Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மெல்பேர்னில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்ட படங்கள்

Featured Replies

தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும்,சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களையும்,தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஆஸ்திரேலிய அரசுக்கும் ,பல்லின மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் மெல்பேர்னில் சனிக்கிழமை(30.05.2009) மனிதச்சங்கிலி பேரணி நடைபெற்றது.சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்த உணர்வுபூர்வமான மனிதச்சங்கிலி பேரணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெல்பேரன் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.முற்பகல் 10 மணியளவிலேயே மெல்பேர்ன் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டனர். அறிவிக்கப்பட்டபடி முற்பகல் 11 மணியளவில் அங்கிருந்து வரிசையாக புறப்பட்ட மக்கள், சன நெருக்கடி நிறைந்த சுவான்ஸ்டன் வீதி வழியாக சென்றனர். அங்கு நீண்ட வரிசைசையில் பதாகைகள், தமிழீழ தேசிய கொடிகள், ஆஸ்திரேலிய கொடிகள் ஆகியவற்றை தாங்கியவாறு நின்றுகொண்டிருந்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக குதிரை வண்டிகளில் நகர வீதிகளில் சென்று கோஷம் எழுப்பியதை குறிப்பிடலாம். மெல்பேரன் நகரை சுற்றிப்பார்ப்பதற்காக வாடகைக்கு விடப்படும் குதிரை வண்டிகள் இரண்டு , மனிதச்சங்கிலி ஏற்பாட்டாளர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அந்த வண்டிகளில் ஆஸ்திரேலியா தமிழ்மக்களை காப்பாற்று என்ற பதாகை உட்பட தாயகத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை படலங்களை சித்தரிக்கும் பதாகைகள் மற்றும் தமிழீழ, ஆஸ்திரேலிய தேசியக்கொடிகளுடன் ஐந்தாறு பேர் ஏறிக்கொண்டனர்.

அவர்களை ஏற்றிக்கொண்டு இந்த குதிரை வண்டிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் - குறிப்பாக வார இறுதிநாட்களில் - புழங்கும் மெல்பேரன் நகரவீதிகளால் சென்றன. அவ்வாறு சென்ற குதிரை வண்டிகளில் இருந்தவர்கள் - ஆஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று, சிறிலங்கா போர்க்குற்றவாளி, தமிழ்மக்களுக்கு மருத்துவ உதவி தேவை, தமிழீழத்தை விடுதுவித்து தாருங்கள் போன்ற கோஷங்களை எழுப்ப மனிதச்சங்கிலி பேரணியில் - வழிநெடுக நின்று கொண்டிருந்த அனைத்து மக்களும் அவர்களுடன் சேர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

மெல்பேரன் நகரவீதிகளில் புதுவிதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கோஷங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மேற்கொண்ட இந்த நிகழ்வினை அப்பகுதியினால் சென்ற பல்லாயிரக்கணக்கான பல்லின மக்கள் கண்டு, நிகழ்வின் நோக்கம் என்ன என்றும் எங்குளுக்கு உதவுவதற்கு தாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டனர்.

வழமைபோலவே இன்றைய தினமும் பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் பல்லின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நிகழ்வினை கண்டு, விடயங்களை கேட்டறிந்த பல்லின மக்களில் துறைசார் பணிபுரிகின்ற பலர், தாம் பணிபுரிகின்ற துறைகளின் ஊடாக எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு உதவமுடியுமோ அவற்றை தாம் நிச்சயம் செய்வதாக கூறினர்.

சுமார் 1.30 மணியளவில் மனிதச்சங்கிலி பேரணி சுவான்ஸ்டன் வீதி வழியாக - வரிசையாக - மீண்டும் பெடரேஷன் சதுக்கத்தை வந்தடைந்தது. சுமார் 2 மணியளவில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதிப்பிரமாணத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது

Melbourne_Human_Chain_30th_May_09_TamilNational_01.jpg

Melbourne_Human_Chain_30th_May_09_TamilNational_02.jpg

Melbourne_Human_Chain_30th_May_09_TamilNational_03.jpg

Melbourne_Human_Chain_30th_May_09_TamilNational_04.jpg

Melbourne_Human_Chain_30th_May_09_TamilNational_05.jpg

Melbourne_Human_Chain_30th_May_09_TamilNational_06.jpg

More than 1000 participated in human Chain protest in Melbourne - More Photos

Edited by தேசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.