Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்தினில் தாக்குதலை ஆரம்பித்திருக்கும் சிங்கள அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தினில் தாக்குதலை ஆரம்பித்திருக்கும் சிங்கள அரசு

திகதி: 03.06.2009 // தமிழீழம்

களத்தினில் நின்ற போர் இன்று புலத்திற்கு மாறியுள்ளது. சுயாதீனமான முறையில் ஆரம்பித்த இப்போராட்டங்கள் ஓய்வு ஒழிச்சல் இன்றித்தொடர்கின்றது. மேற்குலகில் போராட்டங்கள் அதிகரிக்க அது மேற்குலகத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்க ஆரம்பித்தது.

ஆனாலும் அவை மாபெரும் மனிதப் பேரழிவைத் தடுக்கத்தவறிவிட்டது, என்றாலும் அதன் பின்னரான மேற்குலகின் போக்கில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக லண்டனில் டைம்ஸ் நாளிதழ் உண்மையின் பெரும் பகுதியை படம் பிடித்துக் காட்டிவிட்டது.

அதனால் சிறீலங்கா அரசின் மீது பல அழுத்தங்கள் ஏற்படப்போகின்றது என்பதனை சிறீலங்கா அரசு நன்கு உணர்ந்துள்ளது. பாரிய மனித இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு அதன் மீதான கவனத்தை திசைதிருப்பும் வகையில் தேசியத்தலைவர் வீர காவியமானார் என்ற செய்தியை உலகிற்கு அறிவித்தது சிறீலங்கா அரசு.

அதன்மீது வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்தி சூழ்நிலையின் கைதியாகியது புலம் பெயர் தமிழ் சமூகம். இதனால் புலத்தில் பாரிய போராட்டங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தியது சிங்கள அரசு.

ஏனெனில் பாரிய மனிதப் படுகொலையின் பின்னர் மீண்டும் புலத்தில் பெரிய போராட்டங்கள் வெடித்தால் அது சிறீலங்கா அரசை ஓர் இனப்படுகொலை அரசாக சித்தரிப்பதாக அமைந்துவிடும் என்று சிறீலங்கா அரசு கணித்து கச்சிதமாக செயல்ப்பட்டது.

பின்னர் மீண்டும் டைம்ஸ் நாளிதழ் உண்மையை கிளறிவிட்டது. அதனால் மீண்டும் சிறீலங்கா பெரும் சிக்கலை எதிர் நோக்கியுள்ளது. இந்திலையில் திருமதி அடேல் பாலசிங்கம் அம்மையார் தான் புலத்தின் போராட்டங்களிற்கு பின்னனியில் நிற்பதாக புதிதாக ஒரு செய்தியைப்பரவ விட்டுள்ளது.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் எமது போராட்டத்திற்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய இலங்கை அரசு

அதையும் தாண்டி ஒன்றுபடும் புலம்பெயர் தமிழரையும் அவர்களது ஒருங்கிணக்கப்படும் அரசியல் நகர்வுகளையும் ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்கும் சர்வதேச அளவில் மிகவும் பலமானதொரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாகச் செயல்படும் விடுதலைப்புலிகளின்

சர்வதேச வலைப்பின்னல் புலம்பெயர் நாடுகளில் தாயகக்கோட்பாட்டை நோக்கிய

அரசியல் நகர்வுகளைச் செய்யவிடாது தடுக்கவும்

தனது பாரிய நரித்தனமான நடவடிக்கைகளைச் செய்யுமென்பது நிச்சயம்.

ஆதலால் நடந்தவற்றை நினைத்துக் கவலைப்படுவதில் காலவிரயம் செய்யாமல் இனிச் செய்யவேண்டியதென்ன என்பதைச் சிந்தித்துச் செயலாற்றவேண்டிய நேரமிது.

எந்த வார்த்தையைக் கேட்க எம்மனம் ஏங்குகிறதோ? ஆசைப்படுகிறதோ? அதை எவர் சொல்கிறாரோ அவர் நல்லவர். எமது மனம் ஏற்க மறுக்கும் யதார்த்தமான கருத்தை முன்வைத்தால் அவன் துரோகி. இந்த இரண்டுக்கும் அப்பால் சிந்திக்கமாட்டம். இந்த இரண்டு எல்லைகளுக்கும் அப்பால் யார் சரியான செயற்பாட்டாளன்? இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? அதை நடைமுறைப்படுத்த முயல்பவர் யார் என்பதைப் பகுத்தறிந்து செயல்படுங்கோ! சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட சமுதாயமாக இராமல் தயவு செய்து தயவு செய்து ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்படுங்கோ!

காலனித்துவகால அரசியல,;

இரண்hடாம் உலக யுத்தத்தை அண்டியகாலம்,

இதன் தொடர்ச்சியாக யுத்தத்தையொட்டித் தோன்றிய ஐநாவின் ஆரம்பகாலம்,

உலக அரசியலில் அணிசேரா அமைப்புச் செல்வாக்குச் செலுத்திய காலம,;

பனிப்போர்க் காலம்,

சோவியத்தின் சிதைவுடன் முடிந்த பனிப்போருக்குப் பிந்திய உலக அரசியல் நகர்வுகள்,

இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப்பிந்திய அரசியல்,

இன்றைய உலகமயமாக்கலுடன் இணைந்த காலம்.

இந்த ஒவ்வொருகாலகட்டத்திலும் பல உரிமைப்போராட்டங்கள் நடந்துள்ளன.

அவற்றின் வெற்றி தோல்விகள், உலக வல்லாதிக்க நாடுகள் இவை சம்பந்தமாக நடந்துகொண்டமுறைகள்..........................

.

இப்படியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு. இந்தப் பெரிய உலகத்திலை ஒருசிறு துளி இலங்கை இதிலை வாழும் ஒருசிறு துளிதான் நாங்கள்.; ஆதலால்

எமக்கு அப்பால் உள்ள இந்தப்பாரிய உலக நகர்வுகளை நாம் ஒவ்வொருவரும் சரியாக புரிந்துகொள்வது தாயகம் நோக்கிய எமது பங்களிப்பிற்கும் சாதகமான நகர்வுகளிற்கும் அவசியமானதாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தலைவரின் செய்தியினால் எங்களுக்குள்ளே நாங்கள் அடிபட்டுக்டிகொண்டிருக்க சிங்களவன் வெற்றிவிழாக் கொண்டாடுகிறான். எமது மக்களின் பிணத்தின் மேல் நின்றும் சுடுகாடாகிய எமது ஊர்களின் சாம்பல்மேட்டிலிருந்தும் அவன் கொண்டாடுகிறான். நாங்கள் இங்கே அஞ்சலி செலுத்துவதற்கும் தலைமைப்பதவிக்கும் அடிபட்டுக்கொண்டிருக்கிறோம். சிந்தியுங்கள் உறவுகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.