Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்கு தேவையான பண உதவி செய்ய புலம் பெயர் தமிழ் மக்கள் இணக்கமா?

Featured Replies

இலங்கை அரசுக்கு தேவையான பண உதவி செய்ய புலம் பெயர் தமிழ் மக்கள் இணக்கமா?

இதன் ஒரு கட்டமாக புலம் பெயர் தமிழர்கள் இலங்கை சென்று இலங்கை புலனாய்வு கடத்தல் பிரிவினரிடம் கப்பம் செலுத்துகின்றனராம்.

அத்துடன் முகாம்களில் உள்ள மக்களை வெளியில் எடுக்க 1-2 லட்சம் கறக்கபடுகிறதாம்

ஏதொ ஒருவகையில் புலம் பெயர் தமிழர்களின் பணம் இலங்கை அரசின் கல்லாப் பெட்டியை நிரப்பி விடுகிறது

மொத்தத்தில் இலங்கை பயங்கரவாத அரசின் வெற்றிக்கு நாமே துணை

தமிழனை வைத்து பிழைக்க தெரிந்த ஜென்மங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் முகாம்களில் உள்ள மக்களை வெளியில் எடுக்க 1-2 லட்சம் கறக்கபடுகிறதாம்

இதை நானும் கேள்விப்பட்டேன்..! உள்நாட்டு செலாவணியாக கொடுக்கும்போது அதில் வாங்குபவனுக்கு தனிப்பட்ட லாபமே தவிர நாட்டின் வருமானத்துக்குப் பெரிதாக ஒன்றும் வந்துவிடப் போவதில்லை. ஒரு ஆயிரம் பேர் லட்சம் ரூபாய் குடுத்தாலும் 10 கோடிதானே வரப்போகுது..! :rolleyes:

இது பற்றி முன்பும் குறிப்பிட்டிருந்தேன். ஒட்டுக்குழுக்களின் புதிய வியாபார தந்திரம் இது. பசி பட்டினியால் வாடி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நம் மக்களிடமே பணம் பிடுங்க திரியும் பேய்கள். இவர்களும் தமிழர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

முகாம்களில் உள்ள மக்களை வெளியில் எடுக்க 1-2 லட்சம் கறக்கபடுகிறதாம்

ஒரு கிழமைக்கு முன் இந்தியாவுக்கு படகின் மூலம் வந்தவர்கள் 7 - 8 லட்சம் ரூபா கொடுத்ததாக சொல்லிச்சினம்.

இலங்கை அரசுக்கு தேவையான பண உதவி செய்ய புலம் பெயர் தமிழ் மக்கள் இணக்கமா?

நிச்சமாக செய்வார்கள் ,அரசாங்கத்துக்காகவல்ல தமது உறவுகளை காப்பாற்ற. அரசாங்கத்திற்க்கு பணம் போகுது என்று தனதுசொந்தத்தை ஒருத்தரும் கஷ்டப்பட விடமாட்டன்.இன்று அந்த முகாமில் உள்ளவர்களிடம் சிறிலங்கா அரசு "எனக்கு ஈழம் வேண்டாம் ,என்னை விடுதலை செய்தால் நான் இனி ஈழம் கேட்கமாட்டன் "என்று ஒருகடிதத்தில் கையப்பம் போட்டுவிட்டு போ என்று சொன்னால் எல்லோரும் அப்படித்தான் செய்வார்கள்,மனிதர்கள் வாழத்தான் விரும்புவார்கள் .

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடையே எந்த ஒரு விடயத்திலும் தெளிவோ ஒற்றுமையே இல்லாமையின் வெளிப்பாடா அல்லது சுயநலத்தின் வெளிப்பாடா? நாம் எம்மையறியாமலே மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம். உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது கேள்விகளுக்கப்பாலானதொரு உண்மை அதுவே சிங்களத்தைப் பலப்படுத்தும் வகையில் அமைவதே வேதனையானது. மாற்றுவழிகள் தொடர்பாகவும் ஆராயலாமே. புலத்திலே இது தொடர்பாக மனித உரிமையார்வலர்கள் ஊடாக அணுகிப்பார்கலாம். சட்டரீதியான உதவிகோரல்களை செய்யலாம். (சட்டத்தை மதிக்காத பயங்கரவாத அரசிடம்... என்ற கேள்வியும் உள்ளது.) ஆனால் இது கூட ஒரு பொதுமைப்பட்ட விடயமாக உள்ளது. 300000 வவுனியாவில், யாழ் குடாவில் பல லட்சம்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியா தடுப்புமுகாங்களில் உங்கள் உறவுகள்யாராவது இருந்தால் அவர்களை மீட்பதற்காக அங்கேயுள்ள ஒட்டுக்குழுவினரிடம் பணம்கொடுத்துச்செய்யமுன் நீங்கள் வாழும் நாட்டில் செஞ்சிலுவைச்சங்கத்தினை அணுகுங்கள். இவ்வாறு பலநாடுகளில் முயற்சிகளைமேற்கொள்வோமானால் இதன் பலன் எமது சொந்தங்களை மீட்பதுமட்டுமின்றி அங்கே அடைபட்டுள்ள ஏனையோருக்கும் நன்மைகள் ஏதவதுகிடைக்கலாம். அத்துடன் சிங்கள அரசிற்கும் அழுத்தம் கொடுக்குமல்லவா?

அரசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.