Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்ட வடிவம். புலம்பெயர்ந்த மக்களுக்கானது

Featured Replies

கடந்த காலங்களில் உலகப்பந்தின் ஒவ்வொரு திசையிலும் பல்வெறுபட்ட, பல்வகையான, சிறிய பெரிய அளவிலான போராட்டங்களைச் செய்தும் இந்த உலகத்தின் கண்களைத் திறக்கமடியாமல் போனதையிட்டு எந்தத் தமிழனும் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது. சர்வதேச ஊடகங்களில் எமது போராட்டங்கள் ஏன் நடத்தப்பட்டது என்பதைவிட எப்படி நடத்தப்பட்டது என்பதற்கே முக்கியத்துவம் கூடுதலாக கொடுத்து வெளியிடப்பட்ட செய்திகளால் நாம் பெற்ற நன்மைகள் என்பதைவிட எம்மீதான எதிர்ப்புக்கள் அதிகரித்ததேயன்றி எம் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை என்பது பொதுவான கருத்து.

பிரித்தானியா குறோளிப் பகுதியில் கடந்த 02.05.2009 அன்று அங்குள்ள தமிழர்களால் குறோளிப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர், நகர மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல்துறை பொறுப்பாளர்கள், பிற இனங்களின் தலைவர்கள், உள்ளுர் ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் கலந்துகொண்ட ஒரு விளக்கப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் எதிர் பார்த்த அளவு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் குறொளியில் தமிழர்களின் நிலை, தாயகத்தில் தமிழரின் நிலை, உள்ளுரில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினத்தின் எதிர்காலம் இப்படி பலவிடயங்கள் சம்பந்தமாக கானொளி, புகைப்பட கணணி, செய்தித்தாழ்களின் அதாரங்களுடன் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. இதில் உள்ளுரில் கணிசமானவர்களின் ஆதரவும் அனுதாபமும் கிடைத்தது அத்துடன் உள்ளுர் ஊடகங்கள் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து தமிழரின் பிரச்சனையை வரலாற்றுரீதியான ஆதாரங்களைக் காட்டி வெளியிட்டிருந்தன. தொடர்ச்சியாக பல ஊடகங்களில் பாதிக்கப்பட்ட மக்களினதும் தாயகத்தில் உறவுகளை இழந்த சொந்தங்களினதும் மனதைத் தொடும் கண்ணிர்ப் பேட்டிகளும் வெளியிடப்பட்டது. அதேநேரம் நகராட்சிமன்றத் தலைவரால் நகராட்சி மன்றத்தின் அனுசரணையுடன் இதுபொன்ற நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்படும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டது.

அதற்கமைவாக கடந்த 02.06.2009 அன்று குறோளிப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் அழைப்பின்பேரில் 30 பேர் அடங்கிய தமிழர்களை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள மண்டபத்திற்கு அழைத்துச் சென்று இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவளைத்து அங்கு ஒரு கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது அதனைத்தொடர்ந்து கலந்துரையாடப்பட்டவற்றின் தொகுப்பும் எமது மக்களின் துயரக் கதைகளும் அறிக்கையாக்கப்பட்டு பிரித்தானிய வெளிவிவகார செயலாளருக்கும், பிரதமருக்கும் சமர்ப்பிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு அறிக்கைளின் பிரதிகளும் பங்குபற்றிய அனைவருக்கும் கையளிக்கப்பட்டது.

குறோளி நகரசபைத் தலைவரால் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த 22.06.2009 அன்று நகரசபை மண்டபத்தில் பல்லின தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல்துறை பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கு ஒளுங்குசெய்யப்பட்டு இருந்தது இதில் 05க்கு மேற்பட்ட இனங்களின் பிரதிநிதிகள் கலந்த கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஈழத்தமிழர் பிரசிசனைக்கு மக்கியத்துவம் கொடுத்து கூடதலான நேரம் தமிழர் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களால் எமது வாழ்வுரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் தடுப்புமுகாம்களில் 300000 க்கு மேற்பட்டோரின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது சம்பந்தமான விளக்கங்கள் கானொளி புகைப்படங்கள் செய்தித்தாழ்களின் உதவியுடன் செய்யப்பட்டது. இதில் பல்வெறு தரப்பினரிடையே பல சூடான விவாதங்களும் இடம்பெற்றது.

இதைத்தொடந்து பல்வெறு தரப்பினராலும் தமிழரின் உரிமைகள் அவர்களுக்கான தீர்வுகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு பலரின் ஆதரவும் அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து எமது பிரச்சனைகள் சப்பந்தமாக விளக்கங்கள் கோரப்பட்டது அத்துடன் குறோளிப்பகுதியில் உள்ள தமிழர்களின் இரத்த உறவுகள் காணாமல் போயிருந்தால் குறோளி காவல் நிலையத்தில் பதிவுசெய்யுமாறு காவல்துறை பொறுப்பாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடர்து நகரமன்றக் கூட்டம் நடைபெறும்போது மாதம் ஒருமுறை தமிழர் பிரதிநிதிகளையும் அழைப்பது என்று உறுதியும் வளங்கப்பட்டள்ளது.

இன்நிலையில் இப்போது குளோளிப் பகுதியில் தமிழர்ககுக்கான அங்கீகாரமும் வீதிகளிலே காணும் தமிழர்களைக்கூட பலர் மறித்து தமிழர் நிலைமைகளை ஆவலாகவும் ஆர்வத்துடன் அறிந்து கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

எனவே இப்படியான போராட்ட முறைமைகளை அதாவது கிராம மட்டத்திலிருந்து நகரம்வரைக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் தொடர்ச்சியாகச் செய்வதன்மூலம் எமது இனத்தின் விடுதலையை அடைவதற்கு கூடுதலான பங்களிப்பைச் செய்யமுடியும் என்பது எனது எதிர்பார்ப்பு.

சிலவேளை இப்படியான நிகழ்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் அதுசம்பந்தமாக அறிக்கைகளை ஊடகங்கள் மூலம் வெளியிட்டால் புலம்பெயர்து வாழும் எம் உறவுகளுக்கு கூடதலான ஊக்கத்தைக் கொடுக்கும்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.