Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் பெற்றோர் மீது வழக்கு: இலங்கை திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாகவும் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

'பிரபாகரன் பெற்றோர் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை- வள்ளிப்புரம் பார்வதி ஆகியோர் எம்மிடம் சரணடைந்துள்ளனர். வன்னியில் பொதுமக்களுடன் இணைந்து படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு இவர்கள் வந்துவிட்டனர்' என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர்கள் படைக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்த தேதி குறித்தோ, பிரபாகரன் 'மரணம்', அவரது மனைவி- பிள்ளைகள் பற்றியோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1924ம் ஆண்டு சிங்கபூரில் பிறந்தவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை. அங்கு தபால் துறையில் ஊழியராக பணியாற்றிய பின்னர், 1947ம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். இலங்கை அரசில், யாழ்ப்பாணம் நிலவள அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

நீண்டகாலம் திருச்சியில் தங்கியிருந்த வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதியும் சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போர் உக்கிரமடைந்த தருணத்தில் தன் மகன் பிரபாகரனுடன் இருக்க விரும்பி வன்னிக்குச் சென்றுவிட்டனர்.

பிரபாகரன் பெற்றோர் மீது எந்த போர் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் போராளிகளுக்கு உதவியவர்கள் என்ற பெயரில் புதிதாக வழக்குத் தொடர இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது.

- தட்ஸ் தமிழ்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 29, ஜூன் 2009 (12:33 IST)

பிரபாகரன் பெற்றோர் மீது வழக்கு: இலங்கை திட்டம்

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்ததாக கூறி பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.

தற்போது வவுனியா அகதிகள் முகாமில் தனித்து வைக்கப்பட்டுள்ள வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாளும் விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லவுள்ளனர். அங்கு கொண்டு செல்லப்பட்டதும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாம்.

இருவர் மீதும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும் பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.

நக்கீரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.