Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு

[வியாழக்கிழமை, 02 யூலை 2009, 07:49 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளுமா என்பது இன்று வியாழக்கிழமை காலை வரையில் கேள்விக்குறியாக இருந்த நிலையில் கூட்டமைப்பின் 22 உறுப்பினர்களில் எட்டுப் பேர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை மகிந்தவின் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட 14 உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதில் பெரும்பாலானவர்கள் நாட்டில் இருக்கவில்லை எனவும், அவர்கள் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். மாவட்ட உறுப்பினர்களான என்.சிறீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், வன்னி மாவட்ட உறுப்பினர்களான சிவநாதன் கிசோர், விநோதாரலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், த.கனகசபை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம், தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜனாப் முகமத் இமாம் ஆகிய எட்டு உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருகோணமலையில் தங்கியிருக்கும் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் நிலை தொடர்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியமாக தனது கவனத்தைச் செலுத்தியது.

இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இவ்வாறு துரிதமாக அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவு கிடைக்கும் எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளையில் இன்றைய கூட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டமை நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நல்லிணக்கத்துடனான தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது எனத் தெரிவித்தார்.

வடபகுதிப் போரினால் சேதமுற்ற பிரதேசங்களை மறுசீரமைத்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுதல் போன்ற விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்த அமைச்சர் அநுரா பிரிதயதர்சன யாப்பா, நல்லெண்ணத்தையும், அபிவிருத்தியையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கும் அனைத்துக்கட்சிகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு

[வியாழக்கிழமை, 02 யூலை 2009, 07:49 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளுமா என்பது இன்று வியாழக்கிழமை காலை வரையில் கேள்விக்குறியாக இருந்த நிலையில் கூட்டமைப்பின் 22 உறுப்பினர்களில் எட்டுப் பேர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை மகிந்தவின் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட 14 உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதில் பெரும்பாலானவர்கள் நாட்டில் இருக்கவில்லை எனவும், அவர்கள் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். மாவட்ட உறுப்பினர்களான என்.சிறீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், வன்னி மாவட்ட உறுப்பினர்களான சிவநாதன் கிசோர், விநோதாரலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், த.கனகசபை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிtnaandpillaiyaan.jpgங்கம், தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜனாப் முகமத் இமாம் ஆகிய எட்டு உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருகோணமலையில் தங்கியிருக்கும் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் நிலை தொடர்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியமாக தனது கவனத்தைச் செலுத்தியது.

இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இவ்வாறு துரிதமாக அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவு கிடைக்கும் எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளையில் இன்றைய கூட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டமை நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நல்லிணக்கத்துடனான தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது எனத் தெரிவித்தார்.

வடபகுதிப் போரினால் சேதமுற்ற பிரதேசங்களை மறுசீரமைத்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுதல் போன்ற விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்த அமைச்சர் அநுரா பிரிதயதர்சன யாப்பா, நல்லெண்ணத்தையும், அபிவிருத்தியையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கும் அனைத்துக்கட்சிகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

tnaandpillaiyaan2.jpgtnaandpillaiyaan3.jpgtnaandpillaiyaan4.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.