Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி-இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

Featured Replies

கருணாநிதி-இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு

தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு இலங்கை எம்.பிக்கள் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய அந்த நான்கு எம்.பிக்களும் கோபாலபுரம் வீட்டில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சுமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இலங்கைத் தமிழர் களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2009/05...arunanidhi.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கருணாநிதியை சந்தித்துள்ளனர்.

இலங்கையில் சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 இடங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காக்கக்கோரி கருணாநிதியை த.தே.கூ.னர் சந்தித்துள்ளனர்.போர் நடந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகே தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ இதுவரை எந்த ஒரு சர்வதேச அமைப்புக்கும் இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை. எனவே முகாம்களில் உள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களின் எதிர் காலம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு உதவி கேட்டு முதல்-அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவர் வீட்டில் இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இரா.சம்பந்தம், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சந்தித்தனர்.

இலங்கை நிலவரம் குறித்து அவர்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அதன் பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்-அமைச்சருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தோம்.

இலங்கைத்தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சுமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார் என்று முதல்- அமைச்சர் தெரிவித்தார். இதற்காக தமிழ்நாட்டில் ஒரு மித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறினார்.

ஈழத் தமிழர்களை காக்க தமிழக அரசும், மத்திய அரசும் எல்லா முயற்சி களையும் முன் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இரா.சம்பந்தம் எம்.பி. கூறினார்.

http://www.meenagam.org/?p=4359

  • கருத்துக்கள உறவுகள்

சண் தொலைக்காட்சி தேவையென்றால் இனாமாக சில காலத்துக்கு கருணாநிதி தரக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

5 .8. 1990 ம் ஆண்டு டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி ஆனந்தவிகடனில் எழுதிய கட்டுரையை பாருங்கள் .

மிகப் பெரிய பூஜ்யம் !

இலங்கை தமிழர் பிரச்சினை முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது .

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் , தங்களது செல்வாக்குக்கு பயன் படுத்த முன்வந்த அளவுக்கு , சுயலாபமும் சுயவிளம்பரமும் தேடிக்கொண்ட அளவுக்கு நிரந்திர தீர்வு காண்பதில் உண்மையான அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை .

தமிழினத் தலைவர் என்று அடைமொழியைச் சேர்த்துக் கொள்ளும் நம் முதல்வர் - " தேசிய முன்னணி அரசு எங்கள் அரசு . அது தமிழ் மாநிலத்துக்காக செயல் படும் அரசு " என்று பேசி வந்த முதல்வர் - எந்த விதத்திலும் தேசிய முன்னணி அரசை இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப் பயன்படுத்தினார் என்று பார்த்தால் , மிகப்பெரிய பூஜ்யம் தான் மிஞ்சுகின்றது !

அதாவது இவர்கள் - தமிழ் இனமானக் காவலர்கள் - தங்கள் தோலைக் காப்பாற்றிக் கொள்வதில் தான் அக்கறை காட்டினார்கள். தெளிவாக முன்வந்து தமிழ் மக்களுக்கும் தேசிய முன்னணி அரசுக்கும் ஒர் உண்மையான துணிவான முடிவை எடுத்துக் கூறத் தவறி விட்டார்கள் .

இவர்கள் தான் எதிர்க்கட்சியாக இருந்த போது தங்கள் சட்டசபை உறுப்பினர் பதவியையெல்லாம் துச்சமாகக் கருதி , அதை ராஜினாமாச் செய்தவர்கள் . இன்ரு இதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது . இவர்களா அவர்கள் ? இவர்களுக்கு வேண்டிய தேசிய முன்னணி அரசு போனபின் , இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை செய்து விட முடியும் ? வாய்ப்பு இருந்த போது அதை பயன் படுத்தாதவர்களை என்னவென்று சொல்வது ?

ஆக மொத்தம் , மிஞ்சி நிற்பது இலங்கை தமிழர் படும் கொடுமை; அழிக்கப் படுகின்றது தமிழினம் என்ற உண்மை !

( இது 19 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை ஆயினும் ஈழத்தமிழர் விடயத்தில் , காருணாநிதியின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது )வுக்கு நிரந்திர தீர்வு காண்பதில் உண்மையான அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை .

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.