Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் டிஎன்ஏ சோதனை வசதி இல்லை!-பேராசிரியர் பி.சந்திரசேகரன்

Featured Replies

சென்னை: இலங்கையில் மரபணுச் சோதனை எனப்படும் டிஎன்ஏ டெஸ்ட்டிங் மற்றும் மேப்பிங் செய்வதற்காக அடிப்படை வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை என இந்திய தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் பி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சந்திரசேகரன் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் துறை இயக்குநராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ[^] விசாரணைக்கு பேருதவியாக இருந்தவர். இவர் தான் சிதைந்து போன தணு, சிவராசன் ஆகியோரின் உடல்களை அடையாளம் காண உதவினார்.

இந் நிலையில் பிரபாகரன் இறந்ததாக ராணுவம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துவிட்டதாகவும், அவரது மகன் சார்லஸ் ஆண்டனியின் டிஎன்ஏ சோதனையும் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளது இலங்கை ராணுவம்.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள சந்திரசேகரனை தட்ஸ்தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவரது பேட்டி:

கேள்வி: உடனடி டிஎன்ஏ சோதனை செய்வதற்கான நவீன வசதிகள் இலங்கையில் உள்ளதா?

பதில்: எனக்குத் தெரிந்து 2008 வரை அங்கே அப்படிப்பட்ட வசதிகள் இருந்ததாக நினைவில்ல்லை. இலங்கை நீதிபதிகள் சமீபத்தில் பெங்களூர் வந்திருந்தனர். அவர்களுக்கு நாங்கள்தான் தடயவியல் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் குறித்த பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தோம். அதன்பிறகு அங்கே டிஎன்ஏ சோதனைக்கான வசதிகள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை.

அப்படியே இருந்தாலும், இரண்டு மணி நேரத்திலெல்லாம் டிஎன்ஏ சோதனையை நடத்தி முடிப்பதாகச் சொல்வதென்றால்... என்ன விளையாடுகிறார்களா!. இதென்ன ரத்த, சிறுநீர்ப் பரிசோதனையா...!. பிரபாகரன் உடல் என்று கண்டெடுத்ததாக இவர்கள் காட்டுவது வடக்கு இலங்கையில். கொழும்பிலிருந்து ஃபோரன்ஸிக் லேப்பை அங்கே நகர்த்திக் கொண்டு போய் டெஸ்ட் செய்தோம் என்று சொல்ல வருகிறார்களா...!!.

அடுத்து, டிஎன்ஏ டெஸ்ட் என்பதே லேசுபட்ட காரியமல்ல. இறந்த ஒருவரது ரத்தத்திலிருந்து டிஎன்ஏ பார்க்க முடியாது. உடலின் திசுக்களை எடுத்து தான் சோதிக்க வேண்டும். அதன் பிறகும் கூட நேரடியான முடிவுகள் கிடைக்காது. 'நான்தான் பிரபாகரன்' மரபணு என்று வந்து அது சொல்லிவிடாது. ஒரு பார்கோட் (bar code) மாதிரிதான் உங்களுக்கு ரிசல்ட் கிடைக்கும். இந்த ரிசல்டை வைத்தும் பிரபாகரன் மரபணு இதுதான் என்றும் கூற முடியாது. அதனுடன் ஒப்பிட, பிரபாகரன் உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள, திசுக்களில் பெறப்பட்ட டிஎன்ஏ சோதனை முடிவுகள் இருக்க வேண்டும்.

இலங்கையிடம் அப்படி ஏதாவது இருக்கிறதா... பிரபாகரன் உயிருடன் இருந்தபோது ராணுவத்தினர் அவரிடம் இருந்து ரத்த, திசு மாதிரிகளை வாங்கி வைத்திருக்கிறார்களா?...

கேள்வி: சார்லஸ் மற்றும் பிரபாகரன் மரபணுக்கள் ஒத்துப் போவதாகச் சொல்கிறார்களே?

பதில்: பிரபாகரன் மகன் சார்லஸ் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு நாள் கழித்தே பிரபாகரன் உடலைக் காட்டினார்கள். இதில் டிஎன்ஏ சோதனை நடத்துவது எப்படி சாத்தியம்?. முட்டாள்தனமான வாதம் இது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்க முயலும் இலங்கை ராணுவம் அதற்காக விஞ்ஞானப்பூர்வ வழிகளை கேலிக்குள்ளாக்குவது போல் பேசி வருவதாகவே எனக்குப் படுகிறது.

கேள்வி: ராணுவம் காட்டியிருப்பது பிரபாகரன் உடல் இல்லை என்று கூறப்படுகிறதே...

பதில்: இதில் சந்தேகங்கள் வருவது இயல்புதான். காரணம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது உண்மையென்றால் அதற்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று அவர் சயனைடு சாப்பிட்டு இறந்திருக்க வேண்டும். அப்படியென்றால் அதனால் ஏற்பட்ட அறிகுறிகள் காயங்கள் வாய், நாக்கு, முகத்தில் இருந்திருக்கும். ராணுவம் காட்டிய படத்தில் அப்படி எதுவுமே இல்லை.

அடுத்து பிரபாகரன் எப்போதும் பிஸ்டல் வைத்திருப்பவர். தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்றால், அதற்கான சரியான காயங்கள் இருக்க வேண்டும். தலைப் பகுதியில் சுட்டுக் கொண்டிருந்தால் முழுமையாக உருமாறியிருந்திருக்கும். அதற்கும் வாய்ப்பில்லை.

மூன்றாவது சாத்தியம், ராணுவத்தால் சுடப்பட்டு இறந்திருக்கலாம். ராணுவம் அப்படித்தான் கூறுகிறது. டபுள் பேரல் கன் மூலம் சுட்டுக் கொன்றதாக சொல்கிறார்கள். அப்படிச் செய்திருந்தால் தலைப்பகுதி மட்டும் காயமடைந்தும், மற்ற பகுதிகளில் சின்ன சுருக்கமோ, கரும் திட்டுக்களோ கூட இல்லாமல் இத்தனை தெளிவாக இருக்கவும் வாய்ப்பே இல்லை.

சுட்டபோது பாதி தலை கழண்டு விடும், ஆனால் முகம் அப்படியே இருக்கும் என்பதை யாராவது நம்புவார்களா...

ஏற்கனவே இறந்தவரை சுட்டிருக்கலாம்...:

நான்காவது சாத்தியக்கூறு ஒன்றும் உள்ளது... அதாவது, ஏற்கெனவே இறந்துவிட்ட உடலில் சுட்டுவிடடு, தாங்கள் கொன்றுவிட்டதாகக் கூறுவது. ராணுவம்[^] அதைத்தான் செய்கிறதா என்று தெரியவில்லை.

கேள்வி: கருணா, தயா போன்றவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்களே...?

பதில்: அது ஒரு சடங்கு. இறந்தவர் உடலை அவருக்குத் தெரிந்தவர்களை வைத்து அடையாளம் காட்டுவது ஒரு நடைமுறை. ஆனால் அதற்கு பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்டதன் உடைகளைக் களைந்து சேறு பூசி காட்ட வேண்டிய அவசியமென்ன... பிரபாகரன் உடலில் உள்ள மச்சங்கள் அவர் மனைவிக்குத்தான் தெரியும். கருணாவுக்கும் தயாவுக்கும் என்ன தெரியும் என்று நிர்வாணப்படுத்திக் காட்டுகிறார்கள்?. இது முழுக்க முழுக்க நாகரிகமற்ற, அபத்தமான செயல்.

கேள்வி: பிரபாகரன் உடலை என்ன செய்வார்கள்?

பதில்: பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதத்தை விடுத்துப் பாருங்கள். 30 ஆண்டுகள் உலகின் கவனத்தைத் தன் மீது திருப்பி வைத்திருந்தவர் பிரபாகரன். அவரது உடல் என்று ஒன்றைக் காட்டும் ராணுவத்தினருக்கு, அது பிரபாகரனுடையதுதான் என்பதை அழுத்தமாக நிரூபித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது.

அதிலும், ஜனநாயக நாடு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் நாடு என இலங்கையை அறிவித்துள்ள ராஜபக்சே, பிரபாகரன் மரணத்தை உரிய விஞ்ஞான முறைப்படி உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்து அவரது உடலை அப்படியே பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினர் அந்த உடலை எப்போது கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு இலங்கைக்கு உள்ளது. போரில் பிடிபட்ட பிணங்களைக் கூட சர்வதேச சட்டப்படி அவர்களது குடும்பத்தினர் இறுதிக் கடன் செய்ய வசதியாக ஒப்படைக்க வேண்டும்.

எனவே பிரபாகரன் உடல் என்று இவர்கள் காட்டுவதை, அந்த மரணம்[^] உறுதியாகும் வரை வைத்திருந்து பின்னர், அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் பேராசிரியர் சந்திரசேகரன்.

சென்னையில் டிஎன்ஏ சோதனை நடத்த திட்டம்?:

இந் நிலையில் அது பிரபாகரன் உடல்தானா என்பதை உறுதி செய்ய சென்னையில் டிஎன்ஏ சோதனை செய்ய இலங்கை[^] அரசு முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

http://thatstamil.oneindia.in/news/2009/05...l-dna-test.html

  • தொடங்கியவர்

டிஎன்ஏ டெஸ்ட்… அப்படீன்னா? அந்த வசதி இலங்கையில் இருக்கா?

தலைவர் பிரபாகரன் குறித்த வதந்திகளூடே இப்போது அதிகம் அலசப்படும் விஷயமாக இருப்பது டிஎன்ஏ டெஸ்ட் எனப்படும் மரபணுச் சோசதனை முடிவுகள்…

அது என்ன மரபணுச் சோதனை?

இறந்து போன ஒரு நபரை யாராலும் அடையாளம் காட்ட முடியவில்லை என்றால், அப்போது அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களையும், அவரது ரத்த சொந்தங்களின் மரபணுக்களையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றின் ஒற்றுமைகளின் அடிப்படையில் அடையாளம் காட்டுவார்கள். இதற்குப் பெயர்தான் டிஎன்ஏ சோதனை முறை.

இந்தச் சோதனையைச் செய்வது அத்தனை கடினமா… எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது?

டிஎன்ஏ செய்யப்படுவது அத்தனை எளிதான காரியமல்ல. முதலில் இறந்தவர் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்கள், எலும்பு மாதிரிகளை இந்த சோதனைக்கு சேகரிக்க வேண்டும். பின்னர் அவரது வாரிசு உள்ளிட்ட ரத்த பந்தங்களின் ரத்த அல்லது திசுக்களின் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். அவற்றில் கண்டுபிடிக்கப்படும் மரபணுக்களை வைத்து இறந்தவர், இன்னாருக்கு தொடர்புடையவராக இருக்கிறார் என்ற தகவலைச் சொல்ல முடியும்.

இதுகுறித்து சென்னை தடவியல் அறிவியல் மைய இயக்குநர் விஜயகுமார் கூறியதாவது:

“பொதுவாக ஒருவரது உடலில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் 22 ஆட்டோசோம்கள் எனப்படுபவை. மீதி ஒரு ஜோடி, பாலினத்தை தீர்மானிப்பவை. தாய் மற்றும் தந்தையர் இருவரது குரோமோசோம்களும் 50:50 என்ற விகிதத்தில் ஒருவரது உடலில் அமைந்திருக்கும்.

இவை எக்ஸ் மற்றும் ஒய் என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒருவேளை தாயின் மாதிரிகள் கிடைக்காமல் போனால், தந்தையின் திசு மாதிரிகளைக் கொண்டும் ஆய்வு நடத்தி ஒய் குரோமோசோம்களின் ஒத்திசைவைப் பொறுத்து முடிவு காண முடியும்.

ஆனால் இதையெல்லாம் செய்து முடிக்க 2 மணிநேரமல்ல… 20 மணி நேரம் இருந்தால்கூட போதாது. அதிலும் இந்த ஒய் குரோமோசோம் சோதனை முறை மிக மிக அரிதாகவே கையாளப்பட்டுள்ளது கடினமானதும் கூட!”

இந்தியாவின் செல்லுலர் மற்றும் மாலிக்யூலர் பயாலஜி மையத்தின் லால்ஜி சிங் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:

‘தந்தை - மகன் செல்களில் உள்ள ஒய் குரோமோசோம்களை வைத்து ஆய்வு நடத்தி முடிவுகளைச் சொல்வது அசாதாரண விஷயம். மருத்துவ விஞ்ஞானத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலேயே இதற்கு குறைந்தது 10 நாட்கள் தேவை.

அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகளே இல்லாத இலங்கையில் சில மணிநேரங்களில் போஸ்ட் மார்ட்டம் செய்வது கூட சாத்தியமல்ல… இதில் டிஎன்ஏ டெஸ்ட்டாவது… என்ன விளையாடுகிறார்களா?’

இலங்கையில் உண்மையிலேயே டிஎன்ஏ சோதனை செய்யும் வசதிகள் உள்ளனவா? அதற்கான பக்கா லேப், உபகரணங்கள் உண்டா?

இந்தியாவின் புகழ்பெற்ற தடயவியல் துறை நிபுணர் சந்திரசேகர் இதற்கு பதில் கூறுகிறார். இவர் ராஜீவ் காந்தி உடலை டிஎன்ஏ பரிசோதனை செய்து, அந்த மரபணுக்களின் அடிப்படையில்தான் இறந்தவர் ராஜீவ் காந்தி என்பதையே உறுதிப்படுத்தினார், 18 ஆண்டுகளுக்கு முன்பு. சிவராசன் மற்றும் தணுவின் டிஎன்ஏ மேப்பிங் செய்தவர்.

“நான் இலங்கைக்கு சில முறை சென்றுள்ளேன். எனக்குத் தெரிந்த வரையில் அங்கு டிஎன்ஏ பரிசோதனைக் கூடமே இல்லை. இறந்தவரின் செல்களிலிருந்து மரபணுக்களைக் கண்டறியவே குறைந்தது 4 நாட்களாவது ஆகும். சோதனைகள் முழுமேயைக முடிந்து அறிக்கை தர 10 நாட்களுக்கு மேலாகும்,” என்கிறார் சந்திரசேகர்.

சரி… விஷயத்துக்கு வருவோம்:

தமிழீழ விடுதலைப புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனியின் உடலை நேற்று கண்டுபிடித்தததாகக் கூறும் ராணுவம் இன்று சார்லஸின் டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். எனில், சார்லஸ் மரபணுவுடன் ஒப்பிட, அவரது தாய் அல்லது தந்தை அல்லது உறவினர் திசுக்களின் மாதிரிகளை இலங்கை ராணுவம் எங்கே எடுத்தது?

ஆண்டனியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது நேற்றுதான்… ஆனால் பிரபாகரன் ‘உடலை’ கண்டெடுக்கும் முன்பே ஆண்டனிக்கு டிஎன்ஏ சோதனை முடித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதுவும் பிரபாகரனின் மரபணுவும், ஆண்டனியின் மரபணுவும் ஒன்றாக இருந்ததாகச் சொல்கிறது ராணுவத்தின் டிஎன்ஏ சோதனை. ஒருவேளை, நேற்று முன்தினமே சிங்கள ராணுவத்தினருக்கு தனது செல்களை நேரில் போய் கொடுத்துவிட்டு வந்திருப்பாரோ பிரபாகரன்?!

அவரது உடலின் டிஎன்ஏவை அவரது ரத்தத்துடனோ அல்லது உடல் பகுதியின் பிற திசுக்களுடனோ ஒப்பிட ஏற்கனவே அவரது ரத்தம் அல்லது திசு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். அப்படி இலங்கையில் பிரபாகரனின் ரத்தம் முன்பே இருந்திருக்க வாய்ப்பேயில்லை.

இன்னொன்று, ஆண்டனியின் தாய் மதிவதனியின் மாதிரி செல்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை என ராணுவம் ஒப்புக் கொள்கிறது. அப்படியெனில் மிகக் கடின சோதனை முறையான ஒய் குரோமோசோம் ஒத்திசைவு சோதனைதான் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

சகல நவீன மருத்துவ வசதிகளும் கொண்ட இந்தியாவிலேயே இந்த சோதனையைச் செய்ய குறைந்தது 10 நாட்கள் தேவை என நிபுணர்கள் கூறும்போது, எந்த விஞ்ஞான கட்டமைப்பு வசதியும் இல்லாத டுபாக்கூர் நாடான இலங்கையில் சில நிமிடங்களில் டிஎன்ஏ சோதனை நடத்தி முடித்தது எப்படி? இவர்களுக்கு சாதாரண மூத்திரப் பரிசோதனையாவது செய்யத் தெரியுமா?

சாரலஸ் இறந்தார்… அடுத்த நாள் பிரபாகரனை முடித்துவிட்டோம். இருவர் உடலும் எங்களிடம் உள்ளன. உடனே அவற்றின் சாம்பிள் எடுத்து சோதனை செய்து சொல்லிவிட்டோம் என்று கூட ராணுவம் காததில் கூடை கூடையாய் பூச்சுற்றக் கூடும். ஆனால், பிரபாகரன் உடல் என்ற ஒன்றை காட்டும் முன்பே, சார்லஸின் டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டோம் என்று இலங்கை ராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் இந்திய ஊடகங்களுக்கு அழுத்தம் திருத்தமாக பேட்டி வழங்கியுள்ளது அழிக்க முடியாத ஆதாரமாக இன்னும் உள்ளது.

பிரபாகரன், சார்லஸ், பொட்டு அம்மன் போன்றோர் கொல்லப்பட்டது உண்மையானால், இந்த டிஎன்ஏ அறிக்கைகளை தருமாறு இன்டர்போல், இந்திய அரசு போன்றவை இப்போது இலங்கையிடம் கேட்கத் துவங்கியுள்ளன. பத்திரிகைகளும் நடுநிலையாளர்களும் உள்புக முடியாத தேசத்தில், சிங்கள இனவெறி ராணுவமும் அரசும் திட்டமிட்டு தயாரித்து அளிக்கும் பொய்களே ஆய்வு முடிவுகள் என்றாகிவிடும் அபாயம் உள்ளது.

இதனை உலகமும் மீடியாவும் கண்மூடி ஏற்கப் போகிறதா என்பதே இப்போதைய கேள்வி… மற்றபடி பிரபாகரன் உயிருடன் இருப்பது பற்றியெல்லாம் இப்போது நாம் பேச வரவில்லை. அந்த உண்மைகள் தெரிய வரும் பிறிதொரு சமயத்தில் எல்லோரும் அறிந்து, புரிந்து தலை குனிந்து நிற்பார்கள்!

மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.