிழரின் நம்பிக்கையை சிறிலங்கா அரசு முற்றாக இழந்துள்ளது என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தப்படாத செய்திகளை அறிவிப்பதென்றும், எமது பல மூத்த உறுப்பினர்களும், தலைவர்களும் தம் உயிர்களை துறந்தது அல்லது கொல்லப்பட்டதோ மிகவும் ஒரு துரதிஷ்டவசமானதென்றும், ஆனால் எமது தேசியத் தலைவர் உயிரோடு நன்றாகவே உள்ளார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் கூறினார். எனினும், எமது மக்களின் நம்பிக்கையும் ஆசைகளும் உணரப்படும்வரை எமது போராட்டம் தொடரும் என்பது முக்கியம் என்றும் கூறி தமிழ்நெற்றுக்கு பத்மநாதன் கொடுத்த செவ்வி பின்வருமாறு:

தமிழ்நெற்: தற்போதைய நிலைமையின் வெளிச்சத்தில், விடுதலைப் புலிகளின் எதிர்காலம் என்ன?

பத்மநாதன்: நாம் முன்பு கொடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்ததுபோல், நம்பக்கூடிய அரசியல் வழிகளூடக தமிழ்த் தேசியக் கேள்விக்கு ஒரு தீர்வு காண்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எமது மக்களைக் காப்பாற்றுவதற்கே நாம் இந்த நிலையை எடுத்துள்ளோம். சிறிலங்கா இராணுவம் எங்கள் மக்களை இராணுவரீதியில் தாக்கி பலியாக்குவதை எம்மால் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறிலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது இது தான் முடிவென்று இராணுவத்தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சரணடைந்து வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது.

சர்வதேசச் சமூகமும் சிறிலங்காவுக்கு எதிராக ஒரு திடமான நிலையை எடுத்து சிறிலங்காவை ஒரு முறையான முடிவை எடுக்கச் சொல்லி ஊக்குவிக்கவில்லை.

நடந்த நிகழ்வுகளையிட்டு நாங்கள் மிகவும் துக்கத்திலுள்ளோம். ஆனால் சிறிலங்காவில் தமிழர்களின் எதிர்காலமும், தமிழ்த் தேசியக் கேள்வியும் தீர்வொன்று இல்லாமல் தான் உள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு அரசியல் நடைமுறை இல்லாமையும், மக்களைக் பாதுகாக்க ஒரு யக்கமுறையின் தேவையுமே முதலில் விடுதலைப் புலிகளை ஆயுதங்கள் எடுக்கத் தூண்டியது. இன்று, இக்கேள்விக்கு பதில் அருகாமையிலும் இல்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கேள்வியை முன்னெடுத்துச் செல்ல மக்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. இவ்விடத்தில், எமது அமைப்பு எமது மக்களின் சம்மதத்துக்கேற்று வேறு நடைமுறைக்கேற்ற வழிகளை எடுப்பதற்கு எப்போதும் தயார் என்பதை மீண்டும் கூற விரும்புகிறோம். மேலும், இதற்கு உதவ உலகெங்கும் வாழும் தமழ் மக்களும் ஒன்றாக இணைவார்கள் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.

தமிழ்நெற்: தற்போதைய நிலைமையில், விடுதலைப் புலிகளை ஒரு அழிந்த சக்தியென மற்றைய சக்திகள் பல பார்க்கின்றன. இந்நிலையில், விடுதலைப் புலிகள் எப்படி மக்களைத் திரட்டி தேவையான தலைமையை கொடுக்க முடியும்?

பத்மநாதன்: எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் ஒரு நீண்டகாலப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது, மற்றும் எம் அமைப்பு யுக்திகளை விரிவுபடுத்தும்போது புது நடைமுறைகளுக்கு ஒத்துப்போகும் தேவை இருக்கிறதென்பதை அறிந்துள்ளது. உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப்புலிகளின் மீதானதும் தமது தாய்நாட்டுடனானதும் உள்ள திடமான ஆதரவை தங்கள் திரளணிகள்மூலம் உலகுக்குக் காட்டியுள்ளார்கள்.

இறுதியாக நடந்த வன்னி இனப்படு கொலையும் மனிதப் பேரவலமானதும் புலம்பெயந்து வாழும் தமிழ் மக்களினது ஒற்றுமையையும் எமது தலைமையையும் இன்னும் வலிமையாக்கியதோடு தமக்கு ஒரு நியாயம் நாடுவதை உறுதியாக்கியுள்ளது.

இதை நாம் தனியே அடைந்துவிட முடியாதென்பதும் எமக்குத் தெரியும். ஈழத்தமிழர்களின் நலனுக்கும் எதிர்காலத்துக்கும் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாடுபடும் ஒவ்வொரு தமிழனினதும், அரசியல் கட்சிகளினதும் பங்கை நாம் மிகவும் போற்றுகின்றோம். இதை அடைவதற்கு, இந்தியாவில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம். தமிழ் மக்களின் நலனை நாம் முன் வைப்பதுதான் தேவை.

ஒரே காரணத்துக்காக, தமிழ்த் தேசியக்கேள்வியின் விடைக்காக முன்பு சிறிலங்காவில் பல தமிழ்க் கட்சிகள் ஆயுதங்களை எடுத்துப் போராடினார்கள். அடிப்படையில் இவர்களும் இதே கொள்கைகளை மதிக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். இந்த நேரத்தில், அவர்கள் முன்வந்து எம்மோடு சேர்ந்து செயற்படுவார்கள் என்று நாங்கள் நேர்மையாக நம்புகின்றோம்.

தமிழ்நெற்: சர்வதேச் சமுதாயமானது தமிழ் மக்களை தோர்வியடையவைத்துவிட்டது என்று கூறியிருந்தீர்கள்? இப்போது, உங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எப்படி சர்வதேசத்தின் நம்பகத் தன்மையை மீண்டும் பெறப்போகிறீர்கள்?

பத்மநாதன்: 1948 ஆம் ஆண்டில் இருந்து தமிழர்கள் நோக்கிய பாரபட்சமும் ஒதுக்கப்பட்டதும் சர்வதேசம் நன்கு அறிந்ததே. நாங்கள் அரசியல் வழிகளில் ஒரு நம்பக தன்மையான நிலைமையை அமைக்கலாம் என்று நம்புகின்றோம்.

இதில் இந்தியாவின் பங்கு ஒரு முக்கியமானது என்று பார்க்கிறோம்.

சிறிலங்காவினதும் இந்தியாவினதும் தமிழ் மக்கள் பொதுவான மொழிப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்டுள்ளார்கள். இதுவானது, எம்மை இந்தியா உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களோடு எம்மை இணைத்துள்ளது.

இந்தியாவினதும் எங்கள் தமிழர்களின் ஆர்வங்களும் ஒரே கோட்டில் உள்ளன என்றும் வரலாற்றின்படி இலங்கைத்தீவினதும் இந்தியாவினதும் உண்மையான நண்பர்கள் தமிழ்மக்களே என்று நாம் பார்க்கின்றோம்.

இந்த முக்கியமான நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மதிப்பு, கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நிலையை இந்தியாவை எடுக்கும்படி கேட்கின்றோம்.

இந்தியாவுக்கு புவியியல் சார்ந்த அரசியல்ரீதியாக ஒரு முக்கிய பங்குள்ளதையும் நாங்கள் அவர்களோடு மிக நெருங்கிச் செயற்பட வேண்டும் என்பதையும் நாம் நன்கு அறிவோம். இந்நேரத்தில், இலங்கைத் தமிழரின் எதிர்காலத்துக்காக, விடுதலைப் புலிகளானது இந்தியாவுடன் சேர்ந்து செயற்படத் தயாராக உள்ளது.

http://www.pathivu.com/news/1887/54/.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.