Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்குத் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை அறியத்தரவும்...

Featured Replies

உந்த ஆச்சி கேட்க்கும் கேள்விகளுக்கு விடை தரமுடியுமா? யாழ்களக கண்மணிகளே?

அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி என்று அடங்காத தமிழனாக உங்களை யார் தமிழீழம் கேட்க்கச்சொன்னது கண்டீயளோ?

கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட எத்தனித்த போராடப்புறப்பட்ட தமிழர் இளைஞர்களை இந்தியாவும், இலங்கை சிங்கள அரசும் தம் பக்கம் இழுக்க முனையும் போது ஏன் காணும் உப்ப வந்த ஒற்றுமை உணர்வு அப்ப வரவில்லை ஓய் நம்மட புலிகள் வீரர்களுக்கு?

சந்தோசமான வாழ்க்கையில சறுக்கிவிளாமல் நடப்பவனே புத்திசாலி. சந்தோசமான நாட்கள் எண்ட ஒண்டு நமக்கும் இருந்திருக்கு. 1998 ஆம் ஆண்டுகளிலில். ராஜ கோபுரம் தகர்த்தெறியப்பட்டது காக்காக்களால் தானே. அப்போது உலக வல்லரசு உசிப்பிக்கொண்டு காக்காக்களின் மடியில் கைவைத்து உலுப்பியபோது, உலக அரங்கில் எம் போராட்டத்தினை முன்னிலைப்படுத்தி, உலக மயப்படுத்துவோம் எண்டு தெரிந்துதானே போர்நிறுத்தம் செய்தோம். ஏன் உலக அரசுகளை எம்மால் எங்களின் வழியில் கொண்டு இழுத்துச்செல்ல முடியவில்லை காணும்? என்ன படித்தவர்களுக்கு குறையா..இல்லை. பணக்காரர்களாக தமிழர்கள் இருக்கவில்லையா? ..இல்லை. இலங்கையில் சிங்களவனுக்கு மேலே ஏறியிருந்த தமிழன் உலக அரங்கிலும் அதேபோலவே இன்றும் இருக்கிறான். ஆனால் எம்மால் முடியவில்லை. உங்களாலும் முடியவில்லை ஏன்?

தமிழீழம் சாத்தியமேயில்லை என்ற உண்மையை நாம் மூடி சீல் வைத்து அதை மறைத்துவிட்டோம். இல்லாத ஒன்றிற்க்காக, எடுக்கமுடியாத ஒரு பொருளுக்காக நாம் எம் உறவுகளை இழந்தோம். எம் உரிமைகளை மேலும் இழந்து சீரழிந்த ஒரு நிலையில், தொடக்கப்பட்ட போராட்டக்குழுக்கள், மிக வசதியாக அரசுடன் நின்று வால்பிடிக்க அனுமதிகொடுத்து, மீண்டு வரமுடியாத அடிமைக்கோலத்தின் ஒரு நிலையில் நின்று கொண்டு ஒன்று படுவோம் எனியாவது என்று, சுடலைஞானம் பெற்றவர்களாக கூக்கிரலிடுகிறோம். இதலெல்லாம் ஏன்?

உண்டு, ருசித்து திண்டு கொழுத்த வண்டிக்கு, இன்னும் உண்ண உணவு தேவையெல்லோ அதற்க்காக. இல்லாவிட்டால் எம் தமிழர் போராட்டத்தினை எப்படி எம்மால் திசைதிருப்பி, இந்தியாவின் ஆதரவுடன் 1987 களில், சென்று இருக்கமுடியும். நாடகமாடி நாசுக்காக எம் ஈழதமிழர் பிரச்சனையினை, இழுத்துச்சென்றிறுக்க முடியும். ஆனால் எம்மால் முடியவில்லை. காரணம் இந்த தமிழீழம் என்ற மாய வார்த்தை. விடுதலைப்புலிகள் மிகவும் பலமிக்க ஒரு நிலையில் இருந்த போது ஆதரிக்காத இந்தியா, நீங்கள் திண்ட உணவு செமிக்காமல் புலம் பெயர்ந்த நாடுகளில் கொடிபிடிக்கும் போதா அசையப்போகின்றது.

ஆகவே பல உண்மைகளை உண்மைகளாக எடுத்து அலசி ஆராய்ந்திருந்தால், இன்று ஈழதமிழன் உரிஞ்சான் குண்டியுடன் சோமாலிய அகதிகள் போல இருக்கவேண்டிய நிலமை வந்திருக்க முடியுமா? ஆக இந்தியாவுக்கும் ஆதரவு தருவது போல நடித்தவர்களாலேயும், இலங்கை அரசுடன் ஒட்டிய குழுக்களாலேயும் மாத்திரமே இன்றைய தேதியில் ஈழதமிழனுக்கு ஏதேனும் செய்ய முடியும். ஆகவே அதுதான் ராஜ தந்திரம். மொக்கனா சுந்தரங்கள் போல செத்துமடிவது என்பது இன்றைய தேதியில் மொக்குகள் பட்டம் பெறவே உதவும். நாகரீகம் மிகவும் வளர்ந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் வீரமரணங்களை எப்படி கணிப்பார்களென்றால்...நீங்கள் எப்படி உடன் கட்டை ஏறுவதை எப்படிப்பட்ட முட்டாள் தன முறைகேடுகள் என்பதுபோல கணிப்பான். சிறுமிகளை கல்யாணம் கட்டிவிடும் செயலுடன் ஒப்பிட்டு தூ...வளர்ச்சியடையாத இனமென்று முத்திரை குத்திவிடுவான்.

இல்லையா தமிழ்ச்சிங்கங்களே!!.

அதுமட்டுமா நாம் செய்தோம் ஈழதமிழர்களின் வாழ்க்கையினை அழிக்க ஆயுதம் தூக்கி. உங்கள் நியாயமான பதிலால் யாழ் களம் உலக தமிழ் மக்களை இணைக்கும் ஒரு இனிய கருத்துக்களமாக மேலும் வளர எனது ஆசிகள் என்றும் இருக்கும்.

உந்த ஆச்சி கேட்க்கும் கேள்விகளுக்கு விடை தரமுடியுமா? யாழ்களக கண்மணிகளே?

நாகரீகம் மிகவும் வளர்ந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் வீரமரணங்களை எப்படி கணிப்பார்களென்றால்...நீங்கள் எப்படி உடன் கட்டை ஏறுவதை எப்படிப்பட்ட முட்டாள் தன முறைகேடுகள் என்பதுபோல கணிப்பான். சிறுமிகளை கல்யாணம் கட்டிவிடும் செயலுடன் ஒப்பிட்டு தூ...வளர்ச்சியடையாத இனமென்று முத்திரை குத்திவிடுவான்.

தாயகத்தில நடைபெற்ற வீரமரணங்களை நீங்கள் சொல்லுறதுமாதிரி கணிப்பானா என்று தெரியாது. ஆனால் கனடாவில கனேடிய இராணுவம் ஆப்கானிஸ்தானுக்குபோய் தேவையில்லாமல் மண்டையை போடுறாங்கள். ஒவ்வொரு கனேடிய இராணுவவீரனுடைய இழப்பையும் கனேடிய ஊடகங்கள் பெரியதோர் தியாகமாகத்தான் கணிப்பீடுசெய்து செய்திகள் வெளியிடுகின்றாங்கள்.

  • 1 month later...

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

ஏன் இவ் இணையத்தளங்களிள் இருந்து செய்திகளை கருத்துக்களத்தில் இணைக்ககூடாது. எவருக்கும் தெரிந்தால் அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

ஏன் இவ் இணையத்தளங்களிள் இருந்து செய்திகளை கருத்துக்களத்தில் இணைக்ககூடாது. எவருக்கும் தெரிந்தால் அறியத்தரவும்.

பேருக்கு ஏற்ற மாதிரி , சரியான கள்ளன் தான் நீங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.