Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது உகந்த அரசியல் தீர்வு காணாவிடில் முந்திய வரலாறு மீண்டும் திரும்பும்! ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் எச்சரிக்கிறார்

[24 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 9:00 பி.ப இலங்கை]

இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாட்டில் முந்திய வரலாறு மீண்டும் வரும் நிலையேஉருவாகும்.

இவ்வாறு எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்.

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் செல்வதற்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது; அனுமதி வழங்க வேண் டும் என்றும் செயலாளர் நாயகம் வற்புறுத்தினார்.

இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நேற்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிற் பகல் 4 மணிக்கு சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் கண்டி குயீன்ஸ் ஹோட் டலில் நேற்றிரவு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்.

அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கள், தகவல்கள் வருமாறு:

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்க ளும் அமைதியான வாழ்க்கையை முன் னெடுக்க அரசு உதவ வேண்டும். எல்லா மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையின மக்களின் பிரச் சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். அவர்கள் மத்தியில் நல் லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண் டும். அவ்வாறு செய்யப்பட வில்லையெனில் இந்த நாட்டில் முந்திய நிலையேமீண்டும் உருவாகும் என்பதனை சகலரும் மனதில் கொள்ளவேண்டும்.

அகதி முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச தொண் டர் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது. அந்த அமைப் புக்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

முகாம்களில் உள்ள மக்களின் தேவை கள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நிறைவேற்றக் கூடிய வளங்கள் போதியளவு அரசிடம் இல்லை.

மக்களின் தேவைக்கும் அவர்களுக்கு என்ன உதவி வழங்க வேண்டும் என்பதற் கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது.

உணவு, மருந்து, குடிதண்ணீர், அடிப் படை சுகாதார வசதி ஆகியன போதிய அளவு கிடைக்கவில்லை என மக்கள் என் னிடம் முறையிட்டனர்.

போதுமான உதவிகள் இல்லை

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை இலங்கை அரசு ஒரளவுதான் பூர்தி செய்து வருகின்றது. அந்த உதவி போதுமானதாக இல்லை என்பதை அவதானிப்தேன்.

முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 80 சதவீதமானவர்களை இவ்வருட முடிவுக்குள் அவர்களது செõந்த இடங்களில் மீள் குடியேற்றி விடுவோம் என்று இலங்கை அரசு என்னிடம் தெரிவித்துள்ளது.

மக்களின் மீள்குடியமர்வுக்கு சர்வதேச உதவி தேவை என ஐ.நா கருதுகிறது. மோதல் நடந்த பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தமது சர்வதேச பங்காளர்கள் மூலம் உதவுவோம்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை வெளிப்படையாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை விமானம்மூலம் சென்று பார்வையிட்டேன். பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதையிட்டு கவலை அடைகிறேன்.

30 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தேன். அவர்களுக்கு உரிய புனர்வாழ்வுத் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நா. அமைப்புக்கள் தயாராகவுள்ளன. ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை அந்த அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளன.

ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அவற்றை அகற்ற ஐ.நா. தனது உதவிகளை வழங்கும்.

அகதிகளின் கல்வி நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. தயாராக உள்ளது என்று தெரிவித்தார் பான் கீ மூன்.

நேற்றிரவு 11.30 மணிக்கு ஐ.நாவின் செயலாளர் நாயகம் நியூயோர்க் திரும்பினார்.

நன்றி உதயன்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.