Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமேசுவரம் அருகே 19 இலங்கை அகதிகள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேசுவரம் அருகே 19 இலங்கை அகதிகள் மீட்பு

on 04-06-2009 06:25

Favoured : None

Published in : செய்திகள், தமிழகம்

ராமேசுவரம், ஜுன் 4 : கடற்படையினரால் ராமேசுவரம் அருகே நடுக்கடலில் தவித்த 19 இலங்கை அகதிகள் மீட்கப்பட்டனர். ரூ.5 லட்சம் கொடுத்து தப்பி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு வசித்த தமிழ் மக்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் அடிப்படை வசதி இல்லாமல் இருந்ததோடு, பல்வேறு பிரச்சினைகளை தமிழ் மக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த சிலர் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் தீடையில் (மணல் திட்டு) தவிப்பதாக இந்திய கடற்படையினருக்கு மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று அதிகாலையில் கடற்படையினர் விரைந்து சென்று தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தவித்த 2 ஆண், 2 பெண், ஒரு சிறுவன் என 5 பேரையும் காப்பாற்றினர். அவர்களுக்கு குடிநீர், உணவு கொடுத்து படகில் ஏற்றி ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் 14 பேர் மீட்பு

5 அகதிகள் மீட்கப்பட்ட அதே 5-ம் தீடையில் மேலும் சில அகதிகள் தவிப்பதாக நேற்று மதியம் இந்திய கடற்படையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கடற்படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை மீட்டனர். இவர்களில் 7 ஆண்கள், 3 பெண்கள், 3 சிறுவர்கள், ஒரு சிறுமி அடங்குவர்.

விசாரணைக்கு பின்னர் இவர்கள் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அகதியாக வந்த கிறிஸ்டின் ராஜ்குமார் கூறியதாவது : விடுதலைப்புலிகளுடன் சிங்கள ராணுவத்தினர் போர் நடத்தியபோது நாங்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுடன் மார்தளம் அருகே உள்ள கடற்கரை ஓரத்திலேயே குடிசை போல் அமைத்து அதில்தான் தங்கியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த பகுதியில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு கிலோ மீன் ரூ.1,500-க்கும், சர்க்கரை 3 ஆயிரம் ரூபாய்க்கும், அரிசி கிலோ 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. எங்கள் பகுதியில் எங்களை போன்ற தமிழ் மக்களுக்கு உணவுப்பொருட்களை கொடுக்க வந்த செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த கப்பலை இலங்கை ராணுவத்தினர் பிடித்துவிட்டனர். இதனால் உணவுப்பொருள் வருவது நிறுத்தப்பட்டுவிட்டது.

என்னுடைய மாமாவுக்கு இதய ஆபரேஷன் செய்வதற்காக மனைவியிடம் இருந்த நகைகளை விற்று சிங்கள ராணுவத்திற்கும், கடற்படைக்கும் தெரிவிக்காமல் ரூ.5 லட்சம் கொடுத்து 31-ந் தேதி காலை 6 மணியளவில் தலைமன்னாரில் இருந்து பிளாஸ்டிக் படகில் தப்பி வந்தோம். எங்களை 5-ம் தீடையை காட்டி ராமேசுவரம் வந்துவிட்டது எனக்கூறி படகோட்டி இறக்கிவிட்டு சென்று விட்டார். நாங்கள் 31-ந் தேதி இரவில் இருந்து 3 நாட்களாக தவித்தோம். இந்த நிலையில் கடற்படையினர் எங்களை காப்பாற்றி உணவு, குடிநீர் கொடுத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(டிஎன்எஸ்)

Last update : 04-06-2009 06:25

http://www.adhikaalai.com/index.php?option...6&Itemid=52

ரூ.5 லட்சம் கொடுத்து 31-ந் தேதி காலை 6 மணியளவில் தலைமன்னாரில் இருந்து பிளாஸ்டிக் படகில் தப்பி வந்தோம். எங்களை 5-ம் தீடையை காட்டி ராமேசுவரம் வந்துவிட்டது எனக்கூறி படகோட்டி இறக்கிவிட்டு சென்று விட்டார்.

:lol::D

:lol::D

ஏன் இப்படி வாயை பண்ணுகிறிர்கள் வசி சுதா... இது எங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இப்படி நடந்தது... உப்படித்தான் வெளிக்கு கிட்டு 1லட்சம் கட்டி ஒரு ஆளுக்கு குடுத்து வந்தவர்கள்.... ஆனாலும் என்ன கொடுமை என்றால் எங்கட ஆக்களே இது இந்தியா என்று சொல்லி தலை மன்னாரில் இறக்கி விட்டு இட்டு ஒடி விட்டார்கள்... இதில் என்ன கொடுமை என்றால் வந்தது கூடுதலா பெண்கள்...விடிய எல்லாம் சொல்லி உள்ள போகலாம் என்று கடல் கரையிலையே படுத்து விட்டார்கள்... இரவு வந்து சில ஆக்கள் எழுப்பி கேட்ட அதுகும் முஸ்லிம் ஒரு ஆண் அவர்தான் சொன்னது இது இந்தியா இல்லை இது தலை மன்னார் என்று அப்புறம் அந்த ஆளே ஒரு கோவில் இருக்கு பக்கத்தில் அங்க போய் படுங்கள் இல்லை என்றால் ஆமி இந்த பக்கம் வருவான் சுட்டு போடுவான் என்று சொல்லி இருக்கு அந்த பெண் பாவம் கணவர் இல்லாமல் பிள்ளைகள் கொண்டு வந்தவர் என்ன பண்ணுவார் தலை தலை என்று அடித்து கொண்டு விடியலுக்காக கோவிலை இருந்ததுதான்....

அடுத்த நாள் ஆமி அவன் இருக்கும் இடத்துக்கு கூட்டி கொண்டு போய் ஒரு இடத்திலை வைத்து அடைத்து வைத்து விட்டான் வெளிய முள் வேலி அதிலை ஒரு மாடு போக குண்டு வெடித்து மாடு உடனையுமே செத்து விட்டது... அவன் உள்ள அடைத்து வைத்து விட்டும் வெளி ஜன்னலை துறந்து விட்டு இட்டுதான் படுக்க சொல்லி இருக்கான்... மாடு செத்த சத்ததுக்கு எல்லாரும் எழும்பி பார்க்க உங்களுக்கும் இதுதான் நேரும் தப்ப நினைத்தால் என்று சொல்லி இருக்கான்... இரவு இரண்டு மணிக்கு எல்லாம் சாப்பாடை கொண்டு வந்து வைத்து விட்டு துவக்கால தட்டி சொல்லுவான் சாப்பிட சொல்லி இல்லை என்று படுத்தால் திரும்பவும் தொந்தரவு...இதிலை என்ன கொடுமை என்றால் ஒரு நாள் சாப்பாடு குடுக்காமல் வைத்து இருந்தான்... பக்கத்தில் இருக்கும் சனத்தட்ட தண்ணி என்று இவர்களின் அம்மா கேட்டு இருக்கிறார்கள் தண்ணி கொண்டு வர அதையும் தட்டி விட்டு...

அவன் இருக்கும் இடத்தில் பக்கத்தில் பாடசாலை ஒன்று இருந்தது... அதில் திரும்ப கொண்டு போய் அடைத்து விட்டான்... ஒவ்வொரு நாளும் ஆமி அங்க வந்து போவான் எனியும் இருக்க முடியாது என்று நினைத்த அவர்கள் அம்மா பெண்களை கொண்டு போய் தப்ப வேணும் என்று நினைத்து முஸ்லிம் பக்கத்தில் இருந்தவர்களோடு கதைத்து அவர்கள் கொண்டு போய் விடுறம் ஒரு நாள் முழுவதுமாய் காடு காடாய் ஒடி வந்து இந்தியா சேர்ந்தார்கள்...மன்னார் கடல் மூலம் இந்தியா வந்தார்கள்... இறக்கி விடும் போது அவர்கள் அம்மா கேட்டு இருக்கிறார்கள் இது இந்தியாதானே என்று அதுக்கு அவன் சொல்லி இருக்கான் இறக்கி விட்டவன் உங்கட ஆக்கள் மாதிரி நாங்கள் பொய் சொல்லி விட்டு இட்டு போகலை என்று... நான் எல்லாரையும் சொல்ல வில்லை...

இதில் இன்னும் ஒரு கொடுமை அடுத்த நாள் இந்தியா ஆமி வந்து கொண்டு போனான் ... கொண்டு போனது மட்டும் இல்லை வந்த ஒரு சிலருக்கு அடி உதை நீ இயக்கம்தானே என்று... அந்த பெண்களை கூப்பிட்டு நீங்கள் வந்த கப்பலை வரைந்து காட்டுங்கள் என்று... எப்படியோ அவர்கள் தப்பினார்கள்.....

எழுதினதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்... ஏதும் தப்பா எழுதி இருந்தாலும் இதை அகற்றி விடலாம்...

முக்கிய குறிப்பு... இப்படி சனத்தட்ட காசு வாங்கிய தமிழ் ஆள் இப்ப இரண்டு கைகளையும் இழந்து கஸ்ர படுறார்.... பாவம் பண்ணினால் அடுத்த ஜெனமத்திலை தண்டிப்பார் என்று சொல்லுவார்கள்... ஆனால் இந்த ஜென்மத்திலையே கடவுள் உடனுக்கு உடன் குடுக்கிறார்... இதுக்கு அப்புறம் கடவுள் இருக்கிறார் போல என்று நம்பதான் தோணுது...

கடவுளே இப்படி மகிந்தாவுக்கு நடந்தால் எப்படி இருக்கும்... அரோகாரா கடவுளே கொஞ்சம் கண்ணை திறந்து பார்..

வந்த தமிழ் ஆள் ஒருவருக்கு சிங்களம் தெரியும்....

Edited by சுஜி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.